search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரதட்சணை"

    • மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்த அரசு ஊழியர் மீது போலீசில் புகார் செய்தார்.
    • அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்

    மதுரை

    மதுரை திருப்பாலை அய்யப்பன் நகர் தாமரை வீதியைச் சேர்ந்தவர் பவித்ரா (வயது 25). இவர் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-

    எனக்கும் துருண் குமாருக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. அப்போது எனக்கு பெற்றோர் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர். மேலும் ரூ. 10 லட்சம் செலவில் திருமணம் செய்து வைத்தனர்.

    மதுரை பாலமேடு அரசு கால்நடை ஆஸ்பத்திரியில் துருண்குமார் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் திருமண நாள் அன்று அவருக்கு ஆண்மை குறைபாடு உள்ளது என தெரியவந்தது. இருந்தபோதிலும் வேறு வழி யின்றி அவருடன் குடித்த னம் நடத்தி வந்தேன்.

    இந்த நிலையில் துருண் குமாரின் அண்ணன் அருண்குமார் எனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு அவரது மனைவி திவ்யா, அவரது தாய் தனலட்சுமி மற்றும் உறவினர் சரவணன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

    எனவே நான் இது தொடர்பாக கணவரிடம் புகார் செய்தேன். அப்போது அவர் என் சகோதரரை அனுசரித்து நடந்து கொள் என்று தெரிவித்தார். இந்த நிலையில் துருண்குமார் குடும்பத்தினர் வரதட்சணையாக மேலும் ரூ.10 லட்சம் வாங்கி வரும்படி என்னை மிரட்டி னார்கள். இதற்கு நான் மறுத்தேன்.

    எனவே அவர்கள் என்னை பட்டினி போட்டு கொல்ல பார்க்கிறார்கள். எனவே போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    இந்த புகாரின்பேரில் மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வரதட்சணை கொடுமை: 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    • 40 பவுன் நகை, ரொக்கம், மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசைகளை கொடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை கலைஞர் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மகள் கார்த்திகா (வயது 25). இவருக்கும், ராமர்பாண்டி ராஜா என்பவருக்கும் கடந்த ஜூன் மாதத்தில் திருமணம் நடந்தது.

    40 பவுன் நகை, ரொக்கம், மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசைகளை கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கார்த்திகாவிடம் மேலும் ரூ.10லட்சம் ரொக்கம் வாங்கிவர வேண்டும் என்று கூறி கொடுமைபடுத்தி உள்ளனர்.

    சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகை பெற்றோர் வீட்டில் ராமர்பாண்டி ராஜா விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு தொடர்பு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி கார்த்திகா, ராமர்பாண்டி ராஜாவை சந்தித்து பேச சென்றுள்ளார்.அப்போது ராமர்பாண்டி ராஜா மற்றும் அவரது உறவினர்கள் சுப்பிரமணியன், ராஜாத்தி, ராஜேஸ்வரி, மீனாட்சி உள்பட 6 பேர் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து கார்த்திகா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் அவர்கள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பெண் தற்கொலை வழக்கில் கணவர் உட்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
    • இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் டிரைவர் சமையன் (வயது 27). இவரது மனைவி வைரலட்சுமி (27). இவர்களுக்கு 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    சமையன், அவரது தந்தை நாகராஜ்(52), தாய் யசோதை (45) ஆகிய 3 பேரும் சேர்ந்து வைரலட்சுமியிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். இதனால் விரக்தியடைந்த வைர லட்சுமி கடந்த 2015-ம் ஆண்டு வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சமையன், அவரது தந்தை நாகராஜ், தாய் யசோதை ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.

