search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி-குழந்தையை அறையில் பூட்டி வைத்து சித்ரவதை
    X

    மனைவி-குழந்தையை அறையில் பூட்டி வைத்து சித்ரவதை

    • மனைவி-குழந்தையை அறையில் பூட்டி வைத்து சித்ரவதை செய்த கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே ஆதன் கொத்தன்குடியைச் சேர்ந்தவர் கயல்விழி (வயது22). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் நாகராஜனுக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது 30 பவுன் நகையும், 5 பவுன் நகையும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களும், இருசக்கர வாகனம் வாங்க ரூ.1 லட்சம் பெண்ணின் பெற்றோரால் கொடுக்கப்பட்டுள்ளது.

    திருமணத்திற்கு பின்பு கயல்விழி அவரது கணவருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நாகராஜன் குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் கயல்விழிக்கு திருமணத்தின்போது போட்ட நகைகள் குறைவு என்றும், எனவே மேலும் 20 பவுன் நகை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் வரதட்சனை கொடுக்க வில்லை என்றால் நாகராஜனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விடுவோம் என்று மிரட்டியதாகவும், கயல்விழி மற்றும் அவரது குழந்தையையும் அடித்து கொடுமைப்படுத்தி தனியறையில் வைத்து பூட்டி சாப்பாடு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கயல்விழி தனது கணவர் நாகராஜன், அவரது தாய்லட்சுமி (59), உறவினர்கள் வேல்முருகன், அவரது மனைவி செல்வி (30) மற்றும் மேகலா (30), நவநீதகிருஷ்ணன், ஆனந்தராஜ், ரேணுகா ஆகிய 7 பேர் மீது மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் உத்தரவின்படி கீழக்கரை அனைத்து மகளிர் போலீசார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×