search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர்"

    • சாலையில் தடையை மீறி வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.
    • ஐ.டி. ஊழியரான அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அபிராமபுரம் சி.பி.ராமசாமி சாலை, பிம்மண்ணா கார்டன் சாலை சந்திப்பு அருகே அடுக்கு மாடி குடியிருப்பு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை முதலமைச்சர் சென்ற சாலையில் தடையை மீறி வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரின் பெயர் அஜய்குமார் என்பது தெரியவந்தது. ஐ.டி. ஊழியரான அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    • பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரி தொழிலாளர்களும் சங்கத்தின் சார்பிலும் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் மற்றும் கட்டுமான அமைப்பு மாநில தலைவருமான வி.என். கண்ணன் மற்றும் அமைப்பாளர் எழில் சம்பத் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கட்டுமான தொழிலாளர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இதுவரை ரூ.1000 பென்சன் தொகை வழங்கப்பட்டு வந்தது.

    இந்த பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரி தொழிலாளர்களும் சங்கத்தின் சார்பிலும் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம்.

    இந்நிலையில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பென்சன் தொகையை ரூ.1000த்தில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    தொழிலாளர்கள் நலனின் கருத்தில் கொண்டு பென்சன் தொகையை உயர்த்தி வழங்கிய இந்தியா போற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியையும் பாராட்டுதலையும் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

    • ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு, குறு வணிகர்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
    • வணிகர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்ற மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    சென்னை:

    தென் சென்னை கிழக்கு மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள அறிக்கையில், அரசின் சமாதான திட்டத்தின்படி வணிகர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான வரி நிலுவைத் தொகையை வட்டியுடன் தள்ளுபடி செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய முதலமைச்சருக்கும் , இதற்கு உறுதுணையாக இருந்து எங்களை வழிநடத்தி செல்லும் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு, குறு வணிகர்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதில் தற்போது மின்சார கட்ட ணமும், சொத்து வரியும் கூடுதலாக இருப்பதால் சிறு குறு வணிகர்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வருமானமும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே, வணிகர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்ற மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    • போலீசார், அ.தி.மு.க. பிரமுகரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
    • வருகிற 17-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் அருண்குமார்.

    இவர் பொள்ளாச்சி 18-வது தகவல் தொழில்நுட்ப பிரிவு அ.தி.மு.க செயலாளராக உள்ளார். இந்நிலையில் இவர், முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் ஒரு வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து, பொள்ளாச்சி ஜோதிநகரை சேர்ந்த தி.மு.க பிரமுகரான ஷானவாஸ் என்பவர் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார், அ.தி.மு.க. பிரமுகரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் அருண்குமார் மீது அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    அ.தி.மு.க பிரமுகர் கைது செய்யப்பட்டது அறிந்ததும் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்பட ஏராளமான அ.தி.மு.கவினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜபாண்டியன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் தெரிவித்தனர்.

    ஆனால் அ.தி.முக.வினர், அருண்குமாரை விடுவிக்கும் வரை போலீஸ் நிலையத்தை விட்டு செல்லமாட்டோம் என்று கூறினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அ.தி.மு.கவினர் கலைந்து சென்றனர். இதையடுத்து, அ.தி.மு.க. பிரமுகர் அருண்குமாரை போலீசார் பொள்ளாச்சி ஜே.எம். 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது அவரை வருகிற 17-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு, நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அருண்குமாரை போலீசார் பொள்ளாச்சி சப்-ஜெயிலில் அடைத்தனர்.

    இதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    கைது செய்யப்பட்ட அருண்குமார் பொள்ளாச்சி 18-வது தகவல் தொழில்நுட்ப செயலாளராக உள்ளார்.

    இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் வந்த வீடியோவை மறுபதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பதிவேற்றம் செய்தவர்கள் மீது வழக்குப்பதியாமல், அருண்குமார் மீது பொய் வழக்கு போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம்.
    • அனைத்து பணிகளையும் விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24-ம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை வேளச்சேரி, 100 அடி புற வழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாகவும், சோழிங்கநல்லூர் சட்ட மன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைக்கப்படுவது தொடர்பாகவும் அந்த இடங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு சட்டசபையில் 2023-24-ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை முதலமைச்சர் விரைவுபடுத்த வேண்டுமென்ற உத்தரவின் அடிப்படையில் 50 இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் இன்றோடு 24 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கின்றோம் மீதமுள்ள 8 சட்ட மன்ற தொகுதிகளிலுள்ள 10 திட்டங்களையும் இந்த மாத இறுதிக்குள் நேரடியாகச் சென்று களஆய்வில் ஈடுபடவிருக்கின்றோம்.

    அந்த வகையில், அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக இன்று வேளச்சேரி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை வேளச்சேரி, 100 அடி புறவழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாக கள ஆய்வு செய்திருக்கின்றோம். அதேபோல, சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம். இப்பணிகள் துவங்குவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்படுகின்ற சிதிலமடைந்த பள்ளிக்கூடங்களை புதுப்பித்தல், பஸ் நிலையங்களை மேம்படுத்துதல், சலவைக் கூடங்களை மறுவளர்ச்சி மேம்படுத்துதல், காசிமேடு கடற்கரையோரம் 5 கிலோ மீட்டர் அளவிற்கு அந்த இடத்தை அழகுபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப் பட்டு, ஒட்டுமொத்தமான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் இந்த அறிவிப்புளை முதலமைச்சர் சீரிய ஆலோசனையின் பேரில் வடிவமைத்த இந்தத் திட்டங்கள் அனைத்தும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கு ஏற்றாற்போல், திட்டங்களைத் திருத்தி அமைத்து, மக்களுக்காகத் தான் திட்டங்கள் என்ற வகையிலே இந்த திட்டங்களைச் செயல்படுத்துகின்ற ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் இல்லாத ஒரு புதிய நடைமுறையை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

    இந்த களஆய்வு நிச்சயம் ஒரு பயனுள்ளதாக அமையும். இந்த பகுதிகளிலுள்ள சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் அனைவருடைய உடல் நலத்தைப் பாதுகாக்கின்ற வகையிலும், அதே நேரத்தில் விளையாட்டை ஊக்குவிக்கின்ற வகையிலும், பெரும்பாக்கத்தில் விரைவில் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் ஏற்படுத்தித் தரப்படும்.

    மேற்கண்ட அனைத்து பணிகளையும் விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் , சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா , அடையார் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் துரைராஜ், சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர் ருத்ர மூர்த்தி, முதன்மைத் திட்ட அமைப்பாளர் அனுசுயா , மாநகராட்சி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தமிழகத்தில் இரண்டு கால்கள் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.
    • மாற்றுத்தி றனாளிகள் மத்தியில் தமிழக அரசின் மீது மிகுந்த நம்பிக்கையும், வரவேற்பும் கிடைத்துள்ளது.

    திருப்பூர் :

    ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதல்வருக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நன்றிதெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் இரண்டு கால்கள் இழந்த மாற்றுத்தி றனாளிகளுக்கு அரசு நிதியில் இருந்து மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளிகளும், தங்களுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கிட வேண்டுமென அதிகப்ப டியான கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றது. அதனடி ப்படையில் ஒரு கால் இழந்த மாற்றுத்திற னாளிகளுக்கும், அரசு நிதியிலிருந்தோ, அல்லது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தோ வழங்கிட வழிவகை செய்து தர வேண்டுமென கடந்த 2.7.2022 தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் , அரசு முதன்மை செயலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன்.

    எனது கோரிக்கையினை ஏற்று தற்போது நடைபெற்று வரும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கையின் போது, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவிப்பு வெளி யிட்டுள்ளார். இந்த அறிவிப்பினால் மாற்றுத்தி றனாளிகள் மத்தியில் தமிழக அரசின் மீது மிகுந்த நம்பிக்கையும், வரவேற்பும் கிடைத்துள்ளது.

