search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரவேற்பு"

    • பண்ருட்டி காந்தி ரோடு வழியாக இந்து மக்கள் கட்சியினரும் ஊர்வலமாக புறப்பட்டனர்.
    • பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரி வித்தும், இனிப்புகளும் வழங்கினார்கள்.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் நாடு முழு வதும் வெகு விமரிசையாக நடந்தது. கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நகரம் மற்றும் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடை பெற்றது. இதனை தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. பண்ருட்டி ராஜாஜி சாலை யில் இருந்து இந்து முன்னணி யினரும், பண்ருட்டி காந்தி ரோடு வழியாக இந்து மக்கள் கட்சியினரும் ஊர்வலமாக புறப்பட்டனர்.

    கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு குறித்து இஸ்லாமிய, கிறிஸ்துவ பெரியோர்களை அழைத்து சமூக நல்லிணக்கத்திற்கு முன்மாதிரி மாவட்டமாக கடலூர் மாவட்டம் இருக்க மதத் தலைவர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் எனவும் இளை ஞர்களுக்கு சரியான வழிகாட்டலை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறி யிருந்தார். 

    இதனை தொடர்ந்து பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சபியுல்லா, இஸ்ஸாமிய, கிறிஸ்தவ மதத்தை சார்ந்த பெரியோர்கள் மத நல்லிணக் கத்தை போற்றும் வகையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது வந்த இந்து அமைப்பினரை வரவேற்று, அவர்களுக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரி வித்தும், இனிப்புகளும் வழங்கினார்கள்.பண்ருட்டியில் நடந்த இந்த நிகழ்ச்சி மத நல்லிணக் கத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது என பொது மக்கள் அனைவரும் பாராட்டினர்.

    • கீரனூரில் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மலர்தூவி வரவேற்பு
    • என்ஜின் டிரைவர் மற்றும் ஊழியர்கள், ஸ்டேசன் மாஸ்டர் ஆகியோருக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    திருச்சியில் இருந்து ராமேசுவரம் சென்று வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கீரனூரில் நின்று சென்று வந்தது. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் பயனடைந்து வந்தனர். கொரோனா காலகட்டத்தில் இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ரெயில் இயக்கப்பட்ட அட்டவணையில் கீரனூரில் நிறுத்தம் இல்லை என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அனைத்து கட்சிகளும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முதல் கீரனூர் ரெயில்வே நிலையத்தில் ஒரு நிமிடம் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும் என அறிவிப்பை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டது. இதையடுத்து மகிழ்ச்சிடைந்த பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் ரெயில் நிலையத்தில் திரண்டனர். இதையடுத்து அந்த ரெயில் கீரனூர் நிலையம் வந்ததும் மலர் தூவி வரவேற்றனர். மேலும் என்ஜின் டிரைவர் மற்றும் ஊழியர்கள், ஸ்டேசன் மாஸ்டர் ஆகியோருக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். பின்னர் புதுக்கோட்டை வரை டிக்கெட் எடுத்து அவர்கள் ரெயிலில் பயணம் செய்தனர்.

    • சிவப்பு மற்றும் ரோஜா வண்ணப் பூக்களே அதிகமாக பயிரிடப்படுகிறது
    • விவசாயிகள் ஈடுபடும் போது வரத்து அதிகரித்து விலை குறைவது இயல்பாகும்.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி பேரூராட்சியில் கண்ணைக் கவரும் விதத்தில் கோழிக்கொண்டைப் பூக்கள் காட்சியளிக்கிறது. பொதுவாக கோழிக்கொண்டைப் பூக்கள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ரோஜா வண்ணங்களில் பூக்கும். ஆனால் சிவப்பு மற்றும் ரோஜா வண்ணப் பூக்களே அதிகமாக பயிரிடப்படுகிறது. வாசமில்லாத மலர் என்றாலும் கண்ணைக் கவரும் இதன் அழகு மற்றும் 8 நாட்கள் வரை வாடாத தன்மை ஆகியவையே இந்த பூக்களை அதிகம் பயன்படுத்துவதற்குக் காரணமாகிறது.

    இந்த கோழிக்கொ ண்டைப் பூக்களை மாலையில் வைத்துக் கட்டும் போது ரோஜாப்பூக்களின் தோற்றத்தைத் தருகிறது. இதனாலே இந்த பூக்களுக்கு எல்லா சீசனிலும் வரவேற்பு உள்ளது. பண்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரேவிதமான பயிர் சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபடும் போது வரத்து அதிகரித்து விலை குறைவது இயல்பாகும். இதனால் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை தொடர்கிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இவை மழைக்காலம், கோடைக் காலம், குளிர் காலம் என எல்லா பருவங்களுக்கும் ஏற்றதாக உள்ளது.

