search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ருத்ராட்சம்"

    • சிவபெருமான் தேவர்களின் சக்தியை ஒன்று சேர்த்து ஒரு பயங்கர ஆயுதத்தை உருவாக்கினார்.
    • ‘அகாரம்’ என்ற ஆயுதம் பரமசிவன் தன் கண்களை மூடாமல் பல வருடங்கள் தவம் செய்தது.

    திரிபுராசுரன் என்ற அரக்கன் ஒரு தடவை ஸ்ரீபிரம்மா, பரமேசுவரனிடம் வரம் பெற்று வல்லமை அடைந்து அதனால் கர்வம் கொண்டு தேவர்களை இம்சிக்க ஆரம்பித்தபொழுது ஸ்ரீவிஷ்ணு பரமேசுவரனை அணுகி இதற்கு விமோசனம் காண வழி சொன்னார்.

    சிவபெருமான் தேவர்களின் சக்தியை ஒன்று சேர்த்து ஒரு பயங்கர ஆயுதத்தை உருவாக்கினார்.

    'அகாரம்' என்ற ஆயுதம் பரமசிவன் தன் கண்களை மூடாமல் பல வருடங்கள் தவம் செய்தது.

    'அகோர அஸ்த்ர' நிர்மாணத்தின் பொருட்டு தன் மூன்று கண்களையும் மூட பல வருடங்களுக்குப் பின் தன் கண்களை திறந்தவுடன் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டியது.

    அந்த கண்ணீர் துளிகள் பூமியில் ஆங்காங்கே தெறித்து விழுந்தன.

    அப்படி கண்ணீர் துளிகள் விழுந்த இடங்களில் ருத்ராட்ச மரங்கள் முளைத்தன.

    அப்படி ஈசனின் கண்களில் இருந்து கண்ணீர் தெறித்து விழுந்து ருத்ராட்ச மரம் உருவான தலங்களில் அச்சரபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயமும் ஒன்றாக கருதப்படுகிறது.

    இதனால் ஆட்சீஸ்வரர் ஆலயத்துக்கு ருத்ராட்சத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

    ருத்ராட்சம் ஒரு முகத்தில் இருந்து பல முகங்கள் உடையதாக இருக்கும்.

    ஒவ்வொரு முகத்திலும் ஒவ்வொரு விதை இருக்கும்.

    அக்கினித்தேவன் மூன்று முக ருத்ராட்சத்திற்கு அதிபதி என்று கூறப்படுகிறது.

    ஏழு முக ருத்ராட்சம் செல்வத்தைக் கொண்டு வரும் தன்மையையுடையது. அதாவது லட்சுமி தேவியை குறிக்கிறது.

    மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை, ஈஸ்வர அனுக்கிரகம், பஞ்சபூத அனுக்கிரகம் பெறுவதற்கு ருத்ராட்சம் அணிந்து கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

    செந்நிறமாக செப்புத்தாது போல் காட்சியளிக்கும் ருத்ராட்சக் காய்களில் அற்புதமான, அபரிமிதமான காந்த சக்தி அடங்கி உள்ளது.

    இப்படி இயற்கையிலேயே காந்தசக்தி அடங்கிய காய் வேறு எதுவும் கிடையாது.

    இதில் அடங்கி உள்ள காந்த சக்தியால் நம் உடலும், உள்ளமும் பயன் அடையும்.

    ருத்ராட்சக் கொட்டை நம் உடலை தொட்டுக் கொண்டிருந்தால் உடலில் உள்ள உஷ்ணத்தையும், உள்ளத்தில் உள்ள கொந்தளிப்பையும் கிரகித்து பிளட் பிரஷரையும், மன சஞ்சலத்தையும் சீராக்கி விடும்.

    பிளட் பிரஷர் உள்ளவர்கள் ருத்ராட்சக் கொட்டையை தாங்கள் குடிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடம் மிதக்கவிட்டுப் பின் அந்த நீரை அருந்த பிரஷர் கட்டுப்படும். குறையவும் செய்யும்.

    • கண்ணன் கூறியபடியே பீமன் செய்தான்.
    • ருத்ராட்சம் சிவனாக மாறியபோது மிருகம் மயங்கி நின்றது.

