search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே கோவில் குளத்தை மீட்ட சிவனடியார்களுக்கு பொதுமக்கள் பாராட்டு
    X

    தக்கலை அருகே கோவில் குளத்தை மீட்ட சிவனடியார்களுக்கு பொதுமக்கள் பாராட்டு

    • இக்கோவிலுக்கு சுமார் 25 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளதாக தெரிகிறது
    • இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் நிர்வாகம் வந்து இருவேளை பூஜை நடந்து வருகிறது.

    கன்னியாகுமரி :

    தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் கோட்டை வளாகத்தில் உள்ள பாலசுப்பிரமணியம் சுவாமி கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் வைகாசி விசாகம், கந்த சஷ்டி, தைப்பூசம் போன்ற திருவிழா நாட்களில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். தைப்பூசம் அன்று காவடி எடுத்து பக்தர்கள் தெருபவனி வருகின்றனர்.

    இக்கோவிலுக்கு சுமார் 25 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளதாக தெரிகிறது. மன்னர்கள் காலத்தில் பிரதிநிதிகள் மேற்பார்வை யில் கோவில் நிர்வாகம் திறம்பட செயல்பட்டு வந்தது. பிரதிநிதிகள் வாரிசுகள் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தை கவனித்து வந்த நிலையில் கோவில் நிர்வாகத்தில் சிக்கல் வந்ததாலும் கொரோனா காலத்தில் தொடர்ந்து கோவில் மூடப்பட்டதாலும் பொதுமக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் நிர்வாகம் வந்து இருவேளை பூஜை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கோவில் குளத்தை அப்பகுதியில் உள்ள சிலர் மண் கொட்டி மூடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். விஸ்வாமித்திரர் சைவ சபாவின் திருநீலகண்டர் உழவாரப்பணி மகான் மணிகண்டன், உழவாரப்பணி அமைப்பு சார்பில் சிவனடியார்கள் கோவில் குளத்தை தூர்வாரி சுத்தம் செய்தனர்.

    குளத்தில் கன்னிமூலையில் விநாயகர் சிலை இருந்தது கண்டு அதனை சுத்தம் செய்து அதற்கு பால், தேன், நெய், இளநீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. உழவாரப்பணி அமைப்பு சிவனடியார்கள் முயற்சியினை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×