search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rudraksha"

    • கண்ணன் கூறியபடியே பீமன் செய்தான்.
    • ருத்ராட்சம் சிவனாக மாறியபோது மிருகம் மயங்கி நின்றது.

    சிவாலய ஓட்டத்தில் தொடர்புடைய 12 சிவத்தலங்கள் உருவாக மகாபாரதசம்பவம் காரணமாக கூறப்படுகிறது. யுத்தம் முடிந்த நேரத்தில் தர்மர் பெரிய யாகம் ஒன்றை செய்ய விரும்பினார். யாகத்தில் கொடிய மனிதனும், சிங்கமும் கலந்த புருஷா மிருகத்தின் பால் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதனிடம் பால் கறக்க பீமன் சென்றான். அப்போது கண்ணன் அவனிடம் 12 ருத்ராட்சங்களை கொடுத்து பீமா, புருஷா மிருகம் சிவன் நாமம் தவிர வேறு எதையும் கேட்காது. நீ கோவிந்தா, கோபாலா என்று சொல்லிக் கொண்டு போ, அது உன்னை துரத்தும். அப்போது ருத்ராட்சத்தை ஒவ்வொரு இடமாக போடு. அது சிவலிங்கமாக மாறும். மிருகம் சிவனை வழிபட்டு மயங்கும். அப்போது பால் கறந்துவிடு என்றார்.

    கண்ணன் கூறியபடியே பீமன் செய்தான். ருத்ராட்சம் சிவனாக மாறியபோது மிருகம் மயங்கி நின்றது. ஆனால் பால் கறக்க தொடங்கியதும் விழித்துவிட்டது. அதனால் பீமன் ஓடினான். 12 ருத்ராட்சங்களும் தீர்ந்து விட்டன. கடைசியில் மிருகம் பீமனின் ஒரு காலை பிடித்துவிட்டது. அந்த கால் மிருகத்துக்கு சொந்தமான காட்டில் பதிந்திருந்தது. இந்த நேரத்தில் அங்கு வந்த தருமர், பீமனின் ஒரு காலை மிருகம் எடுத்துக் கொள்ளலாம் என்று நியாயம் சொன்னார்.

    உடனே ருத்ராட்சங்கள் விஷ்ணு உருவங்களாக மாறின. இதைக்கண்ட புருஷா மிருகம் ஞானம் பெற்றது. பீமனும் தன் அகந்தை ஒழித்தான். பீமன் ஸ்தாபித்த 12 சிவாலயங்களும் வழிபாட்டுக்கு உரியதாயின. இதற்கு எடுத்துக்காட்டாக திக்குறிச்சி கோவில் முன்மண்டபத்தில் பீமன் கதாயுதத்துடன் நிற்பதும், சிங்கமும் மனிதனும் கலந்த ஒரு உருவம் நிற்பதுமான புடைப்புச் சிற்பம் உள்ளது.

    • ஆடி செவ்வாய் முன்னிட்டு பெரியநாயகி அம்மன் உடனுறை அரசியலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது.
    • இதில் திரளானவர்கள் கலந்து ருத்ராட்சம் அணிந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் திரு மடம் சார்பில் புதுவை ஆதீனம் சந்திரசேகர சாமிகள் முன்னிலையில் வளர்பிறை பிரதோஷம் மற்றும் ஆடி செவ்வாய் முன்னிட்டு பெரியநாயகி அம்மன் உடனுறை அரசியலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது.

    தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகள் ஓதி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து ருத்ராட்சம் அணிந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    புராணங்கள் மற்றும் இதிகாச காலங்கள் முதல் பயன்படுத்தப்பட்டு வரும் தெய்வீக அம்சம் பொருந்திய பொருள் ருத்ராட்சம். இது சிவபெருமானின் கண்ணீர் துளிகளில் இருந்து உருவானதாக கூறப்படுகிறது.
    ஒருமுறை திரிபுரா என்ற அசுரனால், தேவர்கள் அதிக துன்பத்திற்கு ஆளானார்கள். மிகவும் மனம் வருந்திய தேவர்கள், அசுரனிடம் இருந்து தங்களை காத்தருளும்படி சிவபெருமானை வேண்டினர். அதனைக் கேட்டு மனம் இரங்கிய சிவபெருமான், அசுரனை எவ்வாறு அழிப்பது என்ற யோசனையில் தவத்தில் அமர்ந்தார்.

