search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவர் குருபூஜைக்கு வருகை தரும் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு
    X

    பா.ம.க. ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

    தேவர் குருபூஜைக்கு வருகை தரும் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு

    • தேவர் குருபூஜைக்கு வருகை தரும் அன்புமணி ராமதாசுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் அவசர ஆலோ சனை கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செய லாளர் தேனி.சை.அக்கீம் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் சந்தன தாஸ் கலந்து கொண்டார்.மாவட்ட துணை செயலாளர் தொண்டி ராசிக், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நகர செயலாளர் வர வேற்றார். ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறி யாளர் சரீப் நன்றி கூறினார்.

    வருகிற 30-ந் தேதி பசும்பொன்னில் நடைபெற இருக்கிற தேவர் குருபூஜை அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு ராமநாதபுரம் மாவட்ட பா.ம.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

    கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் தலைமையில் 50 வாக னங்களில் சென்று அழைத்து வரவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் லட்சுமணன், மாவட்ட மாணவர் சங்க அமைப்பா ளர் கபில், நகர அமைப்பு செயலாளர் கார்த்திக், மண்டபம் ஒன்றிய செய லாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்தி ரன், ஒன்றிய செயலாளர் மக்தூம் கான், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராகிம், மாவட்ட துணை அமைப்பா ளர் இஸ்மாயில், நகர துணை செயலாளர் பாலா, உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்ட னர்.

    இதுகுறித்து கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் கூறுகையில், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் தேவரின் நினைவிடத்தில் நடைபெற உள்ள குருபூஜை விழாவில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார். அதற் காக வருகிற 30-ந் தேதி மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக வரும் அன்புமணி ராமதாசுக்கு எனது தலைமையில் கிழக்கு மாவட்ட பா.ம.க நிர்வாகி கள், தொண்டர்கள் பாரதி நகரில் இருந்து 50 அனுமதிக் கப்பட்ட வாகனங்களில் ராமநாதபுரம் எல்லை பார்த்திபனூர் சென்று உற்சாக வரவேற்பு கொடுக் கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×