search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் குளம்"

    • பல ஆண்டுகளாக கோவில் குளத்தில் நீரின்றி தரை மட்டம் தெரியும் அளவிற்கு இருந்தது.
    • பக்தர்கள் முன்னாள் கவுன்சிலர் வே.வாசுவுக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

    வில்லிவாக்கம்,டிச.13-

    அயனாவரம் சயானி பஸ் நிறுத்தம் அருகே உள்ளது அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் கோவில் எதிர் திசையில் சுற்றிலும் குடி யிருப்புகளுக்கு மத்தியில் பரந்து விரிந்து உள்ளது. பல ஆண்டுகளாக கோவில் குளத்தில் நீரின்றி தரை மட்டம் தெரியும் அளவிற்கு இருந்து முற்றிலும் நீர்வரத் தும் குறைந்து இருந்தது. இது குறித்து அயனாவரம் பகுதியில் உள்ள பல்வேறு திருக்கோவில் குளங்களை பராமரித்து வரும் தி. மு.க. பகுதி செயலாளரும் மலர் டிரஸ்ட் நிறுவனரும் முன்னாள் கவுன்சிலருமான வே.வாசுவின் கவனத்துக்கு பக்தர்கள் கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தனது சொந்த நிதியிலிருந்து சென்னை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூபாய் 11, 45,970 (11லட்சத்து 45 ஆயிரத்து 970 ரூபாய்) மதிப்பில் சாலையின் மேற்குப் பகுதியில் இருந்து 150 மீட்டர் நீளத்திற்கு 3 அடி அகலம் 3 அடி ஆழத் திற்கு சொந்த பணத்தில் மழைநீர் கால்வாய் அமைத்து சாலையோரம் ஓடும் மழை நீரினை குளத்திற்கு பைப் மூலம் கொண்டு செல்லும் வகையில் பணியினை நடத்தி முடித்தார். இதன் காரணமாக கடந்த வாரம் மிக்ஜாம் புயலின் தாக்கத் தால் பெய்த கனமழையால் சாலை ஓரத்தில் இருந்த மழை நீர் அனைத்தும் குளத்திற்கு சென்றது. இதையடுத்து சுமார் 30 அடி ஆழத்திற்கு குளம் முழுவதும் மழை நீர் நிரம்பி சுற்றி மழை நீரால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன் மூலம் அந்த பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் நிலத்தடி நீர் உயரும். இதனை தொடர்ந்து

    75 ஆண்டுகளுக்கு பிறகு காசி விஸ்வநாதர் கோவில் குளத்தில் மழை நீரை பார்த்து மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் முன்னாள் கவுன்சிலர் வே.வாசுவுக்கு பாராட்டுகளையும் நன்றி களையும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தி.மு.க. வில்லிவாக்கம் கிழக்கு பகுதி செயலாளரும் மலர் டிரஸ்ட் நிறுவனருமான வே.வாசு கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக நீர் இல்லாமல் இருந்த இந்த கோவில்குளத்தை நாங்கள் சரி செய்ததால் தற்சமயம் பெய்த பலத்த மழையால் 30 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி உள்ளது. இதனை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் குளத்தில் மழை நீர் தேங்கும் வகையில் கிழக்குப் பகுதியில் இருந்து 250 மீட்டர் அளவிற்கு மழைநீர் வடிகால் அமைத்து கிழக்குப் பகுதியில் தேங்கும் மழை நீரை குளத்திற்குள் விடும் பணிகள் விரைவில் தொடங்கும். காசி விசுவநாதர் கோவில் நிர்வாகத்தின் கீழ் வரும் இந்த குளத்தினை நாங்கள் சீர் செய்து விட்டோம். ஆனால் கோவில் நிர்வாகத்தினர் கோவில் குளத்தினை முறையாக பராமரிக்காத காரணத்தினால் சுற்றி உள்ள மரத்தில் உள்ள கழிவுகள் அனைத்தும் குளத்தில் மிதிக்கிறது. இதனை சீர் செய்ய எங்கள் பங்களிப்பை நாங்கள் தருவதற்கு தயாராக இருக்கி றோம். கோவில் நிர்வாகம் இந்த கோவில் குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்பது எனது தாழ்வான கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • சீரமைத்து தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பிரசித்தி பெற்ற வல்மீகநாதர்-பாகம்பிரியாள் கோவில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். திங்கள், வியாழக்கிழமை தங்கி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கு உள்ள வாசுகி தீர்த்தக்குளத்தில் நீராடி அம்மனை தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தக்குளம் தூர்வாரபட்டுள்ளது.

    இருப்பினும் அதில் தேங்கி உள்ள தண்ணீர் பாசி படர்ந்து நீராட முடியாத நிலையில் உள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் நீராட தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில் குளத்தில் தேங்கி உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி புதிதாக மணல் பரப்பி குளத்தை சீரமைத்து தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீச்சல் தெரிந்தவர்கள் குளத்தில் இறக்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
    • லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், ரங்கைய்யா பள்ளியை சேர்ந்தவர் சந்திரய்யா. இவரது மனைவி லட்சுமி. அந்த பகுதியில் நேற்று கோவில் திருவிழா நடந்தது.

    கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள தனது தம்பிகள் மனைவிகளான லட்சுமி, பாலாமணி, அவரது மகன் சரண், லட்சுமி மகள் லாவண்யா ஆகியோர் வந்திருந்தனர்.

    நேற்று லட்சுமி, பாலாமணி, சரண், லாவண்யா ஆகியோர் அங்குள்ள கோவில் குளத்திற்கு சென்றனர்.

    லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் துணி துவைத்துக் கொண்டு இருந்தனர். சிறுவன் சரண் கோவில் குளத்தின் கரையோரம் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சரண் கோவில் குளத்தில் விழுந்து மூழ்கி உயிருக்கு போராடினான்.

    இதனை கண்ட அவரது தாய் பாலாமணி மகனை காப்பாற்ற முயன்றார். அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட லட்சுமி மற்றும் லாவண்யா இருவரையும் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் தண்ணீரில் மூழ்கினர்.

    அருகில் இருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நீச்சல் தெரிந்தவர்களை குளத்தில் இறக்கி தண்ணீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    லட்சுமி, பாலாமணி, லாவண்யா ஆகியோர் குளத்தில் இருந்து சடலமாக மீட்டனர்.

    குளத்தில் அதிக அளவு களிமண் உள்ளதால் சிறுவன் களிமண்ணில் சிக்கிக் கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்று காலையில் சிறுவனின் உடலை தேடும் பணி நடந்தது.

    • ராமேசுவரத்தில் கோவில் குளம் தூர்வாரும் பணி நடந்தது.
    • இந்த குளம் வறண்டு துர்நாற்றம் வீசியது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் முத்துராமலிங்கத்தேவர் நகர் பகுதியில் அங்காளபரமேஸ்வரி கோவில் குளம் வறண்டு துர்நாற்றம் வீசியது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிடும் முன்பு குளங்களை தூர் வரி தண்ணீர் சேமிக்கும் வகையில் குளம் தூர் வாரும் பணியை நகர்மன்ற தலைவர் நாசர்கான் தொடங்கி வைத்தார். இதில் ஆணையர் கண்ணன், துணைத்தலைவர் தட்சிணமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர் அர்ச்சணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • இக்கோவிலுக்கு சுமார் 25 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளதாக தெரிகிறது
    • இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் நிர்வாகம் வந்து இருவேளை பூஜை நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் கோட்டை வளாகத்தில் உள்ள பாலசுப்பிரமணியம் சுவாமி கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம் போன்ற திருவிழா நாட்களில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். தைப்பூசம் அன்று காவடி எடுத்து பக்தர்கள் தெருபவனி வருகின்றனர்.

    இக்கோவிலுக்கு சுமார் 25 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளதாக தெரிகிறது. மன்னர்கள் காலத்தில் பிரதிநிதிகள் மேற்பார்வை யில் கோவில் நிர்வாகம் திறம்பட செயல்பட்டு வந்தது. பிரதிநிதிகள் வாரிசுகள் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்த நிலையில் கோவில் நிர்வாகத்தில் சிக்கல் வந்ததாலும் கொரோனா காலத்தில் தொடர்ந்து கோவில் மூடப்பட்டதாலும் பொதுமக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் நிர்வாகம் வந்து இருவேளை பூஜை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோவில் குளத்தை அப்பகுதியில் உள்ள சிலர் மண் கொட்டி மூடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விஸ்வாமித்திரர் சைவ சபாவின் திருநீலகண்டர் உழவாரப்பணி மகான் மணிகண்டன், உழவாரப்பணி அமைப்பு சார்பில் சிவனடியார்கள் கோவில் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்தனர்.

    குளத்தில் கன்னிமூலையில் விநாயகர் சிலை இருந்தது கண்டு அதனை சுத்தம் செய்து அதற்கு பால், தேன், நெய், இளநீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. உழவாரப்பணி அமைப்பு சிவனடியார்கள் முயற்சியினை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டினர்.

    • தூர்வாரும் பணியின்போது தொழிலாளி நாராயணன் என்பவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.
    • 1 மணிநேரம் போராடி சேற்றில் சிக்கிய உடலை மீட்டனர்.

    சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் கோயில் குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இருவர் ஈடுபட்டு வந்தனர். பணி நடந்து கொண்டிருக்கும் போது நாராயணன் என்பவர் குளத்தில் முழ்கியுள்ளார்.

    இதனையடுத்து உடனடியாக வண்ணாராப்பேட்டை தீயணைப்பு துறை மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து குளத்தினுள் இறங்கி நாராயணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 1 மணி நேரம் போராடி சேற்றினுள் சிக்கிய நாராயணின் உடலை மீட்டனர். கோயில் குளத்தை சுத்தப்படுத்த சென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    நாராயணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பொதுமக்கள் குளத்தில் தவறி விழுந்தவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • விபத்து குறித்து பிரம்மதேசம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருக்கோவில் திருக்குளத்தில் இன்று காலை 8 மணி ஆண் ஒருவர் தவறி விழுந்தார் . இதனைக் கண்ட பொதுமக்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த பொதுமக்கள் குளத்தில் தவறி விழுந்தவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் மரக்காணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்திற்குள் இறங்கி உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரம்மதேசம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பிரம்மதேசம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×