    நீண்டகாலம் தவத்தில் இருந்த ஈசன், கண் திறந்து பார்த்தார். அப்போது அவரது கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் வெளிப்பட்டு பூமியில் விழுந்தது. அவரது கண்ணீர் துளிகள் விழுந்த இடத்தில் இருந்து முளைத்தவைதான் ருத்ராட்ச மரங்கள்.
    ருத்ராட்ச மணிகளில் இயற்கையாகவே அமைந்திருக்கும் முகங்கள் பற்றியும், அவற்றை அணிவதால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் இங்கே காணலாம்.
    சிவனடியார்கள் மற்றும் சிவ பக்தர்கள், தங்கள் கழுத்தில் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவ சின்னம் ‘ருத்ராட்சம்.’ ‘ருத்திரன்’ என்பது சிவபெருமானையும், ‘அட்சம்’ என்பது கண்களையும் குறிப்பதாகும். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகளே ‘ருத்ராட்சம்’ என்று கூறப்படுகிறது. ருத்ராட்ச மணிகளில் இயற்கையாகவே அமைந்திருக்கும் முகங்கள் பற்றியும், அவற்றை அணிவதால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் இங்கே காணலாம்.

    ஒரு முகம்

    * பெரும்பாலும் உருண்டை வடிவமாக இருக்கும்.
    * நேபாள ஒரு முக ருத்ராட்சம் உருண்டை வடிவமாகவும், இந்தோனேசிய ஒரு முக ருத்ராட்சம் நீள வடிவமாகவும் காணப்படுகிறது.
    * இது சூரியனின் ஆதிக்கம் பெற்றதாக இருப்பதால், மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    * ஒரு முக ருத்ராட்சத்தை மாலையாகவோ, ஜெப மாலையாகவோ பயன்படுத்தி வந்தால், ஜாதகத்தில் சூரியனால் ஏற்பட்ட பாதகங்கள் நீங்கும்.
    * பிரம்மஹத்தி தோஷம் போக்கும் சக்தி படைத்தது.
    * ஆன்மிக தன்மை அளிக்கும் ஆற்றல் உண்டு.

    இரு முகம்

    * அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டது. இந்த ருத்ராட்சம் கிடைப்பது மிகவும் அரிது.
    * சந்திரனின் ஆதிக்கம் பெற்றது.
    * பத்ம புராணம் இதை அக்னியின் ஆதிக்கம் பெற்றதாக கூறுகிறது.
    * பசுவை கொன்ற பாவத்தை போக்கும்.
    * குடும்பம் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடத்தில் நல்ல உறவை விரும்புபவர்கள், இரு முக ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம்.
    * ஆன்மிக முன்னேற்றத்தை அளிக்கக் கூடியது.
    * இருமுக ருத்ராட்சத்தால் ஆன மாலையை அணிந்தால், குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    மூன்று முகம்

    * மூன்று முக ருத்ராட்சம் செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்றது.
    * இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் உடலில் உள்ள சோர்வு, பலவீனம் நீங்கும்.
    * இது சிவனுடைய மூன்று கண்களாக விளங்கும் சோம, சூரிய, அக்னி என்ற 3 அம்சங்களுடைய வடிவங்களைக் குறிப்பதாகும்.
    * இதன் அதிபதிகள் சூரியன், சுக்ரன், அக்னி தேவன்.
    * கருக்கலைப்பு செய்த பாவத்தைப் போக்கும் சக்தி இந்த ருத்ராட்சத்திற்கு உண்டு.
    * ஸ்ரீமத் தேவி பாகவதம் என்ற நூல், இந்த ருத்ராட்சத்தை அணிவதால் கொலை பாதகம் செய்த பாவம் விலகும் என்று சொல்கிறது.
    * செவ்வாய் கிரகத்தின் பாதிப்பால் ஏற்படும் துர்மரணம். விபத்து, விஷ ஜந்துக்களால் உண்டாகும் அபாயம் ஆகியவை நீங்கும்.

