search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ. 2 கோடி வரதட்சணை கேட்டு இளம் பெண்ணுக்கு கொடுமை
    X

    ரூ. 2 கோடி வரதட்சணை கேட்டு இளம் பெண்ணுக்கு கொடுமை

    • கீழக்கரையில் ரூ. 2 கோடி வரதட்சணை கேட்டு இளம் பெண்ணுக்கு கொடுமை நடந்துள்ளது.
    • இதுதொடர்பாக கணவர், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவை சேர்ந்தவர் வருசை இப்ராகிம். இவரது மகன் பெர்னாஷ் அகமது (வயது33). இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 10-ந்தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது 50 பவுன் நகை சீதனமாக கொடுத்தனர். திருமணத்திற்கு பிறகு பெர்னாஷ் அகமது மனைவி வீட்டில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டை விற்று ரூ. 2 கோடி வாங்கி வருமாறு மனைவிக்கு நெருக்கடி கொடுத்தார். நாள்தோறும் குடித்து விட்டு வந்து மனைவியை தகாத வார்த்தைகள் பேசி அடித்து கொடுமைப்படுத்தி வந்ததுடன், சீதனமாக வழங்கிய நகையில் 8 பவுன் நகையை எடுத்துச் சென்று விட்டாராம்.

    மனைவியின் வீட்டுக்கு வந்த கணவர் பெர்னாஸ் அகமது மற்றும் அவரது தாயார், சித்தி ஆகியோர் வரதட்சணையாக ரூ.2 கோடி கொடுத்தால் தான் உன் மகளை வாழ வைப்பேன் என்று பெண்ணின் பெற்றோரிடம் கூறி பிரச்சினை செய்தனர்.

    இதுகுறித்து இளம் பெண் கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி பெண்ணின் கணவர், அவரது தாய், சித்தி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×