    • பரமக்குடிக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பரமக்குடி

    பரமக்குடியில் 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அன்று தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இமானு வேல்சேகரன் நினை விடத்தில் அஞ்சலி செலுத்து கின்றனர்.

    அஞ்சலி செலுத்த வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான செயற்குழு ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் வரவேற்று பேசினார். இதில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் மரிச்சிகட்டியில் இருந்து பரமக்குடி வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். இதில் பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் செய்ய வேண்டும். அதே போல் இளைஞரணி மாநில மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா ரகு, பரமக்குடி நகர் மன்றத் தலைவர் சேது கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் அருளாந்து, வக்கீல் பூமிநாதன், போகலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் வாசு தேவன், ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, சக்தி, அண்ணா மலை, மாவட்ட வக்கீல் பிரிவு அமைப்பாளர் வக்கீல் கருணாநிதி, வக்கீல் கள் கதிரவன், குணசேகரன், இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, துணை அமைப்பாளர்கள் குமரகுரு, சண்.சம்பத்குமார், சத்தி யேந்திரன், பொறியாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர பாண்டியன், பகுத்தறிவு பாசறை பிரிவு அமைப்பாளர் செந்தில் செல்வானந்த், விவசாய அணி அமைப்பாளர் அய்ய னார், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி துரைமுருகன், கவுன்சிலர் நதியா மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர்.
    • 4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.

    கடலூர்:

    உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரியில் இருந்து நடைபயணமாக ராமேஸ்வரம் செல்லும் சிவனடியார் குழுவினர் நேற்று பண்ருட்டிக்கு வருகை தந்தனர். நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர். பண்ருட்டி- சென்னை சாலை எல்.என்.புரத்தில் சிவ தொண்டர் ஒருவர் வீட்டில் இரவு தங்கி சிவபூஜைசெய்தனர். பின்னர் அதிகாலை 3 மணி அளவில் குளித்துபூஜை முடித்து4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.

    • திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
    • அமைச்சர் கே.என்நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    திருச்சி:

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் இல்ல விசேஷங்களில் கலந்து கொள்கிறார்.

    முதல் நாள் நிகழ்வாக நாளை (25-ந் தேதி) திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    அதன் பின்னர் பிற்பகல் நாகை மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை துறை வாரியாக ஆய்வு செய்கிறார்.

    2-வது நாள் 26-ந் தேதி ( சனிக்கிழமை) காலையில் நாகை மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் 27-ந் தேதி நாகை எம்பி செல்வராஜ் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொள்கிறார்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.

    அவருக்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    • ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியானது.
    • சாய்பாபா கோவில் ஆகியவற்றில் டிக்கெட் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    கோவை,

    நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியானது. இதனையொட்டி கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி என்.சத்தியமூர்த்தி தலைமையில் ஜெயிலர் படம் வெற்றி பெற வேண்டி கோவையில் உள்ள ராகவேந்திரா கோவில் மற்றும் சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் ஆகியவற்றில் டிக்கெட் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு கிராஸ்கட் ரோட்டில் உள்ள கங்கா, யமுனா, காவேரி தியேட்டரில் ஜெயிலர் படம் திரையிடப்பட்டது. ரசிகர்கள் ஏராளமானோர் படத்தை உற்சாகமாக கண்டு களித்தனர்.படம் முடிந்ததும் தியேட்டர் முன்பு கோவை மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி என்.சத்தியமூர்த்தி தலைமையில் 25 கிலோ கேக் வெட்டி ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் ராஜேஷ் குமார், பாபு, செந்தில் குமார், பாலாஜி, குபேரன் சுரேஷ், நாகராஜ், செந்தில், ரஜினி குணா, ஸ்ரீனிவாசன் மணிவண்ணன், பட்டணம் ரவி, வெங்கடாசலம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஐதராபாத்தில் இருந்து மதுரை வழியாக 10-ந்தேதி முதல் கொழும்புவுக்கு விமானம் இயக்கப்படுகிறது.
    • மதுரையில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு இரவு  7.25 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.