    அதில் சமையன், அவரது தந்தை நாகராஜ், தாய் யசோதை ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 10 பவுன் நகைகள் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே பேரையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி (வயது 23). இவருக்கும், சாப்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (27) என்ப வருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது ஜெகதீஸ்வரியின் பெற்றோர் 25 பவுன் நகைகள், ரூ. 2½ லட்சம் ரொக்கப்பணம் வரதட்ச ணையாக கொடுத்துள்ளனர். செல்வகுமார் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் அவர் தனது மனைவியுடன் சென்னையில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் அவர் பணி காரணமாக அமெரிக்கா செல்ல இருந்தார். ஆகவே அவர் தனது மனைவியை சாப்டூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு, அமெரிக்கா சென்று விட்டார். மாமனார் மற்றும் மாமியாருடன் ஜெகதீஸ்வரி வசித்து வந்தார்.

    அப்போது அவரிடம் ரூ. 5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 10 பவுன் நகைகள் கூடுதல் வரதட்சணை கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெகதீஸ்வரி கணவர் வீட்டில் இருந்து பேரையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனைத்தொடர்ந்து செல்வகுமார் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்ட தொல்லை தந்ததாக தனது கணவர் குடும்பத்தினர் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் ஜெகதீஸ்வரி புகார் செய்தார்.

    அதன் பேரில் செல்வகுமார், அவரது தாய் மற்றும் தந்தை ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீழக்கரையில் ரூ. 2 கோடி வரதட்சணை கேட்டு இளம் பெண்ணுக்கு கொடுமை நடந்துள்ளது.
    • இதுதொடர்பாக கணவர், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவை சேர்ந்தவர் வருசை இப்ராகிம். இவரது மகன் பெர்னாஷ் அகமது (வயது33). இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 10-ந்தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது 50 பவுன் நகை சீதனமாக கொடுத்தனர். திருமணத்திற்கு பிறகு பெர்னாஷ் அகமது மனைவி வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டை விற்று ரூ. 2 கோடி வாங்கி வருமாறு மனைவிக்கு நெருக்கடி கொடுத்தார். நாள்தோறும் குடித்து விட்டு வந்து மனைவியை தகாத வார்த்தைகள் பேசி அடித்து கொடுமைப்படுத்தி வந்ததுடன், சீதனமாக வழங்கிய நகையில் 8 பவுன் நகையை எடுத்துச் சென்று விட்டாராம்.

    மனைவியின் வீட்டுக்கு வந்த கணவர் பெர்னாஸ் அகமது மற்றும் அவரது தாயார், சித்தி ஆகியோர் வரதட்சணையாக ரூ.2 கோடி கொடுத்தால் தான் உன் மகளை வாழ வைப்பேன் என்று பெண்ணின் பெற்றோரிடம் கூறி பிரச்சினை செய்தனர்.

    இதுகுறித்து இளம் பெண் கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி பெண்ணின் கணவர், அவரது தாய், சித்தி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மன வேதனை அடைந்த திருமலை செல்வி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
    • மகேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் போலீசார், மாரிதுரை மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் மகேஷ்வரன்(வயது 29). இவரது தங்கை திருமலை செல்வி(27).

    பெயர் சூட்டு விழா

    இவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தை சேர்ந்த மாரிதுரை என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆன பிறகு மாரிதுரை பெயர் சூட்டு விழா வைத்துள்ளார். ஆனால் அதற்கு மகேஷ்வரனை அழைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த மகேஷ்வரன் தனது மைத்துனர் வீட்டுக்கு சென்று தன்னை அழைக்காதது குறித்து கேட்டுள்ளார்.

    ரூ.5 லட்சம்

    அப்போது மாரிதுரை, அவரது தாய் மற்றும் அத்தை ஆகிய 3 பேரும் சேர்ந்த ரூ.5 லட்சம் வரதட்சணையாக தந்தால் மட்டுமே விழாவுக்கு அழைப்போம் என்று கூறி உள்ளனர்.

    இதனால் 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் மாரிதுரை தனது மனைவி திருமலை செல்வியை அடித்ததாக கூறப்படுகிறது.

