search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர்"

    காலில் அடிப்பட்டு, வீட்டில் இருந்தபடி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். வலிதாங்க முடியாமல் அடிக்கடி துடித்து வந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அடுத்த ஓமந்தூரை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 60). இவரது காலில் அடிப்பட்டு, வீட்டில் இருந்தபடி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். வலிதாங்க முடியாமல் அடிக்கடி துடித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் தோட்டத்திற்கு சென்ற நாராயணசாமி, அங்கிருந்த வேப்பமரத்தில் வேட்டி யால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளியனூர் போலீசார், நாராயணசாமி உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பலனின்றி நாகூர் பிச்சை பரிதாபமாக உயிரிழந்தார்.
    • புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் சிவன்கொல்லை தங்கத்தாய் காலனியைச் சேர்ந்தவர் நாகூர் பிச்சை (வயது 58).

    சம்பவத்தன்று இவர் சைக்கிளில் சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த நாகூர் பிச்சையை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .

    அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி நாகூர் பிச்சை இறந்தார்.

    இது பற்றிய புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    3 மாதங்களாக அடிக்கடி தனிமையில் இருப்பதும், தானாக பேசுவதுமாக இருந்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவியில் வசித்து வந்தவர் ஜெய கோபி (வயது55). இவருக்கு கடந்த ஆண்டு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சையில் இருந்துவந்தார். மேலும் சர்க்கரை நோய்க்கும் மருந்துகள் சாப்பிட்டு வந்தார். கடந்த 3 மாதங்களாக அடிக்கடி தனிமையில் இருப்பதும், தானாக பேசுவதுமாக இருந்துள்ளார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று மதிய உணவுக்காக மகள் யோகேஸ்வரி, தந்தை இருந்த அறை கதவை தட்டியபோது, திறக்கவில்லை. ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, ஜெயகோபி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து, பிருத்திவிராஜ், நிரவி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் உடலை கைபற்றி, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசல் பாலோபந்தவனம் பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம் (வயது 64). சம்பவத்தன்று இவர் வடக்கு வாசல் பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாம்பசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் தீராத வயிற்று வலி காரணமாக சாம்பசிவம் தற்கொலை செய்தது தெரியவந்தது. இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வநாயகம் (வயது 85). இவர் அந்த பகுதியில் உள்ள சந்தை அருகில் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மணியனூரை சேர்ந்தவர் செல்வநாயகம் (வயது 85). இவர் அந்த பகுதியில் உள்ள சந்தை அருகில் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் வெளியே படுத்திருந்த பாக்கியத்தின் தலையில் குழவிக்கல்லை போட்டார்.
    • மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே அப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30) கூலி தொழிலாளி.

    இவரது மனைவி மாலதி (25).

    இவர்கள் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது.

    இதனால் மாலதி கணவ ரிடம் கோ பித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தந்தை பாக்கியம் (65) என்பவரின் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று பிரபாகரன் தனது மனைவியை கூப்பிட மாமனார் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது மாலதிக்கும், பிரபாகரனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் பாக்கியம் அவர்கள் இடையே சமாதனம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து மாலதி கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இதனால் பிரபாகரன் தனியாக வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் பிரபாகரன் தனது மாமனார் வீட்டிற்கு வந்தார்.

    அங்கு வீட்டின் வெளியே படுத்தி ருந்த பாக்கியத்தின் தலையில் குழவி கல்லை போட்டார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரபாகரனை கைது செய்தார்.

    மேலும் பாக்கியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • சந்தேகத்தின் பேரில் குளத்தில் இறங்கி தேடினர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள புளியன்விளையை சேர்ந்தவர் மரிய சிலுவை (வயது 65). இவர் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள புளியங்குளத்தில் குளிக்கச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். அதன்பிறகு இரவு வரை அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடினர். அப்போது புளியங்குளம் கரையில் அவரது செருப்பு இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் குளத்தில் இறங்கி தேடினர். அப்போது மரியசிலுவை குளத்தில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

    இது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் மரிய சிலுவை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அவரது தம்பி மரியஜார்ஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் முருகன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடி வீஸ்வரம் சுப்பையா காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 55). திருமணமாகாத இவர் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து அவரது சகோதரர் சக்தி மகேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கோட்டார் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் முருகன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்த முருகன், தனது தாயுடன் வாழ்ந்து வந்ததும் 4 ஆண்டுகளுக்கு முன்பு தாய் இறந்த பிறகு, தனியாக வசித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தான் அவர், வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலை யால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கட்டடப் பணிக்கு வேலைக்குச் சென்ற பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர்
    • ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் குடி போதையில் இருந்த அவரை எச்சரித்து லேசாக அடித்து விரட்டி விட்டனர்

    பல்லடம், செப்.24-

    பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று முன்தினம் மாலை கட்டடப் பணிக்கு வேலைக்குச் சென்ற பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே குடி போதையில் வந்த முதியவர் ஒருவர் பெண்களை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் குடி போதையில் இருந்த அவரை எச்சரித்து லேசாக அடித்து விரட்டி விட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • யார் அவர்? போலீசார் விசாரணை
    • மேலும் மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கோவ ளம் செல்லும் ரோட்டில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரிய வில்லை. இது பற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு விரைந்து சென்று பிணத்தை கைப் பற்றி விசாரணை நடத்தி னார்கள். அதன் பிறகு அவரது உடல் அங்கு பரி சோதனை செய்யப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    • தோகைமலை அருகே வீட்டில் இருந்து மாயமான முதியவர் தரிசு காட்டில் பிணமாக கிடந்தார்
    • தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

    கரூர்

    கரூர், தோகைமலை அருகே உள்ள பி.சுக்காம்பட்டியை சேர்ந்தவர் ரத்னாசலம் (வயது 75). இவர் கடந்த 12-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து ரத்னாசலத்தை அவரது மகன் கவியரசன் உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இந்தநிலையில் நேற்று முன்தினம் பண்ணப்பட்டி அருகே உள்ள ரெங்கபாளையம் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான தரிசு காட்டில் அழுகிய நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக கவியரசனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் தனது உறவினர்களுடன் சென்று அங்கு பார்த்தார். அப்போது அங்கு இறந்து கிடப்பது வீட்டில் இருந்து மாயமான ரத்னாசலம் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ரத்னாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து கவியரசன் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, ரத்னாசலம் வயது முதிர்வின் காரணமாக இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து தரிசு காட்டில் போட்டு விட்டு சென்றார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக குமார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

     தஞ்சாவூர்:

    கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் முதலியார் தெருவை சேர்ந்தவர் குமார் (வயது60). எலக்ட்ரீசியன்.

    நேற்று காலை இவர் கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் மோட்டார்சைக்கிளில் வந்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக குமார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார்.

    இதுபற்றி திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×