    மதுரை

    மதுரை விமான நிலையத் தில் துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளி–நாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு உள் நாட்டு விமான சேவை–யும் அளிக்கப்பட்டு வருகி–றது.

    குறிப்பாக மதுரை விமான நிலையத்தை பொருத்தவரை இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர்இந்தியா ஆகிய 3 விமான நிறுவனங் கள் மட்டுமே தொடர்ந்து சேவைகைைள வழங்கி வருகிறது. இதில் உள்நாட்டு, வெளிநாட்டு சேவைகளை ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங் களும், இண்டிகோ விமான நிறுவனம் உள்நாட்டு சேவையையும் வழங்கி வந் தது.

    இதில் ஸ்பைஸ்ஜெட் நிறு–வனம் கொரோனாவிற்கு பிறகு வெளிநாட்டு சேவை மட்டுமே வழங்கி வந்த நிலையில், தற்போது மீண் டும் மதுரையில் இருந்து சென்னைக்கு விமான சேவையை ெதாடங்கியுள் ளது. இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

    மதுரையில் இருந்து சென்னை வழியாக கோவா செல்வதற்கு விமான சேவையை அளிக்க தற் போது ஸ்பைஸ்ஜெட் நிறுவ–னம் திட்டமிட்டுள்ளது. இன்று (8-ந்தேதி) முதல் ஸ்பைஸ்ஜெட்-2981 விமா–னம் மதுரையிலிருந்து மதி–யம் 12.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்று, சென் னை–யில் இருந்து கோவா–விற்கு மாலை 4 மணிக்கு சென்றடையும்.

    பின்னர் கோவாவில் இருந்து ஸ்பைஸ்ஜெட்-2983 விமானம் மாலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்து, சென்னையில் இருந்து இரவு 8.10 மணிக்கு மதுரை வந்த–டையும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

    மேலும் நாளை மறுநாள் (10-ந்தேதி) முதல் வருகிற 19-ந்தேதி வரை ஸ்பைஸ் ஜெட்-2705 விமானம் ஐத–ராபாத்தில் இருந்து தினமும் காலை 10.35 மணிக்கு புறப் பட்டு மதுரை விமான நிலை–யத்திற்கு பகல் 12.15 மணிக்கு வந்தடையும். பின்னர் அதே விமானம் மதுரையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு 2.25 மணிக்கு கொழும்பு சென்றடையும். அதே போல் கொழும்புவி–லிருந்து பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு 4.35 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது.

    பின்னர் மதுரையில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு ஐதராபாத் சென்ற–டையும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகள் ஆதரவை பொறுத்து இதே நிலை நீடிக்கும் என ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தெரிவித் துள்ளது.

    • சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி தலைமையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
    • சுற்றுப்பயணத்தின் போது பெண்கள் இளைஞர்கள் எழுச்சியுடன் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    பரமக்குடி

    மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாநில நிர்வாகி சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி தலைமை–யில் என் மண், என் மக்கள் நடைபயணமாக பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகு–திக்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு வெடி வெடித்து, மேல தாளம் முழங்க, மாலை, சால்வை அணி–வித்து கும்ப மரியாதை–யுடன் வரவேற்பு அளிக்கப் பட்டது.

    பின்னர் வோந்தோனி ரோட்டில் அமைக்கப்பட்டி–ருந்த பாரதிய ஜனதா கட்சி கொடியை மாநிலத் தலை–வர் அண்ணாமலை ஏற்றி வைத்தார். பின்னர் ராஜாஸ் சேதுபதி தலைமையில் மாற்று கட்சியில் இருந்து விலகி 3,000 பேர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணா–மலை முன்னிலையில் தங் களை இணைத்துக் கொண்ட–னர்.

    வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் மத்திய அரசின் 9 ஆண்டு–கால சாதனைகளை நேரடி–யாக தமிழ க மக்களின் மனதை கவரும் வகையில் தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழகம் முழுவ–தும் நகர் பகுதிகளில் நடந்து சுமார் 1,700 கிலோ மீட்டர் தூரமும் மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்து மூலம் சுமார் 900 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை செல் கிறார்.

