search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரவேற்பு"

    • ராமநாதபுரத்தில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்திக்கு மலர் தூவி கலெக்டர் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் என திரளாக பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பார்த்தி பனூர்-மருச்சுக்கட்டியில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் எம்.எல்.ஏ.க்கள் செ. முருகேசன் (பரமக்குடி), காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் (ராமநாதபுரம்) ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தியினை மலர்தூவி வரவேற்றார்.

    முன்னதாக இந்த முத்த மிழ்த்தேர் அலங்கார ஊர்தி மதுரையிலிருந்து ராமநாதபு ரம் மாவட்டத்திற்கு வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் நுழைவு பகுதியான மருச் சுக்கட்டியில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியினை வரவேற்கப்பட்டதுடன் முத் தமிழ்த்தேர் அலங்கார ஊர் தியில் அமைந்துள்ள டாக்டர் கலைஞரின் திருவுரு வச்சிலைக்கு கலெக்டர் பா. விஷ்ணு சந்திரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் முருகேசன், காதர்பாட்ஷா முத்துராம லிங்கம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் வனத்துறையின் மூலம் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 100 மரக்கன்றுகள் நடும் பணி யினை கலெக்டர் விஷ்ணுசந் திரன் மற்றும் எம்.எல். ஏ.க்கள் நடவு செய்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கலைஞர் நூற் றாண்டு விழாவை யொட்டி பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு பேனா வழங்கினர்.

    விழாவையொட்டி நாதஸ்வர நிகழ்ச்சி, சிலம் பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. பின்னர் முத்த மிழ்த்தேர் அலங்கார ஊர்தி ராமநாதபுரத்திற்கு வருகை தந்து ஏராளமான பொது மக்கள் அலங்கார ஊர்தியி னையும் அதன் உள்ளே உள்ள டாக்டர் கலைஞரின் திருவுருவச் சிலையையும் பார்வையிட்டு சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, பர மக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், மாவட்ட வனஅலுவலர் எஸ்.ஹேம லதா, பரமக்குடி நகர் மன் றத்தலைவர் சேது கருணா நிதி, ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.–கார்மேகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்த லைவர் கே.டி.பிரபாகரன்,

    ராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாபதி, பரமக்குடி வட்டாட்சியர் ரவி, அச்சுந் தன்வயல் ஊராட்சி மன்றத்த லைவர் சசிகலா அவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்சாயத்து, பேரூர் கடை வீதியில் தனியார் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது.
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தையால், டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பட்டு, பேரூர் கள்ளை நெடுஞ்சாலையில் புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

    கரூர்

    குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்சாயத்து, பேரூர் கடை வீதியில் தனியார் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இங்கு மதுவாங்கி குடிப்பவர்கள், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து வந்தனர்.

    இந்நிலையில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொது மக்கள், பா.ஜ., மக்கள் பிரதிநிதிகள் சார்பில் கடை முற்றுகை, கடைஅடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையால், டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பட்டு, பேரூர் கள்ளை நெடுஞ்சாலையில் புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திற்கு பஞ்., நிர்வாகம் மற்றும் பா.ஜ.,வினர், பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த வரவேற்பை திட்டமிட்டு மறைக்க முயன்றவர்களுக்கு தோல்வியடைந்து விட்டார்கள்.
    • ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

    மதுரை

    மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலை வர் ஆர்.பி.உதயகுமார் கூறி யதாவது:-

    தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டி ருக்கிற தெய்வீக திரு மகனாரின் குரு பூஜையில், அ.தி.மு.க. பொதுசெயலா ளர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற போது வரலாறு காணாத வரவேற்போடு, ஒட்டுமொத்த தேவர் தொண்டர்களும், குறிப்பாக தாய்மார்களும் அவரை வரவேற்ற காட்சியை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத விஷமி கள் சிலர், தெய்வீக திருமக னார் தனக்கு மட்டுமே சொந்தம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்க முயற்சி செய்தனர்.

    அந்த சுயநலவாதி களிடம் இருந்து, அவர் ஒரு சுதந்திர போராட்டத் தலைவர், தேசிய தலைவர், சர்வ சமய, சர்வ ஜாதி என அனைத்து பிரிவிற்கும் சொந்தமானவர் என்பதை நிரூபித்துக் காட்டு கின்ற வகையில், அந்த புண்ணிய பூமியில் அஞ்சாத மன உறுதியோடு, உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் நான் அஞ்ச மாட்டேன் என தேவருக்கு மரியாதை செலுத்தி னார். எடப்பாடி பழனிசாமி.

    மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு 80 கிலோ மீட்டர் தூரம் செல்லுகின்ற பாதையில் பொதுமக்கள் எல்லாம் அவரை வரவேற்றதை திட்டமிட்டு மறைத்து விட்டு, சில கயவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வாங்கிய கூலிக்கு கூவியர்கள் இதில் தோல்வியடைந்து விட்டார்கள்.

    தேவர் சில பேருக்கு மட்டுமே சொந்தம் என்று குறுகிய வட்டத்தில், அவரது புகழை ஒரு கூண்டுக்குள்ளே அடக்க நினைக்கிறார்கள், அதையெல்லாம் தகர்த்து எறிந்து அவரின் புகழ், தியாக வரலாறு, சர்வ மதம் சர்வ ஜாதிகளுக்கும் பாடு பட்டவர் என்பதை இன்றைக்கு மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது.

    எல்லோரும் வரவேற்ற புண்ணிய பூமி இன்றைக்கு சமீபகாலமாக சில கயவர்கள், அரசியலில் முகவரி அற்றவர்கள், அரசியலில் காணாமல் போனவர்கள் தேவரின் கவசத்தை முக மூடியாக அணிந்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு தேடுவது குற்றமல்ல, ஆனால் பிறரை இழிவுபடுத்த வேண்டும், சிலரை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நடக்காது.

    பசும்பொன் பூமிக்கு வருகை தந்து வெற்றி கொடி பறக்க விட்டு, தேவரின் புகழை எட்டுதிக்கும் எடுத்துச் சென்று இருக்கின்ற எடப்பாடி பழனிசாமி இந்திய அரசியலில் கிங் மேக்கராக உருவெடுத்துள் ளார்.

    எடப்பாடி பழனிசாமி வருகை ஒரு வரலாற்று வருகையாக தென் மாவட்ட மக்களின் மூலமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • செங்கோட்டை ரெயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகிறது.
    • பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர்-செங் கோட்டை ரெயில்வே பிரிவு மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன. இதையடுத்து இன்று முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை, சிலம்பு மற்றும் மயிலாடு துறை விரைவு ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன.

    இதற்காக இந்த பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மின் வழித்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட இருக்கிறது. ஆகவே இந்த ரெயில் தடம் செல்லும் பகுதியில் உள்ள பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மழை மற்றும் மின்னல் வெட்டும் நேரங்களில் குடையுடன் மின் வழித் தடத்தின் கீழே கடப்பதும் ஆபத்தை விளைவிக்கும். மேம்பாலங்களில் இருந்து மின்வழித்தடத்தின் மேல் ஏதாவது ஒரு பொருளை எறிந்தாலும் கடும் மின்சார தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ரெயில்வே நிர்வா கத்தின் அனுமதியில்லாமல் மின் வழித்தடத்தின் அருகில் உள்ள மரங்களை வெட்டு வது, மரக்கிளைகளை செம்மைப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.

    லெவல் கிராசிங்குகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் செய்திருந்த போதிலும், ரெயில்வே லெவல் கிராசிங்குகளை கடக்கும்போது நீண்ட இரும்பு கம்பிகளை செங்குத்தாக வைத்துக் கொண்டு நடப்பதும், வாகனங்கள் மேல் பகுதி யில் அமர்ந்து பயணிப்ப தும், வாகனங்களில் சரக்கு களை உயரமாக அளவுக்கு அதிகமாக வைத்து செல்வ தும் ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்கள் ஆகும்.

    சென்னையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ் பிரஸ் மற்றும் மயிலாடுதுறை இருந்து புறப்படும் செங் கோட்டை விரைவு ரெயில் கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகின்றன.

