பெண்ணை ஆபாசமாக பேசிய 2 பேர் மீது வழக்கு

பெண்ணை ஆபாசமாக பேசிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மல்லாங்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணை ஆபாசமாக பேசிய 2 பேர் மீது வழக்கு
Published on

விருதுநகர்

விருதுநகர் அருகே வரலொட்டி பகுதியை சேர்ந்த ராமர் மனைவி கஸ்தூரி (வயது 35). ராமர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார்.

கஸ்தூரி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவரை அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி, சோனை முத்து ஆகியோர் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கஸ்தூரி மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com