search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிவேட்டை"

    • எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து வழிபட்டனர்
    • மலர் மாலைகள் அணிவித்து தேங்காய் பழம் படைத்து சுருள் வைத்து வழிபட்டனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவின் பரிவேட்டை நிகழ்ச்சியில் வழி நெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் எலுமிச்சம் பழம் மாலை மற்றும் மலர் மாலைகள் அணிவித்தும் தேங்காய், பழம் படைத்து சுருள் வைத்தும் வழிபட்டனர்.

    விவேகானந்தபுரம் சந்திப்பில் ஊர்வலம் வந்த போது கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா சார்பில் பகவதி அம்மனுக்கு, எலுமிச்சம் பழம் மாலை மற்றும் மலர் மாலைகள் அணிவித்து தேங்காய் பழம் படைத்து சுருள் வைத்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திரத்தின் அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் அனுமந்தராவ், நிவேதிதா, கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்மநாபன் மற்றும் கேந்திர ஆயுட்கால ஊழியர்கள், கேந்திர பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • வாள்-வில் அம்புக்கு கொலு மண்டபத்தில் பூஜை நடந்தது.
    • ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷபூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகனபவனி, நாதஸ்வரக் கச்சேரி, பாட்டுக் கச்சேரி, பரத நாட்டியம் போன்றவை நடைபெற்று வருகிறது. இரவில் வெள்ளிக் கலைமான் வாகனம், வெள்ளி காமதேனு வாகனம், வெள்ளி இமயகிரி வாகனம், போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் திருவிழாவான விஜயதசமி நாளான இன்று (செவ்வாய்கிழமை) மாலை நடக்கிறது. இதையொட்டி அம்மன் வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் குதிரைக்கு கொள்ளு, காணம் போன்ற உணவு வகைகள் படைத்து பூஜைகளும் நடத்தப்பட்டது.

    இன்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் அம்மன் வேட்டைக்கு பயன்படுத்தும் வாள்-வில், அம்பு போன்ற ஆயுதங்களையும் அதன்அருகில் பாணாசுரன் என்ற அரக்கனின் உருவ பொம்மையும் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து மதியம் 1-மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் தொடங்கியது.

    இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் வெளியே வரும் போதும், கோவிலின் பிரதான நுழைவு வாசல் வழியாக சன்னதி தெருவுக்கு வரும் போதும் போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

    ஊர்வலத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானைஅணிவகுத்து சென்றது. அதைத் தொடர்ந்து 2 குதிரைகளில் பக்தர்கள் வேடம் அணிந்து சென்றனர். இதனையடுத்து கோவில் ஊழியர் வாள் ஏந்திய படியும், சுண்டன்பரப்பை பரம்பரை தர்மகர்த்தா வில் -அம்பு ஏந்திய படியும் சென்றனர். அதனைத் தொடர்ந்து பஞ்ச வாத்தியம் கேரள புகழ் தையம் ஆட்டம், சிங்காரி மேளம், செண்டை மேளம், ஒயிலாட்டம், கோலாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலை 6.30 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது.

    அங்குபகவதி அம்மன், பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மகாதானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவிலுக்கு பகவதி அம்மன் செல்கிறார். அங்கு அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடக்கிறது.

    அதன் பிறகு அம்மனின் வாகனம் பஞ்சலிங்கபுரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபட்டனர். அம்மனின் வாகன பவனி முடிந்ததும் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் உள்ள காரியக்காரன் மடம் வந்து வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாகம் இணைந்து செய்து வருகிறது. பரிவேட்டை ஊர்வலத்தையொட்டி நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலும், அஞ்சுகிராமம் கன்னியாகுமரி சாலையிலும் இன்று பகல் 11 மணிக்கு பிறகு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    • அன்னதானம் வழங்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    களக்காடு அருகே உள்ள நடுச்சாலைப்புதூரில் பழமை வாய்ந்த ஆதிநாராயண சுவாமி கோவில் ஆனி மாத தேரோட்ட திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அய்யா நாராயண சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் நடக்கிறது. விழாவின் 8-ம் நாளன்று பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து இரவில் அய்யா நாராயணசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக கோவிலில் இருந்து புறப்பட்டார். பின்னர் அங்குள்ள பால் கிணற்றின் அருகே மேளதாளங்கள் முழங்க அய்யா நாராயணசுவாமி பரிவேட்டையாடினார்.