    அதேபோல் இன்று செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், நாளை

    (2-ந்தேதி) செங்கோட்டை யில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆகியவற்றில் மின்சார என்ஜினில் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் முதல் முறையாக மின்சார என்ஜினுடன் வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு ராஜபாளையம் ெரயில் பயனாளர் சங்கம் சார்பில் ராஜபாளையம் ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ரெயில் என்ஜினுக்கு மாலை, அலங்காரங்கள் செய்யப்பட்டு ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மற்றும் என்ஜின் ஆய்வாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

    • சிவகங்கைக்கு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மானாமதுரையில் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிவகங்கை மாவட்டம் சார் பில் மானாமதுரையில் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான செந்தில் நாதன் தலைமையில் வர வேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் முன் னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாகராஜன், கற்பகம் இளங்கோ, மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கருணாகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், நகர் செயலாளர் ராஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பெண்மணிபாஸ் கரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பாசறை செயலாளர் பிரபு, மண்டல தகவல் தொழில் நுட்ப அணி தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள். செல்வமணி, பழனிச்சாமி, அருள்ஸ்டிபன், சேவியர் தாஸ், ஸ்ரீ தரன், கோபி, ஜெகதீஸ்வரன், ஜெயபிர காஷ், மாவட்ட பாசறை இணை செயலாளர் பிரபு, கூட்டுறவு வங்கி தலைவர் சகாயசெல்வராஜ், சக்கந்தி ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், வழக்கறிஞர் மணிமாறன், மாவட்ட தக வல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சங்கர் ராமநாதன், மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன் மற்றும் ஏராளமானோர் நிர் வாகிகள் கலந்து கொண்ட னர்.

    • முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார்.

    காளையார் கோவில்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் பங்கேற்பதற்காக இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டம் வழியாக சென்றார்.

    இந்த நிலையில் மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான பெரிய கருப்பன் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மாவட்ட எல்லையான திருப்பு வனத்தில் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். காலை 8.35 மணி அளவில் திருப்புவனம் பகுதிக்கு முதல்-அமைச்சர் வந்தார். அங்குள்ள மின்வாரிய அலுவலகம் அருகே நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சருக்கு பட்டாடை கொடுத்து அமைச்சர் பெரியகருப்பன் வரவேற்றார்.

    தொடர்ந்து நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், மாவட்ட தி.மு.க அவை தலைவர் கணேசன், மாவட்ட துணை செயலா ளர்கள் த.சேங்கை மாறன் ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில் குமார், துணை அமைப்பாளர் பொற்கோ, நகர செயலா ளர்கள் குணசேகரன், துரை ஆனந்த், பொன்னுச்சாமி, பெரி.பாலா, நகர் மன்ற தலைவர் முத்து துரை, முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, மதியரசன், ஒன்றிய செயலா ளர்கள் வசந்தி சேங்கை மாறன், கடம்பசாமி, நிர்வாகிகள் மோகன்ராஜ், பழனி, அண்ணாமலை, சேகர் உள்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்-அமைச்சரை வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

    • எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து வழிபட்டனர்
    • மலர் மாலைகள் அணிவித்து தேங்காய் பழம் படைத்து சுருள் வைத்து வழிபட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் பரிவேட்டை நிகழ்ச்சியில் வழி நெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் எலுமிச்சம் பழம் மாலை மற்றும் மலர் மாலைகள் அணிவித்தும் தேங்காய், பழம் படைத்து சுருள் வைத்தும் வழிபட்டனர்.

    விவேகானந்தபுரம் சந்திப்பில் ஊர்வலம் வந்த போது கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா சார்பில் பகவதி அம்மனுக்கு, எலுமிச்சம் பழம் மாலை மற்றும் மலர் மாலைகள் அணிவித்து தேங்காய் பழம் படைத்து சுருள் வைத்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திரத்தின் அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் அனுமந்தராவ், நிவேதிதா, கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன் மற்றும் கேந்திர ஆயுட்கால ஊழியர்கள், கேந்திர பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • தேவர் குருபூஜைக்கு வருகை தரும் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர ஆலோ சனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செய லாளர் தேனி.சை.அக்கீம் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சந்தன தாஸ் கலந்து கொண்டார்.மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நகர செயலாளர் வர வேற்றார். ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறி யாளர் சரீப் நன்றி கூறினார்.

    வருகிற 30-ந் தேதி பசும்பொன்னில் நடைபெற இருக்கிற தேவர் குருபூஜை அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

    கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் தலைமையில் 50 வாக னங்களில் சென்று அழைத்து வரவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன், மாவட்ட மாணவர் சங்க அமைப்பா ளர் கபில், நகர அமைப்பு செயலாளர் கார்த்திக், மண்டபம் ஒன்றிய செய லாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்தி ரன், ஒன்றிய செயலாளர் மக்தூம் கான், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம், மாவட்ட துணை அமைப்பா ளர் இஸ்மாயில், நகர துணை செயலாளர் பாலா, உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்ட னர்.

