search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை ரெயில்கள் மின்சார என்ஜினில் இயக்கம்
    X

    செங்கோட்டை ரெயில்கள் மின்சார என்ஜினில் இயக்கம்

    • செங்கோட்டை ரெயில்கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகிறது.
    • பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர்-செங் கோட்டை ரெயில்வே பிரிவு மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன. இதையடுத்து இன்று முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை, சிலம்பு மற்றும் மயிலாடு துறை விரைவு ரெயில்கள் மின்சார என்ஜின் மூலம் இயக்கப்படுகின்றன.

    இதற்காக இந்த பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மின் வழித்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட இருக்கிறது. ஆகவே இந்த ரெயில் தடம் செல்லும் பகுதியில் உள்ள பொதுமக்கள் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம் என ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மழை மற்றும் மின்னல் வெட்டும் நேரங்களில் குடையுடன் மின் வழித் தடத்தின் கீழே கடப்பதும் ஆபத்தை விளைவிக்கும். மேம்பாலங்களில் இருந்து மின்வழித்தடத்தின் மேல் ஏதாவது ஒரு பொருளை எறிந்தாலும் கடும் மின்சார தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ரெயில்வே நிர்வா கத்தின் அனுமதியில்லாமல் மின் வழித்தடத்தின் அருகில் உள்ள மரங்களை வெட்டு வது, மரக்கிளைகளை செம்மைப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.

    லெவல் கிராசிங்குகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெயில்வே நிர்வாகம் செய்திருந்த போதிலும், ரெயில்வே லெவல் கிராசிங்குகளை கடக்கும்போது நீண்ட இரும்பு கம்பிகளை செங்குத்தாக வைத்துக் கொண்டு நடப்பதும், வாகனங்கள் மேல் பகுதி யில் அமர்ந்து பயணிப்ப தும், வாகனங்களில் சரக்கு களை உயரமாக அளவுக்கு அதிகமாக வைத்து செல்வ தும் ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்கள் ஆகும்.

    சென்னையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ் பிரஸ் மற்றும் மயிலாடுதுறை இருந்து புறப்படும் செங் கோட்டை விரைவு ரெயில் கள் மின்சார என்ஜினில் இயக்கப்படுகின்றன.

    அதேபோல் இன்று செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், நாளை

    (2-ந்தேதி) செங்கோட்டை யில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆகியவற்றில் மின்சார என்ஜினில் இயக்கப்படுகின்றன.

    இந்த நிலையில் முதல் முறையாக மின்சார என்ஜினுடன் வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு ராஜபாளையம் ெரயில் பயனாளர் சங்கம் சார்பில் ராஜபாளையம் ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ரெயில் என்ஜினுக்கு மாலை, அலங்காரங்கள் செய்யப்பட்டு ஓட்டுநர், உதவி ஓட்டுநர் மற்றும் என்ஜின் ஆய்வாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.

    Next Story
    ×