    இதன் அடையாளமாக கோவில் தர்மகர்த்தா ஸ்ரீரெங்கராஜன் அம்பு எய்தினார். அதன் பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

    • அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரம் நடத்தப்பட்டது.
    • தேரோட்டம் திங்கட்கிழமை நடைபெறுகிறது.

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் நாராயண சுவாமி கோவில் 94-வது ஆண்டு ஆனி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 8-ம் நாளான நேற்று பரிவேட்டை விழா நடந்தது.

    இதையொட்டி மாலையில் அய்யா நாராயண சுவாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும், சிறப்பு பணிவிடைகளும் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பரிவாரங்கள் புடைசூழ ஊருக்கு மேற்கே உள்ள காலங்கரை ஆற்றில் இறங்கி மேளதாளங்கள் முழங்க பரிவேட்டையாடினார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    • சுவாமிருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தை மாதம் கரிநாளில் நெல்லையப்பர், வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    இவ்வாறு நெல்லையப்பர் குதிரையில் வேட்டைக்கு செல்லும் போது, காந்திமதி அம்பாள், "கரிநாளில் வேட்டைக்கு செல்லக் கூடாது" எனத் தடுக்கிறார். ஆனால் தடையை மீறி, நெல்லையப்பர் பரி வேட்டைக்கு சென்றுவிடுகிறார். இதனால் கோபம் அடைந்த அம்பாள், நெல்லையப்பர் வேட்டை முடித்து திரும்பும் போது, கோவில் கதவை மூடியதாகவும், அதன் பின் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட, "திருமுருகன் பூண்டி பதிகம்" பாடிய பின் கோவில் நடை திறந்துள்ளதாக நிகழ்வு அமைந்துள்ளது.

    அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், சந்திரசேகரர் உற்சவ மூர்த்தியாக வெள்ளிக் குதிரை வாகனத்தில், கண்ணப்ப நாயனாருடன், கோவிலில் இருந்து புறப்பட்டு பழைய பேட்டையில் அமைந்துள்ள பரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சுவாமிருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுவாமி கோவிலுக்கு திரும்பினார்.

    சுவாமி கோவிலுக்கு வந்த போது, அம்பாளின் ஊடலினால், சுவாமி சன்னதி கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன்பின் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த "பதிகம்" பாடி, ஊடல் தீர்த்து வைத்தப் பின், கோவில் கதவு திறந்து சுவாமி கோவிலுக்குள் நுழைந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று காலை தொடங்கியது
    • வாள்-வில், அம்புக்கு கொலு மண்டபத்தில் பூஜை நடந்தது

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 26-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவை யொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்ன தானம், வாகனபவனி, நாதஸ் வரக்கச்சேரி, பாட்டுக்கச்சேரி, பரத நாட்டியம் போன்றவை நடைபெற்று வருகிறது.திருவிழாவை யொட்டி இரவில் வெள்ளிக் கலைமான் வாகனம், வெள்ளி காமதேனு வாகனம், வெள்ளி இமயகிரி வாகனம், போன்ற வாகனங்களில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளம் முழங்க பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரி வேட்டை திருவிழா 10-ம் திருவிழா வான விஜயதசமியான இன்று (புதன்கிழமை) மாலை நடக்கிறது. இதையொட்டி அம்மன் வேட்டைக்கு எழுந்தருளும் குதிரைக்கு கொள்ளு, காணம் போன்ற உணவு வகைகள் படைத்து பூஜைகள் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் அம்மன் வேட்டைக்கு பயன்படுத்தும் வாள்-வில், அம்புபோன்றஆயுதங்களையும்அதன்அருகில் பாணாசுரன் என்ற அரக்கனின் உருவ பொம்மையும் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.அதன்பிறகுகாலை 10 மணிக்குகோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம் பழம் மாலைக ளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக்குதிரை வாகனத் தில் அம்மன்எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத் தொடர்ந்து காலை 11-30 மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம்நோக்கிஅம்மனின்பரிவேட்டை ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் வெளியே வரும் போதும் கோவிலின் பிரதான நுழைவு வாசல் வழியாக சன்னதி தெருவுக்கு வரும் போதும்போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளித்தனர். ஊர்வலத் துக்கு முன்னால் நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட 3 யானைகள் அணிவகுத்து சென்றன. அதைத் தொடர்ந்து 2 குதிரைகளில் பக்தர்கள் வேடம்அணிந்து சென்றனர். அதனை அடுத்து கோவில் ஊழியர் ரமேஷ் வாள் ஏந்திய படியும் சுண்டன் பரப்பைச் சேர்ந்த பரம்பரை தர்மகர்த்தா

