search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபாசம்"

    • கட்டடப் பணிக்கு வேலைக்குச் சென்ற பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர்
    • ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் குடி போதையில் இருந்த அவரை எச்சரித்து லேசாக அடித்து விரட்டி விட்டனர்

    பல்லடம், செப்.24-

    பல்லடம் பஸ் நிலையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நேற்று முன்தினம் மாலை கட்டடப் பணிக்கு வேலைக்குச் சென்ற பெண்கள் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே குடி போதையில் வந்த முதியவர் ஒருவர் பெண்களை நோக்கி ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் குடி போதையில் இருந்த அவரை எச்சரித்து லேசாக அடித்து விரட்டி விட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மனைவியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தார்.

    மதுரை

    மேலூர் நரசிங்கம் பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவருக்கு வண்டியூரை சேர்ந்த பெண்ணுடன் திருமணமானது.

    ராஜ்குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் இது குறித்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். இந்த நிலையில் ராஜ்குமார் பேஸ்புக்கில் போலி கணக்கை உருவாக்கி அதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜ்குமாரின் பேஸ்புக் பக்கம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் மனைவியின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து பரப்பியது தெரிய வந்தது.

    இதையடுத்து மனைவி யின் ஆபாச படங்களை இணையதளத்தில் பரப்பிய ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    • காரைக்காலில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ரகளையில் ஈடுபட்டு வருவதாக நெடுங்காடு காவல்நிலை யத்திற்கு தகவல் வந்தது.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே நெடுங்காடு நல்லாத்தூர் கடைவீதி அருகே, பொது இடத்தில், பொதுமக்களுக்கு இடையூறாக சிலர் ஆபாச மாக பேசி ரகளையில் ஈடுபட்டு வருவதாக நெடுங்காடு காவல்நிலை யத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, 5 பேர் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றபோது, போலீசார் அந்த 5 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்க ளில் 4 பேர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியைச்சேர்ந்த சத்தியராஜ்(வயது30), சிலம்ப ரசன்(32), சசிகுமார் (28), மதன்ராஜ்(30) மற்றும் தரங்கம்பாடியை சேர்ந்த சுரேஷ்(38) ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, பொது மக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய ரகளை யில் ஈடுபட்ட குற்றத்தி ற்காக 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அதேபோல், காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் மேலவாஞ்சூர் ஆசாரிதெரு அருகே பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசிய கலையரசன்(20) சூரியா(22) ஆகிய 2 பேரை திரு.பட்டினம் போலீசார் கைது செய்தனர்.

    • பெண்ணை ஆபாசமாக பேசிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே வரலொட்டி பகுதியை சேர்ந்த ராமர் மனைவி கஸ்தூரி (வயது 35). ராமர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.

    கஸ்தூரி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவரை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, சோனை முத்து ஆகியோர் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி கஸ்தூரி மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×