    சிவாலய ஓட்டத்தில் தொடர்புடைய 12 சிவத்தலங்கள் உருவாக மகாபாரதசம்பவம் காரணமாக கூறப்படுகிறது. யுத்தம் முடிந்த நேரத்தில் தர்மர் பெரிய யாகம் ஒன்றை செய்ய விரும்பினார். யாகத்தில் கொடிய மனிதனும், சிங்கமும் கலந்த புருஷா மிருகத்தின் பால் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதனிடம் பால் கறக்க பீமன் சென்றான். அப்போது கண்ணன் அவனிடம் 12 ருத்ராட்சங்களை கொடுத்து பீமா, புருஷா மிருகம் சிவன் நாமம் தவிர வேறு எதையும் கேட்காது. நீ கோவிந்தா, கோபாலா என்று சொல்லிக் கொண்டு போ, அது உன்னை துரத்தும். அப்போது ருத்ராட்சத்தை ஒவ்வொரு இடமாக போடு. அது சிவலிங்கமாக மாறும். மிருகம் சிவனை வழிபட்டு மயங்கும். அப்போது பால் கறந்துவிடு என்றார்.

    கண்ணன் கூறியபடியே பீமன் செய்தான். ருத்ராட்சம் சிவனாக மாறியபோது மிருகம் மயங்கி நின்றது. ஆனால் பால் கறக்க தொடங்கியதும் விழித்துவிட்டது. அதனால் பீமன் ஓடினான். 12 ருத்ராட்சங்களும் தீர்ந்து விட்டன. கடைசியில் மிருகம் பீமனின் ஒரு காலை பிடித்துவிட்டது. அந்த கால் மிருகத்துக்கு சொந்தமான காட்டில் பதிந்திருந்தது. இந்த நேரத்தில் அங்கு வந்த தருமர், பீமனின் ஒரு காலை மிருகம் எடுத்துக் கொள்ளலாம் என்று நியாயம் சொன்னார்.

    உடனே ருத்ராட்சங்கள் விஷ்ணு உருவங்களாக மாறின. இதைக்கண்ட புருஷா மிருகம் ஞானம் பெற்றது. பீமனும் தன் அகந்தை ஒழித்தான். பீமன் ஸ்தாபித்த 12 சிவாலயங்களும் வழிபாட்டுக்கு உரியதாயின. இதற்கு எடுத்துக்காட்டாக திக்குறிச்சி கோவில் முன்மண்டபத்தில் பீமன் கதாயுதத்துடன் நிற்பதும், சிங்கமும் மனிதனும் கலந்த ஒரு உருவம் நிற்பதுமான புடைப்புச் சிற்பம் உள்ளது.

    • சிவனடியார்கள், யாராவது ஒருவரை குருவாக ஏற்று, சிவவழிபாடுநடத்தி வர வேண்டும்.
    • தினமும் வழிபாடு நடத்தி, ஆடல்வல்லான் அம்பலவாணனின் அருளை பெறலாம்.

    திருப்பூர்:

    திருப்பூர் திருமுறை சைவநெறி அறக்கட்டளை சார்பில் சுந்தரமூர்த்தி நாயனாரின், தேவார முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.நிறைவு நாளன்று ஸ்ரீசிவாக்கர தேசிக சுவாமி பேசியதாவது:-

    சிவனடியார்கள், யாராவது ஒருவரை குருவாக ஏற்று, சிவவழிபாடுநடத்தி வர வேண்டும்.குருவருள் இருந்தால் மட்டுமே திருவருளை பெற முடியும். நாயன்மார்கள், ஞானிகள், சித்தர்களில் யாராவது ஒருவரை, மானசீக குருவாக நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.யார் ஒருவரையும் பார்க்கும் போது, எண்ணம், செயல், சொல் ஆகியவற்றை பிரயோகிக்க முடியாத நிலை வருமானால், அவரே உமது குரு. ஏதாவது பலனை எதிர்பார்த்து, தேவார திருமுறைகளை பாடக்கூடாது.எதிர்பார்ப்பின்றி, இறைபக்தியுடன் பதிங்களை பாடுவதால் அனைத்துமே கிட்டும். பட்டியல் போட்டு கோரிக்கையை வைப்பதால், அவ்வளவு எளிதாக இறைவன் இரக்கம் காட்டுவதில்லை.

    ருத்ராட்சம் அணிந்து சிவனடியாருக்கு தொண்டு செய்வதே சிவநெறி. தொண்டு செய்வதில், சிறியது - பெரியது என்பது இல்லை. மானசீகமாக தொண்டாற்றுபவரே உண்மையான சிவனடியார். ஞானசம்பந்தரும், ராமானுஜரும் ஜாதிகளை கடந்து, சமயங்களை வளர்த்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே புரட்சியாளராக இருந்தனர்.சைவ நெறியில் இருப்பது போல் மற்ற சமயங்களில் உள்ள நல்ல வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஸ்ரீநடராஜர் படத்தை வீடுகளில் வைத்து தினமும் வழிபாடு நடத்தி, ஆடல்வல்லான் அம்பலவாணனின் அருளை பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    ×