    எனது கோரிக்கையினை தாயுள்ளத்துடன் பரிசீலித்து, மாற்றுத்திறனாளிகளின் நலனில் அக்கறையுடன் சட்டப்பேரவையில் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் , அமைச்சர் , துறை சார் அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு செல்வராஜ் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். 

    • மாற்றுக்கட்சியினர் 10,000 பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
    • திமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் பகுதியில் மாற்றுக்கட்சியினர் 10,000பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், திமுக கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, மற்றும் சாமளாபுரம் பேரூராட்சிமன்ற 4வது கவுன்சிலர் மைதிலி , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 9வது வார்டு கவுன்சிலர் மகாலட்சுமி, சாமளாபுரம் நகர காங்கிரஸ் பொறுப்பாளர் பாலசந்தர் உள்பட பலர் திமுகவில் இணைந்தனர்.

    • கல்லூரி கட்டிடமானது 42.89 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.82.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
    • விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பண்ணைக்கி ணற்றை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கால்நடை பராமரிப்பு. பால்வளம். மற்றும் மீன்வளத்துறை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிலைய புதிய கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார். கல்லூரி கட்டிடமானது 42.89 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 82.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 15 துறைகள் கால்நடை உடற்கூறியல்,உடற்செயலியல்,கால்நடை உற்பத்தி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மருத்துவ பண்ணை வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்கும் விடுதி, உணவகம் ஆகிய வசதிகள் மற்றும் கால்நடைகள். கோழிவளர்ப்பு தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் அ குமரவேல், பேராசிரியர் மற்றும் தலைவர் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் பா.குமரவேல் பேராசிரியர் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம்,உதவி செயற்பொறியாளர்கள் முத்துப்பாண்டியன்,முருகன்,பொறியாளர்கள் ரஜினிகாந்த்,கண்ணன்,ஆர். கே ஆர் .கல்வி நிறுவனத் தலைவர் ஆர். கே. ராமசாமி, நிர்வாகப் பொறியாளர் பொதுப்பணித்துறை தியாகராஜன்,கால்நடை உற்பத்தி மேலாண்மை துறை மருத்துவக் கல்லூரி,ஆராய்ச்சி நிலையம்,பேராசிரியர் மற்றும் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சபாநாயகர் அப்பாவு பேச்சு
    • காவலர் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட ஓய்வு பெற்ற போலீஸ் துறை அலுவலர் சங்கத்தின் 42-வது பொதுக்குழு கூட்டம் இன்று நாகர்கோவில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் சாம் நெல்சன் வரவேற்று பேசினார். நிர்வாகிகள் கிருஷ்ணபிள்ளை மாணிக்க ராவ், செல்வின் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு சட்ட பேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் கிருஷ்ண ரேகா போலீஸ் துறை சார்பாக வெளிநாட்டில் நடந்த விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்றதை பாராட்டி அவருக்கு சபாநாயகர் அப்பாவு பொன்னாடை அணிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒய்வுபெற்ற போலீசார் பல ஆட்சியை, அரசை, பல அதிகாரிகளை பார்த்தி ருப்பீர்கள். நீங்கள் பல அனுபவங்களை பெற்றி ருப்பீர்கள். 1981-ம் ஆண்டு தான் குமரி மாவட்டத்தில் தமிழகத்திலேயே ஓய்வு பெற்றவர்களுக்கு என சங்கம் உருவாக்கப்பட்டது.தி.மு.க. ஆட்சியில் தான் போலீசாருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    ஊதிய முரண்பாடுகளை கலைந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்பதை நீங்கள் மறந்தி ருக்க முடியாது. பெண் போலீசாரை பணியில் அமர்த்தியதும் அவர் தான்.போலீசாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து பல்வேறு திட்டங்களை கருணாநிதி செயல்படுத்தி உள்ளார்.