    நான்கு முகம்

    * பிரம்ம தேவனின் அருள் பெற்றது, இந்த ருத்ராட்சம்.
    * இதன் ஆதிக்க கிரகம் புதனாக இருப்பதால், இதனை அணிபவர்களுக்கு 4 திசைகளிலும் புகழை உண்டாக்கும்.
    * பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற 4 நிலைகளையும் இந்த ருத்ராட்சம் குறிக்கிறது.
    * இதை மாலையாகவோ, ஜெப மாலையாகவோ உபயோகிப்பவர்களின் பாவங்கள் ஒழிந்து, புதிய பிறவியில் வாழ்வது போல் இருக்கும்.
    * மாணவர்கள் நான்கு முக ருத்ராட்சம் அணிய கல்வியில் சிறந்து விளங்குவர்.
    * இந்த ருத்ராட்சம் மனதை ஒருமுகப்படுத்தும்.



    ஐந்து முகம்

    * இந்த ருத்ராட்சம் குருவின் ஆதிக்கம் பெற்றது.
    * அகோரம், தத்புருஷம், வாமதேவம், சத்யோஜாதம், ஈசானம் என்னும் சிவனின் ஐந்து முகங்களையும் இந்த ருத்ராட்சம் குறிக்கிறது.
    * ஐந்து முக ருத்ராட்சத்தை அணிபவருக்கு, அகால மரணம் கிடையாது.
    * பாலுறவிலும், உணவிலும் செய்த பாவங்கள் அனைத்தும் ஐந்துமுக ருத்ராட்சம் அணிவதால் விலகும்.
    * பஞ்சமுகனான சிவபெருமானின் அம்சமான, காலக்கி ருத்ரர் அருள் நிறைந்தது இந்த ருத்ராட்சம்.
    * இந்த ருத்ராட்சத்தை வீட்டில் உள்ள விளக்குகளுக்கு மாலையாக பயன்படுத்தினால், செல்வம் பெருகும்.

    ஆறு முகம்

    * சுக்ரனின் ஆதிக்கம் பெற்ற ருத்ராட்சம் இது.
    * உடல் நலம், வாழ்க்கை வசதி, மகிழ்ச்சி அனைத்தையும் கொடுக்கும்.
    * இது முருகப்பெருமானின் அருளையும் பெற்றது என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
    * ஆறுமுக ருத்ராட்சத்துடன், கவுரி சங்கர ருத்ராட்சத்தை இணைத்து அணிந்தால் குழந்தைபேறு உண்டாகும்.
    * பதிமூன்று முக ருத்ராட்சத்திற்குரிய பலன்கள் அனைத்தும், ஆறுமுக ருத்ராட்சத்தின் மூலம் கிடைக்கும்.
    * ஆறுமுக ருத்ராட்சத்தை நான்கு முக ருத்ராட்சத்தோடு இணைத்து அணிந்தால், பிரம்மஹத்தி தோஷம் விலகும்.
    * அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் இந்த ருத்ராட்சத்தை அணியலாம்.

    ஏழு முகம்

    * சனி கிரகத்தின் ஆதிக்கம் பெற்ற ருத்ராட்சம் இது.
    * ஏழு பெண்களைக் கொண்ட சப்தமாதர்களின் அருளும் கொண்டது.
    * சூரியன், சப்த மாதாக்கள், ஆதிஷேசன், காமதேவன், முருகன் ஆகியோரின் அருளையும் பெற்றது.
    * பணப்பெட்டி, பணப்பை போன்றவற்றில் இந்த ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டால் செல்வம் பெருகும்.
    * இந்த ருத்ராட்சத்தோடு எட்டு முக ருத்ராட்சத்தையும் சேர்த்து அணிய வேண்டும்.

