என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் சாவு
- சந்தேகத்தின் பேரில் குளத்தில் இறங்கி தேடினர்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் :
இரணியல் அருகே உள்ள புளியன்விளையை சேர்ந்தவர் மரிய சிலுவை (வயது 65). இவர் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள புளியங்குளத்தில் குளிக்கச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். அதன்பிறகு இரவு வரை அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடினர். அப்போது புளியங்குளம் கரையில் அவரது செருப்பு இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் குளத்தில் இறங்கி தேடினர். அப்போது மரியசிலுவை குளத்தில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் மரிய சிலுவை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அவரது தம்பி மரியஜார்ஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






