search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே பூத்துக்குலுங்கும் கோழிகொண்டை பூக்கள்
    X

    பண்ருட்டி தொரப்பாடி பகுதியில் பூத்துக் குலுங்கும் கோழி கொண்டை பூக்களை படத்தில் காணலாம்.

    பண்ருட்டி அருகே பூத்துக்குலுங்கும் கோழிகொண்டை பூக்கள்

    • சிவப்பு மற்றும் ரோஜா வண்ணப் பூக்களே அதிகமாக பயிரிடப்படுகிறது
    • விவசாயிகள் ஈடுபடும் போது வரத்து அதிகரித்து விலை குறைவது இயல்பாகும்.

    கடலூர்:

    விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி பேரூராட்சியில் கண்ணைக் கவரும் விதத்தில் கோழிக்கொண்டைப் பூக்கள் காட்சியளிக்கிறது. பொதுவாக கோழிக்கொண்டைப் பூக்கள் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, ரோஜா வண்ணங்களில் பூக்கும். ஆனால் சிவப்பு மற்றும் ரோஜா வண்ணப் பூக்களே அதிகமாக பயிரிடப்படுகிறது. வாசமில்லாத மலர் என்றாலும் கண்ணைக் கவரும் இதன் அழகு மற்றும் 8 நாட்கள் வரை வாடாத தன்மை ஆகியவையே இந்த பூக்களை அதிகம் பயன்படுத்துவதற்குக் காரணமாகிறது.

    இந்த கோழிக்கொ ண்டைப் பூக்களை மாலையில் வைத்துக் கட்டும் போது ரோஜாப்பூக்களின் தோற்றத்தைத் தருகிறது. இதனாலே இந்த பூக்களுக்கு எல்லா சீசனிலும் வரவேற்பு உள்ளது. பண்ருட்டி சுற்றுவட்டாரப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரேவிதமான பயிர் சாகுபடியில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபடும் போது வரத்து அதிகரித்து விலை குறைவது இயல்பாகும். இதனால் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை தொடர்கிறது. இதனைத் தவிர்க்கும் விதமாக கோழிக்கொண்டை பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இவை மழைக்காலம், கோடைக் காலம், குளிர் காலம் என எல்லா பருவங்களுக்கும் ஏற்றதாக உள்ளது.

    Next Story
    ×