search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரமக்குடி வருகை
    X

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரமக்குடி வருகை

    • பரமக்குடிக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பரமக்குடி

    பரமக்குடியில் 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அன்று தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இமானு வேல்சேகரன் நினை விடத்தில் அஞ்சலி செலுத்து கின்றனர்.

    அஞ்சலி செலுத்த வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான செயற்குழு ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் வரவேற்று பேசினார். இதில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் மரிச்சிகட்டியில் இருந்து பரமக்குடி வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். இதில் பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் செய்ய வேண்டும். அதே போல் இளைஞரணி மாநில மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா ரகு, பரமக்குடி நகர் மன்றத் தலைவர் சேது கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் அருளாந்து, வக்கீல் பூமிநாதன், போகலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் வாசு தேவன், ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, சக்தி, அண்ணா மலை, மாவட்ட வக்கீல் பிரிவு அமைப்பாளர் வக்கீல் கருணாநிதி, வக்கீல் கள் கதிரவன், குணசேகரன், இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, துணை அமைப்பாளர்கள் குமரகுரு, சண்.சம்பத்குமார், சத்தி யேந்திரன், பொறியாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர பாண்டியன், பகுத்தறிவு பாசறை பிரிவு அமைப்பாளர் செந்தில் செல்வானந்த், விவசாய அணி அமைப்பாளர் அய்ய னார், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி துரைமுருகன், கவுன்சிலர் நதியா மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×