    வில் - அம்பு ஏந்தியபடியும் சென்றனர். அதனைத் தொடர்ந்து பஞ்ச வாத்தியம் கேரளபுகழ்தையம்ஆட்டம், சிங்காரி மேளம், செண்டை மேளம், ஒயிலாட்டம், கோலாட்டம், தேவராட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம் மற்றும் 100-க்கும் மேற்பட்டகிராமிய கலைஞர்கள் பங்கேற்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கோவிலில் இருந்து புறப்பட்ட அம்ம னின் பரிவேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாக மாலை 6.30 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மகா தானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி கோவிலுக்கு பகவதிஅம்மன் செல்கிறார்.

    அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடக்கிறது. அதன் பிறகு அம்மனின் வாகனம் பஞ்சலிங்கபுரத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வழிநெடுகிலும் பக்தர்கள் அம்மனுக்கு எலுமிச்சம் பழம் மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து "திருக்கணம்" சாத்தி வழிபடுகிறார்கள். அம்மனின் வாகன பவனி முடிந்ததும் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் உள்ளகாரியக்காரன்மடம் வந்து வெள்ளி குதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 9.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்த தும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாகம், பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகிறது. பரிவேட்டை ஊர்வலத்தையொட்டி நாகர் கோவில்- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையிலும் அஞ்சுகிராமம் கன்னியா குமரி சாலையிலும்இன்று காலை11மணிக்குபிறகு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பரிவேட்டை ஊர்வலத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மேயர் மகேஷ், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரை பாரதி, அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், கவுன்சிலர் ஆனிரோஸ் தாமஸ், குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞான சேகர், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் செயல் அலுவலர் ராஜேந்திரன், கொட்டாரம் நகர செயலாளர் வைகுண்டபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரிபோலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர். கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    • நவராத்திரி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நடக்கிறது
    • நாளை மறுநாள் நடக்கிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 6-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம் மாலையில் சமய உரை அதைத்தொடர்ந்து பாட்டு கச்சேரி நாதஸ்வர கச்சேரி பட்டிமன்றம் பரதநாட்டியம் போன்றவை களும் இரவில் வாகன பவனி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் திருவிழா வான நாளை மறுநாள் நடக்கிறது. இதையொட்டி நாளை மறுநாள்அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 9.15 மணிக்கு மேல் 10.15மணிக்குள் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சம்பழம் மாலை களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாக னத்தில்அம்மன் எழுந் தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் 10.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    பகல் 11-30 மணிக்கு கோவிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் தொடங்குகிறது. இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்குதிரை வாக னத்தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும்போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர். கோவிலில் இருந்து புறப்படும் அம்மனின் பரிவேட்டை ஊர்வலம் சன்னதிதெரு, தெற்குரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டான சந்திப்பு வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.

    அதனைத் தொடர்ந்து மகாதானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவி லுக்கு பகவதி அம்மன் செல்கிறார். அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவாமிக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடக்கிறது. அதன் பிறகு அம்மனின் வாகன பவனி மகாதானபுரம் கிராமம் மற்றும் பஞ்சலிங்கபுரம் பகுதிக்கு செல்கிறது. வழி நெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து 'திருக்கணம்' சாத்தி வழிபடுகிறார்கள். பின்னர்அம்மன் மகாதான புரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்கார மடத்துக்கு செல்கிறார்.

    அங்கு வைத்துஅம்மன் வெள்ளி குதிரை வாக னத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்ததும் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாகம், பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகிறது. பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாது காப்புக்காக 500-க்கும் மேற்பட்ட போலீ சார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பரிவேட்டை திருவிழாவையொட்டி கன்னியாகுமரியில் போக்கு வரத்து மாற்றமும் செய்யப்பட்டுஉள்ளது. மேலும் நாகர்கோவில், கொட்டாரம், அஞ்சுகிராமம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து பரிவேட்டை திருவிழா நடக்கும் மகாதானபுரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பஞ்சலிங்கபுரம் ஊராட்சி சார்பில் சுகாதார வசதிகள் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பரிவேட்டை திருவிழாவை யொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு நாளை மறுநாள் பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுஉள்ளது.

    ×