search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் - காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்துவைத்தார்
    X

    உடுமலை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

    உடுமலை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் - காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்துவைத்தார்

    • கல்லூரி கட்டிடமானது 42.89 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.82.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
    • விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பண்ணைக்கி ணற்றை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கால்நடை பராமரிப்பு. பால்வளம். மற்றும் மீன்வளத்துறை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிலைய புதிய கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்துவைத்தார். கல்லூரி கட்டிடமானது 42.89 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 82.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 15 துறைகள் கால்நடை உடற்கூறியல்,உடற்செயலியல்,கால்நடை உற்பத்தி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மருத்துவ பண்ணை வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தங்கும் விடுதி, உணவகம் ஆகிய வசதிகள் மற்றும் கால்நடைகள். கோழிவளர்ப்பு தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் அ குமரவேல், பேராசிரியர் மற்றும் தலைவர் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம் பா.குமரவேல் பேராசிரியர் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம்,உதவி செயற்பொறியாளர்கள் முத்துப்பாண்டியன்,முருகன்,பொறியாளர்கள் ரஜினிகாந்த்,கண்ணன்,ஆர். கே ஆர் .கல்வி நிறுவனத் தலைவர் ஆர். கே. ராமசாமி, நிர்வாகப் பொறியாளர் பொதுப்பணித்துறை தியாகராஜன்,கால்நடை உற்பத்தி மேலாண்மை துறை மருத்துவக் கல்லூரி,ஆராய்ச்சி நிலையம்,பேராசிரியர் மற்றும் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×