குடியரசு தின அலங்கார ஊர்தி புறக்கணிப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு எடப்பாடி கண்டனம்

தி.மு.க. அரசின் திறனற்ற நிர்வாகத்தால் அலங்கார ஊர்தி இடம்பெறாத நிலை.வருடந்தோறும் அலங்கார அணிவகுப்பு ஊர்தி இடம்பெறுவது மரபு.
குடியரசு தின அலங்கார ஊர்தி புறக்கணிப்பு: மத்திய, மாநில அரசுகளுக்கு எடப்பாடி கண்டனம்
Published on

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

குடியரசு தின விழாவில் தலைநகர் டெல்லியில் வருடந்தோறும் நடக்கின்ற அணிவகுப்பில் , தமிழகத்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை உயர்த்தி காட்டும் தமிழகத்தின் அலங்கார அணிவகுப்பு ஊர்தி அ.தி.மு.க. ஆட்சிக்காலங்களில் இடம்பெறுவது மரபு.

ஆனால் தி.மு.க. அரசின் திறனற்ற நிர்வாகத்தால், குடியரசு தின விழாவில் இந்த ஆண்டும் அலங்கார ஊர்தி இடம்பெறாத வெட்கக் கேடான நிலை உருவாகியுள்ளதாக அறிகிறேன்.

தி.மு.க. அரசின் தொடர் அலட்சிய நிர்வாகத்திற்கும், அனுமதி வழங்காத மத்திய அரசுக்கும் எனது கடுமையான கண்டனங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com