search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அலங்கார ஊர்தி"

    • டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.
    • இதில் ஒடிசா சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் கடந்த 26-ம் தேதி குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடந்தது. அதில் நாட்டின் பன்முக கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

    இந்த அணிவகுப்பில் தமிழ்நாடு, ஆந்திரா, மணிப்பூர், உத்தர பிரதேசம் உள்பட 16 மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இவை தவிர மத்திய அமைச்சரவையின் 9 அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன.

    இதற்கிடையே, சிறப்பான ஊர்திகளை இரு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்து பரிசு வழங்குவர். ஒன்றை நடுவர் குழுவினர் இறுதி செய்வர். இரண்டாவது பிரிவில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் சிறந்த ஊர்திகள் தேர்வு செய்யப்படும்.

    இந்நிலையில், குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு சார்பில் இடம்பிடித்த, 'பழந்தமிழகத்தின் குடவோலை முறை - மக்களாட்சியின் தாய்' என்ற கருப்பொருள் அடிப்படையிலான அலங்கார ஊர்தி, நடுவர் குழுவினரால் 3-ம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    கைவினை மற்றும் கைத்தறித் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஒடிசா சார்பில் இடம்பெற்ற அலங்கார ஊர்தி முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

    டோர்டோ சுற்றுலா கிராமத்தை பிரதிபலித்த குஜராத்தின் அலங்கார ஊர்தி இரண்டாம் பரிசையும், மக்கள் தேர்வில் முதலிடமும் பிடித்தது.

    • 'முத்தமிழ்த்தேர்' பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    • நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் எழுத்தாளர்-கலைஞர் குழு சார்பில் 'முத்தமிழ்த்தேர்' அலங்கார ஊர்தி பயணம் கடந்த 4-ம்தேதி முதல் வருகிற டிசம்பர் 5-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    'முத்தமிழ்த்தேர்' பயணிக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 100 மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில், இன்றைய இளம் தலைமுறையினருக்கு கருணாநிதி பன்முகத் தன்மையினை எடுத்துச் செல்லும் வகையில், "எழுத்தாளர் கலைஞர் குழுவின்" மூலம் தயார் செய்யப்பட்ட, அவரது புகழ்பாடும் "முத்தமிழ்த்தேர் - அலங்கார ஊர்தி", நேற்று காங்கயம் பஸ் நிலையத்திற்கு வருகை புரிந்தது.

    அப்போது காங்கயம் தி.மு.க. நகர செயலாளர் வசந்தம் சேமலையப்பன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் காங்கயம் தாசில்தார் மயில்சாமி, நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், காங்கயம் நகராட்சி ஆணையர் கனிராஜ், வெள்ளகோவில் நகர செயலாளர் சபரிமுருகானந்தன், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், காங்கயம் நகர துணைச் செயலாளர் சுப்பிரமணி, நகராட்சி துணைத் தலைவர் கமலவேணி ரத்தினகுமார், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி நேற்று இரவு காங்கயத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை ஈரோடு செல்கிறது.

    • ராமநாதபுரத்தில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்திக்கு மலர் தூவி கலெக்டர் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் என திரளாக பங்கேற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பார்த்தி பனூர்-மருச்சுக்கட்டியில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் எம்.எல்.ஏ.க்கள் செ. முருகேசன் (பரமக்குடி), காதர்பாட்ஷா முத்துராம லிங்கம் (ராமநாதபுரம்) ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கி முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தியினை மலர்தூவி வரவேற்றார்.

    முன்னதாக இந்த முத்த மிழ்த்தேர் அலங்கார ஊர்தி மதுரையிலிருந்து ராமநாதபு ரம் மாவட்டத்திற்கு வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் நுழைவு பகுதியான மருச் சுக்கட்டியில் முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியினை வரவேற்கப்பட்டதுடன் முத் தமிழ்த்தேர் அலங்கார ஊர் தியில் அமைந்துள்ள டாக்டர் கலைஞரின் திருவுரு வச்சிலைக்கு கலெக்டர் பா. விஷ்ணு சந்திரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் முருகேசன், காதர்பாட்ஷா முத்துராம லிங்கம், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் திசைவீரன் ஆகியோர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் வனத்துறையின் மூலம் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 100 மரக்கன்றுகள் நடும் பணி யினை கலெக்டர் விஷ்ணுசந் திரன் மற்றும் எம்.எல். ஏ.க்கள் நடவு செய்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து கலைஞர் நூற் றாண்டு விழாவை யொட்டி பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு பேனா வழங்கினர்.

    விழாவையொட்டி நாதஸ்வர நிகழ்ச்சி, சிலம் பாட்டம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. பின்னர் முத்த மிழ்த்தேர் அலங்கார ஊர்தி ராமநாதபுரத்திற்கு வருகை தந்து ஏராளமான பொது மக்கள் அலங்கார ஊர்தியி னையும் அதன் உள்ளே உள்ள டாக்டர் கலைஞரின் திருவுருவச் சிலையையும் பார்வையிட்டு சென்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜக்தீஷ் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, பர மக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், மாவட்ட வனஅலுவலர் எஸ்.ஹேம லதா, பரமக்குடி நகர் மன் றத்தலைவர் சேது கருணா நிதி, ராமநாதபுரம் நகர் மன்றத்தலைவர் ஆர்.கே.–கார்மேகம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்த லைவர் கே.டி.பிரபாகரன்,

    ராமநாதபுரம் நகர்மன்ற துணைத் தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) தேன்மொழி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விசுபாபதி, பரமக்குடி வட்டாட்சியர் ரவி, அச்சுந் தன்வயல் ஊராட்சி மன்றத்த லைவர் சசிகலா அவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற 26-ந்தேதி நாட்டின் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.
    • 2022-ல் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    புதுடெல்லி :

    குடியரசு தின விழாவையொட்டி ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் (தற்போது கடமையின் பாதை) மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். கடந்த ஆண்டு (2022) இந்த அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாராளுமன்றத்திலும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது.

    மேலும், மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், "குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளை தேர்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. எந்த எந்த மாநிலங்கள் சார்பில், என்ன என்ன அலங்கார ஊர்திகள் இடம்பெற வேண்டும்? என்பதை அந்த குழுவே முடிவு செய்யும்" என கூறியிருந்தார்.

    இதனைத்தொடர்ந்து, டெல்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. வேலுநாச்சியார் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களை முன்னிலைப்படுத்திய இந்த ஊர்தி தமிழகத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    இந்தநிலையில் வருகிற 26-ந்தேதி நாட்டின் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள ராஜபாதை சீரமைக்கப்பட்டு 'கடமையின் பாதை' ஆக்கப்பட்டு உள்ளது. இந்த பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றுகிறார். தொடர்ந்து அங்கு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பையும், வீரர்களின் சாகசங்களையும் பார்க்கிறார்.

    இந்த நிகழ்வில் இந்த ஆண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்தியும் பங்கேற்க உள்ளது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் மாதிரிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

    கொரோனா கால வழிகாட்டல்களை பின்பற்றியும், அணிவகுப்புக்கான பல்வேறு விதிமுறைகளை பின்பற்றியும் ஊர்திகளை வடிவமைக்குமாறு இந்த மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    ஊர்திகள் வடிவமைக்கும் பணிகள் டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் நடைபெறும். பணிகள் முடிந்ததும் அலங்கார ஊர்திகளுக்கான குழு அவற்றை பார்வையிட்டு அனுமதி வழங்கும் என கூறப்படுகிறது.

    ×