search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காரைக்கால் நிரவியில்முதியவர் தூக்கு போட்டு தற்கொலை
    X

    காரைக்கால் நிரவியில்முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

    3 மாதங்களாக அடிக்கடி தனிமையில் இருப்பதும், தானாக பேசுவதுமாக இருந்துள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவியில் வசித்து வந்தவர் ஜெய கோபி (வயது55). இவருக்கு கடந்த ஆண்டு மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சையில் இருந்துவந்தார். மேலும் சர்க்கரை நோய்க்கும் மருந்துகள் சாப்பிட்டு வந்தார். கடந்த 3 மாதங்களாக அடிக்கடி தனிமையில் இருப்பதும், தானாக பேசுவதுமாக இருந்துள்ளார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று மதிய உணவுக்காக மகள் யோகேஸ்வரி, தந்தை இருந்த அறை கதவை தட்டியபோது, திறக்கவில்லை. ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, ஜெயகோபி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து, பிருத்திவிராஜ், நிரவி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் உடலை கைபற்றி, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×