என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிவனடியார்"
- சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர்.
- சிவபூதங்களின் தலைவராக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர்.
விறன்மிண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். அடியார்கள் மீது அன்பும், பக்தியும் விறன்மிண்ட நாயனார் கொண்டிருந்ததால், சிவபூதங்களின் தலைவராக சிவபெருமானால் நியமிக்கப்பட்டவர்.
சேரநாடு என்று அழைக்கப்படும் மலைநாட்டில் திருச்செங்குன்றூர் என்ற ஊரில் வேளாளராக அவதரித்தவர் விறல்மிண்ட நாயனார். திருச்செங்குன்றூர் நீர் வளமும், நில வளமும், மலை வளமும் நிரம்பி வேளாண்மைக்கு சிறந்ததாக விளங்கியது.
விறன்மிண்டர் திருநீறும், உருத்திராக்கமும் அணிந்த சிவப்பரம்பொருளிடம் மாறாத பக்தி கொண்டிருந்தார். சிவனிடத்தில் மட்டுமில்லாது சிவனடியார்களிடத்தும் பெரும் பக்தியும், மரியாதையையும் கொண்டிருந்தார்.
அவர் இறைவழிபாட்டிற்கு சிவாலயம் செல்லும்போது ஆலயத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் சிவனடியார்களை வணங்கி, பின்னர் ஆலயம் சென்று இறைவனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இறைவனுடைய திருவருள் சிறப்பை எல்லோரும் உணரும்படி தம்முடைய ஒழுக்கத்தின் சிறப்பால் வெளிப்படுத்துபவர்கள் சிவனடியார்கள். ஆதலால் அரனின் அடியார்களின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் விறல்மிண்டர்.
ஒருசமயம் சேரநாட்டு திருத்தலங்களை வணங்கியபின், சோழநாட்டு திருதலங்களை வழிபடும் நோக்கில் சோழநாட்டிற்கு வந்திருந்தார் விறன்மிண்டர்.
ஒவ்வொரு திருத்தலமாக வழிபட்டு வந்த நிலையில் திருவாரூரை அடைந்தார் விறன்மிண்டர்.
திருவாரூரில் சிவனடியார்கள் குழுமி இருக்கும் இடத்திற்குப் பெயர் தேவாசிரியர் மண்டபம். அம்மண்டபம் தியாகேசர் கோவிலுக்கு முன்புறம் அமைந்திருந்தது.
திருவாரூரை அடைந்த விறன்மிண்டர் முதலில் தேவாசிரியர் மண்டபத்தில் இருந்த அடியவர்களை வணங்கி மரியாதை செய்துவிட்டு கோவிலுக்குள் சென்று தியாகேசரை வழிபட்டார்.
பின்னர் மீண்டும் தேவாசிரிய மண்டபத்திற்குள் வந்து சிவனடியார்களிடம் அளாவிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வன்தொண்டரான சுந்தரர் வீதிவிடங்கரை வழிபட வந்தார். தேவாசிரிய மண்டபத்தில் இருந்த சிவனடியார்களை மனதினால் வழிபட்டுவிட்டு ஒதுங்கி சென்றார்.
அதனைக் கண்ட விறன்மிண்டர் அருகில் இருந்தோரிடம் யார் என விசாரித்தார். அவரும் ஆரூர் பெருமானின் அருளால் பரவை நாச்சியாரை மணந்து இங்கே இருக்குமாறு பணிக்கப்பட்ட சுந்தரர். இறைவனை வழிபடத் திருக்கோவிலுக்குச் செல்கிறார் என்று கூறினார்.
"இவ்வளவு பெரியவர் அடியார் திருக்கூட்டத்தை வணங்காது செல்கிறாரே? இவரே இப்படிச் சென்றால் அடியார்களிடம் யார் மதிப்புடன் நடப்பார்கள்? அடியார்களை மதிக்காமல் செல்லும் வன்தொண்டரைப் புறக்கணிக்கிறேன்" என்றார் விறல்மிண்டர். "அவர் ஆரூரானின் அருளுக்குப் பாத்திரமானவர்" என்றனர் அருகில் இருந்தவர்கள்.
விறன்மிண்டர் கூறியவை யாவற்றையும் கேட்ட சுந்தரர் 'இறைவனை வழிபடுவது எளிது. அடியர்களை வழிபடுவது அரிது.
அடியவர்களை வழிபட தகுதி மிகுதியானதாக இருக்க வேண்டும். ஆதலால்தான் அடியவர்களை நான் மனதிற்குள் வழிபட்டு ஒதுங்கிச் சென்றேன்' என மனத்திற்குள் கவலை கொண்டவராக தியாகேசரரை அடைந்தார்.
"இறைவா, நான் அடியர்களுக்கு அடியவானாகும் நிலையை எனக்கு அருள் செய்ய வேண்டும்" என்று மனதிற்குள் பிராத்தித்தார் சுந்தரர்.
அதனைக் கண்ட விறன்மிண்ட நாயனார் மகிழ்ந்தார். பின் பலகாலம் சிவதொண்டுகள் புரிந்து இறுதியில் சிவனை அடைந்து சிவனாரின் பூதகணங்களின் தலைவரானார்.
விறன்மிண்டர் சுந்தரரையும், வீதிவிடங்கரையும் புறக்கணித்தால் திருத்தொண்டர் தொகையை சுந்தரர் பாடினார். பெரியபுராணம் என்னும் மரத்திற்கு திருத்தொண்டர் தொகை விதை எனில் விறன்மிண்டரின் செயல் அதற்கு மழை என்றால் மிகையாகாது.