    தற்கொலை முயற்சி

    இதனால் மன வேதனை அடைந்த திருமலை செல்வி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    இதுதொடர்பாக மகேஷ்வரன் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மாரிதுரை மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியபிரபு. இவரது மனைவி கலைசெல்வி(வயது 31). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தையும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

    கலைச்செல்வி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவர் சமீபத்தில் பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அவரது நகைகளை ஆரோக்கியபிரபு மற்றும் அவரது பெற்றோர் அடகு வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

    விசாரணை

    பிரசவம் முடிந்து கலைச்செல்வி தனது வீட்டுக்கு சென்றபோது நகைகள் குறித்து கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது கணவர் முறையாக பதிலளிக்காமல் அவரை அடித்து பெற்றோர் வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அவர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியபிரபு மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

    • மனைவி-குழந்தையை அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே ஆதன் கொத்தன்குடியைச் சேர்ந்தவர் கயல்விழி (வயது22). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் நாகராஜனுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது 30 பவுன் நகையும், 5 பவுன் நகையும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும், இருசக்கர வாகனம் வாங்க ரூ.1 லட்சம் பெண்ணின் பெற்றோரால் கொடுக்கப்பட்டுள்ளது.

    திருமணத்திற்கு பின்பு கயல்விழி அவரது கணவருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நாகராஜன் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் கயல்விழிக்கு திருமணத்தின்போது போட்ட நகைகள் குறைவு என்றும், எனவே மேலும் 20 பவுன் நகை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் வரதட்சனை கொடுக்க வில்லை என்றால் நாகராஜனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விடுவோம் என்று மிரட்டியதாகவும், கயல்விழி மற்றும் அவரது குழந்தையையும் அடித்து கொடுமைப்படுத்தி தனியறையில் வைத்து பூட்டி சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கயல்விழி தனது கணவர் நாகராஜன், அவரது தாய்லட்சுமி (59), உறவினர்கள் வேல்முருகன், அவரது மனைவி செல்வி (30) மற்றும் மேகலா (30), நவநீதகிருஷ்ணன், ஆனந்தராஜ், ரேணுகா ஆகிய 7 பேர் மீது மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் உத்தரவின்படி கீழக்கரை அனைத்து மகளிர் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண் சிகிச்சை பெற்றுவருகிறார்.
    • மாமியாருக்கு சிறை தண்டனை

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையில் உள்ள எம்.தெற்குதெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவரது மனைவி வினோசியா(வயது22). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கா தல் திருமணம் செய்த இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வினோசியாவை, அவரது மாமியாரான சீனிவாசனின் மனைவி காந்திமதி(55) வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கடந்த 17-ந் தேதி மழையூர் போலீஸ் நிலையத்தில் வினோசியா புகார் கொடுத்தார். அந்த புகார் மனு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் வினோசியாவை காந்திமதி திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வினோசியா வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டனர். மேலும் இது குறித்து வினாசியாவின் பெற்றோரக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வினோசியா பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில் காந்திமதியை, சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி நேற்று கைது செய்தார். பின்னர் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய்பாரதி முன்பு ஆஜர்படுத்தி திருச்சி பெண்கள் சிறையில் போலீசார் அடைத்தனர்.

    • பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக மதுரை மின்வாரிய உயர் அதிகாரி குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கொண்டல்ராஜ், மதுரை தலைமை மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக (பாதுகாப்பு) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    மதுரை

    மதுரை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் வர்ஷா (வயது 24). இவர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்ப தாவது:-

    நான் பி.எஸ்.சி. பேஷன் டிசைனிங் படித்து உள்ளேன். எனது தந்தை கே.புதூரில் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் எனக்கு ஜனார்த்தனன் என்பவருடன் திருமணமா னது. அப்போது என் வீட்டார் சார்பில் 23 லட்சம் ரூபாய் செலவில் நிலம் ஒன்றை வாங்கி கொடுத்தோம். திருமணத்தின்போது 300 பவுன் நகை வரதட்ச ணையாக கொடுக்கப்பட்டது. இது தவிர 15 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கணவர் ஜனார்த்தனன் தினந்தோறும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து கூடுதல் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு அவரது தந்தை கொண்டல்ராஜ் மற்றும் தாய் சுமதி ஆகியோர் உடந்தையாக உள்ளனர்.