    இதுகுறித்து கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் கூறுகையில், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் தேவரின் நினைவிடத்தில் நடைபெற உள்ள குருபூஜை விழாவில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். அதற் காக வருகிற 30-ந் தேதி மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக வரும் அன்புமணி ராமதாசுக்கு எனது தலைமையில் கிழக்கு மாவட்ட பா.ம.க நிர்வாகி கள், தொண்டர்கள் பாரதி நகரில் இருந்து 50 அனுமதிக் கப்பட்ட வாகனங்களில் ராமநாதபுரம் எல்லை பார்த்திபனூர் சென்று உற்சாக வரவேற்பு கொடுக் கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • விருதுநகருக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்குகிறார்.

    விருதுநகர்

    தி.மு.க. மாநில இளைஞரணி செய லாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாளை (25-ந் தேதி) தேனி மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரவு விருதுநகருக்கு வருகிறார். ஆர்.ஆர்.ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கும் அவர், மறுநாள் (26-ந்தேதி) ராமமூர்த்தி ரோட்டில் நடைபெறும் பிரமாண்ட இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    அதனை தொடர்ந்து கல்லூரி சாலையில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடக்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தி.மு.க.வை சேர்ந்த 2 ஆயிரம் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி பேசுகிறார். மதியம் மருத்துவ கல்லூரி கலைஞரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    பின்னர் விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநதி ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

    விருதுநகர் மாவட்டத் திற்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக் கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்களும், அமைச்சர்களுமான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மற்றும் சீனிவாசன் எம்.எல்.ஏ., இளைஞரணி நிர்வாகிகள், கட்சியினர் செய்து வருகின்றனர்.

    • தேவர் ஜெயந்தி விழாவிற்கு வரும் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.
    • தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் தி.மு.க. சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., பிற்ப டுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வரும் 30-ம் தேதி பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.இந்த விழாவில் தி.மு.க தலைவரும், முதல்-அமைச்ச ருமான மு.க.ஸ்டா லின் கலந்து கொண்டு மரியாதை செலுத்த வருகை தர உள்ளார். முதல்வரை வரவேற்க 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கையில் இரு வண்ண கொடியுடன் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பெருமளவிலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ஏ.என்.ரகு, முன்னாள் அமைச்சர் சுந்தர ராஜன்,மாநில தீர்மா னக்குழு துணைத்தலைவர் திவாகரன், மாநில விவசாய அணி துணை ெசயலாளரும், முது குளத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகவேல், மாநில, மாவட்ட, நகர், பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண் குழந்தைகள் காப்போம் திட்ட விழிப்புணர்வு பயண குழுவினருக்கு பெரம்பலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது
    • கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ரிசர்வ் படையின் வீராங்கனைகள் நேற்று பெரம்பலூர் வந்தனர்.பெரம்பலுார் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் வளாகத்தில் நடந்த வரவேற்பு நிகழச்சிக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ. வடிவேல்பிரபு கொடியசைத்து வைத்து வழியனுப்பி வைத்தார்.நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன், கல்லூரி செயலாளர் விவேகானந்தன், இந்திய ரிசர்வ் படையின் .டி.எஸ்.பி. கார்த்திகேயன், ரோட்டரி சங்க பெரம்பலூர் மாவட்ட கவர்னர் கார்த்திகேயன், ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உலக சுற்றுலா தினம் செப்டம்பா் 27-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மலைரயில் அறக்கட்டளை தலைவா் நட்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ஊட்டி,

    உலக சுற்றுலா தினம் செப்டம்பா் 27-ந்தேதி கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி ஊட்டிக்கு மேட்டுப்பாளையம் மலை ரயிலில் வந்திருந்த 140 பயணிகளுக்கு மாவட்ட சுற்றுலாத்துறை சாா்பில் ரோஜா மலா் கொடுத்தும், சுற்றுலா கையேடுகள் மற்றும் இனிப்பு வழங்கியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடா்ந்து மலைரயில் பாதுகாப்புஇயக்கம் சாா்பில், ஊட்டியில் இருந்து குன்னூர் வரை பள்ளி மாணவ-மாணவிகள் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனா். நிகழ்ச்சியில் மலைரயில் அறக்கட்டளை தலைவா் நட்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×