விறல்மிண்ட நாயனார் குருபூஜை சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரமான இன்று கொண்டாடப்படுகிறது.
- நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர்.
- 4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.
கடலூர்:
உத்தரகாண்ட் மாநிலம் கங்கோத்திரியில் இருந்து நடைபயணமாக ராமேஸ்வரம் செல்லும் சிவனடியார் குழுவினர் நேற்று பண்ருட்டிக்கு வருகை தந்தனர். நடைபயண குழுவினரை திருவதிகை திருநாவுக்கரசர் திலகவதியார் அன்னதான திருதொண்டு சிவனடியார்கள் வரவேற்ற னர். பண்ருட்டி- சென்னை சாலை எல்.என்.புரத்தில் சிவ தொண்டர் ஒருவர் வீட்டில் இரவு தங்கி சிவபூஜைசெய்தனர். பின்னர் அதிகாலை 3 மணி அளவில் குளித்துபூஜை முடித்து4 மணி அளவில் நடை பயணத்தை தொடர்ந்தனர்.
- இக்கோவிலுக்கு சுமார் 25 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளதாக தெரிகிறது
- இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் நிர்வாகம் வந்து இருவேளை பூஜை நடந்து வருகிறது.
கன்னியாகுமரி :
தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் கோட்டை வளாகத்தில் உள்ள பாலசுப்பிரமணியம் சுவாமி கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம் போன்ற திருவிழா நாட்களில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். தைப்பூசம் அன்று காவடி எடுத்து பக்தர்கள் தெருபவனி வருகின்றனர்.
இக்கோவிலுக்கு சுமார் 25 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளதாக தெரிகிறது. மன்னர்கள் காலத்தில் பிரதிநிதிகள் மேற்பார்வை யில் கோவில் நிர்வாகம் திறம்பட செயல்பட்டு வந்தது. பிரதிநிதிகள் வாரிசுகள் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்த நிலையில் கோவில் நிர்வாகத்தில் சிக்கல் வந்ததாலும் கொரோனா காலத்தில் தொடர்ந்து கோவில் மூடப்பட்டதாலும் பொதுமக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் நிர்வாகம் வந்து இருவேளை பூஜை நடந்து வருகிறது.
இந்த நிலையில் கோவில் குளத்தை அப்பகுதியில் உள்ள சிலர் மண் கொட்டி மூடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விஸ்வாமித்திரர் சைவ சபாவின் திருநீலகண்டர் உழவாரப்பணி மகான் மணிகண்டன், உழவாரப்பணி அமைப்பு சார்பில் சிவனடியார்கள் கோவில் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்தனர்.
குளத்தில் கன்னிமூலையில் விநாயகர் சிலை இருந்தது கண்டு அதனை சுத்தம் செய்து அதற்கு பால், தேன், நெய், இளநீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. உழவாரப்பணி அமைப்பு சிவனடியார்கள் முயற்சியினை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டினர்.
- சிவனடியார்கள், யாராவது ஒருவரை குருவாக ஏற்று, சிவவழிபாடுநடத்தி வர வேண்டும்.
- தினமும் வழிபாடு நடத்தி, ஆடல்வல்லான் அம்பலவாணனின் அருளை பெறலாம்.
திருப்பூர்:
திருப்பூர் திருமுறை சைவநெறி அறக்கட்டளை சார்பில் சுந்தரமூர்த்தி நாயனாரின், தேவார முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.நிறைவு நாளன்று ஸ்ரீசிவாக்கர தேசிக சுவாமி பேசியதாவது:-
சிவனடியார்கள், யாராவது ஒருவரை குருவாக ஏற்று, சிவவழிபாடுநடத்தி வர வேண்டும்.குருவருள் இருந்தால் மட்டுமே திருவருளை பெற முடியும். நாயன்மார்கள், ஞானிகள், சித்தர்களில் யாராவது ஒருவரை, மானசீக குருவாக நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.யார் ஒருவரையும் பார்க்கும் போது, எண்ணம், செயல், சொல் ஆகியவற்றை பிரயோகிக்க முடியாத நிலை வருமானால், அவரே உமது குரு. ஏதாவது பலனை எதிர்பார்த்து, தேவார திருமுறைகளை பாடக்கூடாது.எதிர்பார்ப்பின்றி, இறைபக்தியுடன் பதிங்களை பாடுவதால் அனைத்துமே கிட்டும். பட்டியல் போட்டு கோரிக்கையை வைப்பதால், அவ்வளவு எளிதாக இறைவன் இரக்கம் காட்டுவதில்லை.
ருத்ராட்சம் அணிந்து சிவனடியாருக்கு தொண்டு செய்வதே சிவநெறி. தொண்டு செய்வதில், சிறியது - பெரியது என்பது இல்லை. மானசீகமாக தொண்டாற்றுபவரே உண்மையான சிவனடியார். ஞானசம்பந்தரும், ராமானுஜரும் ஜாதிகளை கடந்து, சமயங்களை வளர்த்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புரட்சியாளராக இருந்தனர்.சைவ நெறியில் இருப்பது போல் மற்ற சமயங்களில் உள்ள நல்ல வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஸ்ரீநடராஜர் படத்தை வீடுகளில் வைத்து தினமும் வழிபாடு நடத்தி, ஆடல்வல்லான் அம்பலவாணனின் அருளை பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்