    தற்பொழுது முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து துறை ஊழி யர்களின் பிரச்சினைகளை அறிந்து சிறப்பாக செயல் பட்டு வருகிறார். கேட்ட திட்டங்களை மட்டும் இன்றி கேட்காமல் பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருவது தான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி.

    போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்க ஆணை பிறப்பித்தவர் அவர் தான் என்பதை நீங்கள் மறந்துவிட முடியாது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் தமிழகத்தில் டி.ஜி.பி. யாக இருப்பது மாவட்டத்திற்கு பெருமை ஆகும்.கோவை குண்டுவெடிப்பு வழக்கில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, போலீசார் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். 24 மணி நேரமும் போலீசார் உழைத்து வருகிறார்கள். ஓய்வு பெற்ற போலீசாரின் கோரிக்கைகள் முதல மைச்சரின் கவன த்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் மற்றும் செயலாளருமான ராஜாசிங் ஆண்டறிக்கை வாசித்தார். கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி பேரா சிரியர் ஸ்ரீ லதா மருத்துவ விழிப்புணர்வு பற்றி எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மகேஷ், சங்க மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் துணைத்தலைவர் கிறிஸ் டோபர், மாவட்ட செயலா ளர் ஐவின், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஓய்வு பெற்ற காவலர் நல வாரியம் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. அதை விரைந்து செயல்படு த்திட தமிழக அரசும், காவல் துறையும் தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துறையில் உள்ள தேர்வுகளில் போலீசா ரின் வாரிசுகளுக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீடு ஆணையை அரசு பிறப்பிக்க வேண்டும்.

    காவலர் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.

    • காவல்துறையில் 22,000 பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • காவலர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    லக்னோ:

    காவலர் நினைவுத் தினத்தையொட்டி உத்தர பிரதேசத்தில் பணியின் போது உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத், நிகழ்ச்சியில் பேசியதாவது:

    நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது. கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் நடத்திய என்கவுன்ட்டர்களில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். 4,453 பேர் காயமடைந்தனர்.

    காவலர்களின் குடும்ப நலன் மற்றும் அவர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறையில் 22,000 பெண்கள் உட்பட 1,50,231 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

    45,689 பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயுதப்படை காவலர்கள், தலைமை கான்ஸ்டபிள்கள் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கு தொலைபேசி உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.2,000 கூடுதலாக வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • செஞ்சியை சேர்ந்தவர்களுக்கு மனு கொடுத்த சிலமணி நேரத்தில் பட்டியல் இன சான்றினை முதலமைச்சர் வழங்கினார்.
    • தங்களுக்கு வகுப்புச் சான்றிதழ் வழங்கிட ஆவண செய்ய வேண்டுமென்று கேட்டு கொண்டனர்.

    விழுப்புரம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலை சென்றார். அவர் செல்லும் வழியில், செஞ்சியை சேர்ந்த முருகன் மகன்வாசன், மகள் பூஜா ஆகியோர் முதல்-அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கடந்த 7 ஆண்டுகளாக பட்டியல் இன வகுப்பு சான்றிதழ்கள் வழங்கப்படாம ல்இருக்கிறது, எனவே, தங்களுக்கு வகுப்புச் சான்றிதழ் வழங்கிட ஆவண செய்ய வேண்டுமென்று கேட்டு கொண்டனர். அம்மனுவினை பரிசீலித்த முதல்-அமைச்சர் உரிய விசாரணை மேற்கொண்டு பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்கள் வழங்கிட விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதன்மேல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, திருவண்ணாமலையில் அரசு விழாவினை முடித்துக் கொண்டு, சென்னை திரும்பும் வழியில் முதல்-அமைச்சர் செஞ்சியில் மாணவன் வாசன். மாணவி பூஜா ஆகியோருக்கு பட்டியல் இன வகுப்புச் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மற்றும் மாணவரின் பெற்றோர் உடன் இருந்தனர்.

    ×