search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூர் கடை வீதியில் டாஸ்மாக் கடை இடமாற்றத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு
    X

    கூடலூர் கடை வீதியில் டாஸ்மாக் கடை இடமாற்றத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு

    • குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்சாயத்து, பேரூர் கடை வீதியில் தனியார் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது.
    • அதிகாரிகள் பேச்சுவார்த்தையால், டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பட்டு, பேரூர் கள்ளை நெடுஞ்சாலையில் புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

    கரூர்

    குளித்தலை அடுத்த, கூடலுார் பஞ்சாயத்து, பேரூர் கடை வீதியில் தனியார் கட்டிடத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இங்கு மதுவாங்கி குடிப்பவர்கள், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து வந்தனர்.

    இந்நிலையில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொது மக்கள், பா.ஜ., மக்கள் பிரதிநிதிகள் சார்பில் கடை முற்றுகை, கடைஅடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையால், டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்பட்டு, பேரூர் கள்ளை நெடுஞ்சாலையில் புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திற்கு பஞ்., நிர்வாகம் மற்றும் பா.ஜ.,வினர், பொது மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×