    எனது தந்தை பெயரில் உள்ள கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை, என் பெயருக்கு மாற்ற வேண்டுமென்று ஜனார்த்தனன் தொந்தரவு செய்து வந்தார். எனவே நான் தற்கொலை முயற்சி செய்தேன். அப்போது என்னை உறவினர்கள் காப்பாற்றினார்கள். எனக்கு வரதட்சணை கொடுமை செய்துவரும் ஜனார்த்தனன், கொண்டல்ராஜ் மற்றும் சுமதி ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    எனவே இதில் தொடர்பு உடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் அக்பர்கான் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொண்டல்ராஜ், மதுரை தலைமை மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக (பாதுகாப்பு) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    • நிச்சயதார்த்தம் நடந்த ஆல்பத்தை கையில் வைத்துகொண்டு ஜோடியாக இருந்த புகைப்படங்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.
    • வரதட்சணை அதிகம் கேட்கும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சன்மார்க்கம். இவரின் மூத்த மகள் ஷகிலாவிற்கும், நாகை அடுத்துள்ள திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தாங்குடி கிராமத்தை சேர்ந்த குமார் -விஜயா இவர்களின் மகன் சரவணன் என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 21ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இருவீட்டாரின் சம்மதத்துடன் நடந்த நிச்சயதார்த்த நிகழ்வில் ஜூன் 17ம் தேதி திருமணம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்ட நிலையில், சரவணன் தொடர்ந்து அலட்சியமாக இருந்துள்ளார். 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நிச்சயதார்த்த விழா நடத்தி, அவசர தேவைக்காக 40 ஆயிரம் ரூபாயும் வழங்கிய பெண்ணின் குடும்பத்தாரை ஏமாற்றி வரும் சரவணன் மீது நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

    புகாரை போலீசார் வாங்க மறுத்ததால் பெண் சகிலா மற்றும் அவருடைய குடும்பத்தினர் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது. நிச்சயதார்த்தம் நடந்த ஆல்பத்தை கையில் வைத்துகொண்டு ஜோடியாக இருந்த புகைப்படங்களை காட்டி பாதிக்கப்பட்ட பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    நிச்சயம் முடிந்து திருமணம் செய்துகொள்ள மறுக்கும் சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வரதட்சணை அதிகம் கேட்கும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

    நாகை அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு நிச்சயம் முடிந்த பிறகு திருமணம் செய்துகொள்ளாமல் தலைமறைவான நபரை கண்டித்து பாதிக்கப்பட்ட பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.
    • கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள அல்லிகுண்டத்தை சேர்ந்தவர் மகாராணி (வயது 32). இவருக்கும், குமாரலிங்கபுரத்தை சேர்ந்த டிரைவர் செல்லக்காளை என்பவருக்கும் 2019-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குழந்தைகளுடன் தந்தை வீட்டு வந்து விட்டார்.

    இந்த நிலையில் மகா ராணி திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கும், செல்ல க்காளைக்கு திருமணம் நடந்தபோது 23 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடு க்கப்பட்டன.

    இந்த நிலையில் பணம் கேட்டு அடிக்கடி கணவர் தொந்தரவு செய்து வந்தார். இதன் காரணமாக தந்தையிடம் இருந்து ரூ.80 ஆயிரம் வாங்கி கொடுத்தேன். ஆனால் மீண்டும் பணம் கேட்டு துன்புறுத்துகின்றனர்.

    இதற்கு உடந்தையாக கணவரின் பெற்றோர் செல்வராஜ்-லிங்க ம்மாள், சகோதரர் சுந்தரபாண்டி, அவரது மனைவி ஆனந்தவல்லி ஆகியோர் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடி ப்படையில் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக செல்லக்காளை உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×