search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐதராபாத்தில் இருந்து மதுரை வழியாக 10-ந்தேதி முதல் கொழும்புவுக்கு விமானம்
    X

    ஐதராபாத்தில் இருந்து மதுரை வழியாக 10-ந்தேதி முதல் கொழும்புவுக்கு விமானம்

    • ஐதராபாத்தில் இருந்து மதுரை வழியாக 10-ந்தேதி முதல் கொழும்புவுக்கு விமானம் இயக்கப்படுகிறது.
    • மதுரையில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு இரவு  7.25 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.

    மதுரை

    மதுரை விமான நிலையத் தில் துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளி–நாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு உள் நாட்டு விமான சேவை–யும் அளிக்கப்பட்டு வருகி–றது.

    குறிப்பாக மதுரை விமான நிலையத்தை பொருத்தவரை இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர்இந்தியா ஆகிய 3 விமான நிறுவனங் கள் மட்டுமே தொடர்ந்து சேவைகைைள வழங்கி வருகிறது. இதில் உள்நாட்டு, வெளிநாட்டு சேவைகளை ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா விமான நிறுவனங் களும், இண்டிகோ விமான நிறுவனம் உள்நாட்டு சேவையையும் வழங்கி வந் தது.

    இதில் ஸ்பைஸ்ஜெட் நிறு–வனம் கொரோனாவிற்கு பிறகு வெளிநாட்டு சேவை மட்டுமே வழங்கி வந்த நிலையில், தற்போது மீண் டும் மதுரையில் இருந்து சென்னைக்கு விமான சேவையை ெதாடங்கியுள் ளது. இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

    மதுரையில் இருந்து சென்னை வழியாக கோவா செல்வதற்கு விமான சேவையை அளிக்க தற் போது ஸ்பைஸ்ஜெட் நிறுவ–னம் திட்டமிட்டுள்ளது. இன்று (8-ந்தேதி) முதல் ஸ்பைஸ்ஜெட்-2981 விமா–னம் மதுரையிலிருந்து மதி–யம் 12.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்று, சென் னை–யில் இருந்து கோவா–விற்கு மாலை 4 மணிக்கு சென்றடையும்.

    பின்னர் கோவாவில் இருந்து ஸ்பைஸ்ஜெட்-2983 விமானம் மாலை 5 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்து, சென்னையில் இருந்து இரவு 8.10 மணிக்கு மதுரை வந்த–டையும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

    மேலும் நாளை மறுநாள் (10-ந்தேதி) முதல் வருகிற 19-ந்தேதி வரை ஸ்பைஸ் ஜெட்-2705 விமானம் ஐத–ராபாத்தில் இருந்து தினமும் காலை 10.35 மணிக்கு புறப் பட்டு மதுரை விமான நிலை–யத்திற்கு பகல் 12.15 மணிக்கு வந்தடையும். பின்னர் அதே விமானம் மதுரையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்பட்டு 2.25 மணிக்கு கொழும்பு சென்றடையும். அதே போல் கொழும்புவி–லிருந்து பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு 4.35 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறது.

    பின்னர் மதுரையில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு ஐதராபாத் சென்ற–டையும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகள் ஆதரவை பொறுத்து இதே நிலை நீடிக்கும் என ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் தெரிவித் துள்ளது.

    Next Story
    ×