    எட்டு முகம்

    * எட்டு என்பதற்கு ‘அஷ்டம்’ என்று பொருள்.
    * அஷ்ட கர்மங்கள், அஷ்டமா சித்திகள், அஷ்ட துர்க்கைகள், அஷ்ட பைரவர்கள், அஷ்ட மாதர்கள் அனைவரின் அருளையும் பெற்றது இந்த ருத்ராட்சம்.
    * எட்டு முக ருத்ராட்சம் விநாயகப்பெருமானின் அருளையும், ராகுவின் ஆதிக்கத்தையும் பெற்றது.
    * சனி தோஷம் உள்ளவர்கள் இந்த ருத்ராட்சத்தோடு, எட்டு முக ருத்ராட்சத்தை இணைத்து அணிய வேண்டியது அவசியம்.
    * இந்த ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு பகுத்தறிவு, புத்தி, எழுத்தாற்றல், புகழ், செல்வம் கூடும்.

    ஒன்பது முகம்

    * ஒன்பது என்பதற்கு ‘நவ’ எனப் பொருள்படும்.
    * நவக்கிரகங்கள், நவ துர்க்கைகள், பைரவர்கள் அனைவரின் அருளைப் பெற்றது.
    * ஒன்பது வித சக்திகளை உள்ளடங்கியது இந்த ருத்ராட்சம்.
    * இதன் ஆதிக்க கிரகம் கேது என்பதால், இந்த ருத்ராட்சத்தை அணிய மரண பயம் நீங்கும்.
    * ஒன்பது முக ருத்ராட்சத்தோடு 10 அல்லது 11 முக ருத்ராட்சத்தை சேர்த்து அணிந்தால் சகலவித பாதுகாப்பும் உண்டாகும்.
    * இந்த ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் கணவன்- மனைவி பிரச்சினை விலகும்.

    பத்து முகம்

    * மிகவும் சக்தி வாய்ந்த இந்த ருத்ராட்சம், எமதர்மனின் அருளைப் பெற்றது.
    * இதை அணிபவர்களுக்கு பில்லி, சூனியம், மந்திர, தந்திரங்களால் வரும் கெடுபலன்களை தடுக்கும் சக்தி இந்த ருத்ராட்சத்திற்கு உண்டு.
    * வாழ்வில் சரியான பாதையை காட்டும் ஆற்றல் இந்த ருத்ராட்சத்திற்கு உண்டு.
    * இந்த ருத்ராட்சத்தோடு ஒருமுக ருத்ராட்சத்தை சேர்த்து அணிந்தால், நீதிமன்ற வழக்குகளில் வெற்றி நிச்சயம்.
    * இதை அணிபவர்களிடம் எந்த தீய சக்தியும் நெருங்காது. ஆனால் இந்த ருத்ராட்சம் மிக அரிதாகவே கிடைக்கும்.

    நம்மில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.
    ‘ருத்ராட்சமும், விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் எமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மகா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1 கோடி முறை உச்சரித்த பலனைத்தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை அகால மரணமோ, துர்மரணமோ நெருங்குவதில்லை’ என்கிறார் மகா பெரியவா என்று அழைக்கப்படும் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்.

    இன்று நம்மில் பலரும் ருத்ராட்சத்தை அணிவதற்கு அச்சப்படுகிறார்கள். அது புனிதமானது. அதனை துறவிகள் மட்டுமே அணியவேண்டும். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் அணியக்கூடாது. பெண்கள் ஒருபோதும் ருத்ராட்சம் அணியக்கூடாது என்று சொல்பவர்கள் ஏராளம்.

    ஆனால் இயற்கையாகவே துளையோடு இருக்கும் ருத்ராட்சம், அனைவரும் அணிந்து கொள்வதற்காகவே அவ்வாறு இருக்கிறது. அதன் ஆண், பெண் பேதம் எதுவும் இல்லை என்பது ஆன்மிகத்தை நன்கு கற்றறிந்தவர்கள் கூறும் வாக்காகும்.

    சிவபெருமான் கண்களில் இருந்து தோன்றியது ருத்ராட்சம். அதை அணிபவரை ஈசன், கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் ஐந்து முகம் கொண்ட ஒரு ருத்ராட்சத்தையாவது அணிய வேண்டியது அவசியம். ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர்பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்க வேண்டும் என்று சிவபெருமானே கூறியுள்ளதாக சிவபுராணம் தெரிவிக்கிறது.

    சிறுவர், சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் இந்த ருத்ராட்சத்தை அணிவதால், தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியத்தைப் பெறுவார்கள். அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் வெற்றி கிடைக்கும். மேலும் ருத்ராட்சம் அணிந்தவர்களின் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சொல்லும் வார்த்தைகளாகும்.

