என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சர்வதேச தடகள வீரருக்கு உற்சாக வரவேற்பு
- மீன்சுருட்டி தடகள வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
- சர்வதேச போட்டியில் 3 தங்கம் வென்றுள்ளார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள முத்து சேர்வாமடம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன்,உமாபிரியா தம்பதியின் மகன் ஆகாஷ்.தடகள விளையா ட்டுகளில் தீவிர பயிற்சி மேற்கொண்ட இவர், மாநில அளவிலான போட்டிக்கு தயாரானார். நிகழாண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்ப தக்கங்கள் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தை வென்ற அவர், தொடர்ந்து நேபாளம், பொக்காரா சர்வதேச தடகள ஸ்டேடியத்தில் இந்தோ-நேபால் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு சார்பில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் கலந்து கொண்டார்.போட்டிகளில் இந்தியா, நேபால், இலங்கை, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த வீரர்க ள்கலந்து கொண்டனர். இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், 100 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு ஆகாஷ் தங்கப் பதக்கங்களை வென்றார்.
இந்நிலையில், பதக்கம் வென்ற ஆகாஷ், செந்த ஊருக்கு திருபினார். அங்கு அவருக்கு வர்த்தக சங்கத் தலைவர் ராஜா ஜெயராமன் தலைமையில் கிராம மக்கள் பட்டாசு வெட்டித்தும், பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் சொந்த கிராமமான முத்துசேர்வா மடத்துக்கு சென்றார்.அங்கு அவரது உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளி த்தனர். பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய ஆகாஷ், இந்திய ராணுவத்தில் பணிபுரிவதே தனது வாழ்நாள் லட்சியமாகும். இதற்காக தொடர்ந்து உடல் தகுதி மற்றும் திறன் தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக பயிற்சி எடுத்த போது விளையா ட்டில் அதிக ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து முயற்சி செய்ததன் பலனாக மாநில தேசிய போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சர்வதேச போட்டியிலும் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை பெற்று திரும்பியு ள்ளேன். எதிர்காலத்தில் ஆசியப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு தயாராகி வருகிறேன் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்