    ஐந்து கட்டங்களாக 168 நாட்களில் 236 தொகுதிக–ளுக்கும் செல்லும் வகையில் யாத்திரை தொடங்கி நடை–பெற்று வருகிறது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணத்தின் போது பெண்கள் இளைஞர்கள் எழுச்சியுடன் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    • மீன்சுருட்டி தடகள வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
    • சர்வதேச போட்டியில் 3 தங்கம் வென்றுள்ளார்

     அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்து சேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்,உமாபிரியா தம்பதியின் மகன் ஆகாஷ்.தடகள விளையா ட்டுகளில் தீவிர பயிற்சி மேற்கொண்ட இவர், மாநில அளவிலான போட்டிக்கு தயாரானார். நிகழாண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்ப தக்கங்கள் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தை வென்ற அவர், தொடர்ந்து நேபாளம், பொக்காரா சர்வதேச தடகள ஸ்டேடியத்தில் இந்தோ-நேபால் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு சார்பில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் கலந்து கொண்டார்.போட்டிகளில் இந்தியா, நேபால், இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த வீரர்க ள்கலந்து கொண்டனர். இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு ஆகாஷ் தங்கப் பதக்கங்களை வென்றார்.

    இந்நிலையில், பதக்கம் வென்ற ஆகாஷ், செந்த ஊருக்கு திருபினார். அங்கு அவருக்கு வர்த்தக சங்கத் தலைவர் ராஜா ஜெயராமன் தலைமையில் கிராம மக்கள் பட்டாசு வெட்டித்தும், பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் சொந்த கிராமமான முத்துசேர்வா மடத்துக்கு சென்றார்.அங்கு அவரது உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளி த்தனர். பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய ஆகாஷ், இந்திய ராணுவத்தில் பணிபுரிவதே தனது வாழ்நாள் லட்சியமாகும். இதற்காக தொடர்ந்து உடல் தகுதி மற்றும் திறன் தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக பயிற்சி எடுத்த போது விளையா ட்டில் அதிக ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து முயற்சி செய்ததன் பலனாக மாநில தேசிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சர்வதேச போட்டியிலும் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை பெற்று திரும்பியு ள்ளேன். எதிர்காலத்தில் ஆசியப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தயாராகி வருகிறேன் என்றார்.

    ஊட்டி தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

    இதில் தேசிய நிர்வாகிகள், மாநில அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஊட்டி வந்திருந்தார். அவருக்கு போஜராஜ் தலைமையில் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அப்போது மோகன்பகவத்துக்கு பாரம்பரிய முறைப்படி படுகர் உடையும் அணிவிக்கப்பட்டது.

    • முதல்வர் வரவேற்பில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள வேண்டும்.
    • மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்டச் செயலாளர் மணிமாறன் பேசினார்.

    திருமங்கலம்

    மதுரையில் நாளை மறுநாள் (ஜூலை 15-ந் தேதி) பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தினை திறப்பு விழா நடைபெறு–கிறது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலகத் தினை திறந்து வைக்கிறார். மதுரை வரும் முதல்வரை வரவேற்பது தொடர்பாக திருமங்கலம் தி.மு.க. அலுவலகத்தில் நேற்று தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை–பெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசியதாவது:-

    முதல்வர் வரவேற்பில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அதிகளவில் வந்து முதலிடத் தினை பிடிக்கவேண்டும். இன்னும் 30 ஆண்டுகள் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி–தான் நடைபெறும் அந்தள–விற்கு பல்வேறு நலத்திட்டங் களை முதல்வர் செய்து வருகிறார். கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் சால்வை, வேட்டி, பொன்னாடையை கட்சியினர் தவிர்த்து முத–ல் வருக்கு புத்தங்களை தர–வேண்டும்.

    நாம் தரும் புத்தகங்கள் நூலகத்தில் இடம் பிடித்து பொதுமக்களுக்கு பயன் தரும். மேலும் முதல்வர் வரவேற்பில் 50 ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் திரண்டு வரவேற்பு அளிக்க–வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி–னார்.

    இந்த கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான வாக்குறுதியான மகளிர் உரிமைத்தொகையை அறி–வித்துள்ள தமிழக முதல் வருக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறை–வேற்றப்பட்டது.

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங் கம், துணை செயலாளர் லதா அதியமான், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, தங்கபாண்டி, ஆலம்பட்டி சண்முகம், ராமமூர்த்தி, மதன்குமார், நகர செயலா–ளர்கள் ஸ்ரீதர், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா–முத்துக்குமார், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், திருமங்கலம் நகர துணை–செயலாளர் செல்வம், பொருளாளர் சின்னசாமி நகராட்சி கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×