    அதிக விலைகொடுத்து அபூர்வ வகையிலான ருத்ராட்சத்தை வாங்கி அணியவேண்டும் என்று அவசியமில்லை. எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்தாலே போதுமானது. சிவபெருமானின் திருமுகம் ஐந்து. நமசிவாய மந்திரம் ஐந்தெழுத்து. பஞ்சபூதங்கள் ஐந்து (நிலம், நீர்,நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்). நமது கை கால் விரல்கள் ஐந்து. புலன்கள் ஐந்து. ஆகையால் தான் இயற்கையே மிக அதிகமாக ஐந்து முக ருத்ராட்சத்தை பூமிக்கு அருள்கிறது. எனவே ஐந்து முக ருத்ராட்சங்களை அணிவதே சிறப்பு. ஐந்து முக ருத்ராட்சத்திலேயே மற்ற எல்லா முக ருத்ராட்சங்களினால் கிடைக்கின்ற பலன்களும் அடங்கிவிடும்.



    பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி. அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை, அருணாசலபுராணம் விவரிக்கிறது. எனவே பெண்கள் தாராளமாக அம்பிகை காட்டும் வழியைப் பின்பற்றி ருத்ராட்சம் அணியலாம். சிவ மகாபுராணத்திலும் பெண்கள் கட்டாயம் ருத்ராட்சம் அணிய வேண்டும் என்று ஈசனே வலியுறுத்தியிருக்கிறார்.

    பெண்கள் தங்களுடைய தாலிக்கொடியை எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும் அணிந்திருப்பதைப் போல, ருத்ராட்சத்தையும் அனைத்து நேரங்களிலும் அணிந்து கொள்ளலாம். ருத்ராட்சத்தை ஈசன் அருளியது மனிதன் வாழும் உடலுக்காக அல்ல.. உயிரின் ஆன்மாவிற்காக என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    நீத்தார் கடன் எனப்படும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, பெண்களின் தீட்டு காலம் எனப்படும் மாதவிலக்கு, கணவன்-மனைவி தாம்பத்திய நேரங்களில் கூட ருத்ராட்சம் அணியலாமா? என்ற கேள்வி எழலாம். இவை மூன்று விஷயங்களும் இயற்கையானதே தவிர, எதுவும் செயற்கையானது அல்ல. பித்ரு கடன் நிறைவேற்றும்போது ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம். இதனால் முன்னோர்களின் ஆன்மாக்கள் மகிழும். அதனால் பாவமோ, தோஷமோ கிடையாது.

    நீராடும் போது ருத்ராட்சம் அணிந்திருந்தால் கங்கையில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது பலரும் சொல்லும் வாக்கு. பாவங்களால் தான் நமக்கு துன்பங்கள் நிகழ்கின்றன. அதற்காக நாம் கங்கையைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. ருத்ராட்சத்தை அணிந்து கொண்டாலே கொடிய பாவங்களும் நீங்கும்.

    நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் படிப்படியாக குறையும் என்கின்ற புராணங்கள், கங்கையில் மூழ்கினால் பாவம் போகும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். பாவங்களினால் தான் நமக்குக்கஷ்டம் உண்டாகிறது. ருத்ராட்சம் அணிவதால் கொடியபாவங்கள் தீரும். இதனால் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் படிப்படியாகக் குறைந்து விடும். ருத்ராட்சம் அணிபவருக்கு லட்சுமி கடாட்சமும், செய்யும் தொழிலில் மேன்மையும், சகலவிதமான ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

    ருத்ராட்சம் அணிவதால் இதய நோய், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தீவிரம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தூங்கும்போதும் கூட ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வேலை வாய்ப்பு இல்லாதவர்களும் ருத்ராட்சம் அணிந்து, தினமும் 108 முறை எழுத்தாலோ, மனதலோ பஞ்சாட்சரத்தைச் சொல்லி வந்தால், 18 மாதத்தில் மேற்கூறிய பிரார்த்தனைகள் நிறைவேறும் என்கிறார் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள். 
    ×