search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கட்டணம்"

    • மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • இதை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள 2 கோடியே 37 லட்சம் மின் நுகர்வோர்கள் பாதிக்கப்படக்கூடிய வகையில் தி.மு.க. அரசு கடந்த செப்டம்பரில் மின் கட்டணத்தை உயர்த்தியது.

    தமிழகத்தில் 50 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளது. இதில் ஏறத்தாழ ஒரு கோடி பேர் வேலை செய்கின்றனர். கொரோனா காலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வர முடியாமல் இருக்கும் நிலையில், அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, தி.மு.க. அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர் போராட்டங்களை நடத்தினார். இந்த நிலையில் தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்சுவது போல் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள அனுமதியின்பேரில் அடுத்த மாதம் முதல் மின்கட்ட ணத்தை 4.70 சதவீதம் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.மின் கட்டணத்தை உயர்த்தி 9 மாதங்களே ஆன நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்த தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. எதிர் கட்சியாக இருந்தபோது உயர்த்தாத மின் கட்ட ணத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். ஆனால் இன்று அவரது ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்துகிறார். இது நியாயமா? என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது மத்திய அரசு அழுத்தம் கொடுத்தும் நிதிசுமை இருந்த போதும் மின் கட்டணத்தை உயர்த்த வில்லை. அதனால் இந்த மின் கட்டணத்தை உயர்வு என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது இதை உடனடியாக கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏப்ரல் மாதத்திற்கான மின் அளவை நிர்வாக காரணங்களால் மின் அளவீடு எடுக்கப்படவில்லை.
    • இந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.

    தாராபுரம் :

    தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மானூர்பாளையம் மின்சார வாரிய பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட காசிலிங்கபாளையம், நிறையூர், பெரியகுமாரபாளையம், மேற்கு சடையம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கான மின் அளவை நிர்வாக காரணங்களால் மின் அளவீடு எடுக்கப்படவில்லை.

    எனவே மின் நுகர்வோர் கடந்த பிப்ரவரி மாதம் செலுத்திய மின் கட்டணத்தை ஏப்ரல் மாதத்திற்கும் செலுத்தலாம். இந்த கட்டணம் அறிவிப்பு வெளியிட்ட 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள–ளது.

    • 1,600 மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால் மின் கணக்கீடு மேற்கொள்ளவில்லை.
    • ஜனவரி மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே மார்ச் மாதத்திற்கும் செலுத்த வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை எஸ்.வி., புரம் மற்றும் கொமரலிங்கம் பெருமாள் புதூர் மின் இணைப்புகளுக்கு நடப்பு மாத மின் கணக்கீடு செய்யாததால் ஜனவரி மாத தொகையை செலுத்துமாறு மின் வாரியம் அறிவித்துள்ளது.

    இது குறித்து உடுமலை கோட்ட செயற்பொறியாளர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டம், கிராமம் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, எஸ்.வி., புரம் பகிர்மான மின் இணைப்புகளில் சுமார் 1,600 மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால் 2023 மார்ச் மாதத்திற்கான மின் கணக்கீடு மேற்கொள்ளவில்லை.ஆகவே எஸ்.வி., புரம் மின் பகிர்மான நுகர்வோர் ஜனவரி மாதம் செலுத்திய தொகையையே, மார்ச் மாதத்திற்கும் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.கொமரலிங்கம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, பெருமாள் புதூர் பகிர்மான மின் இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களினால் மார்ச் 2023 மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.ஆகவே பெருமாள்புதூர் பகிர்மான மின் நுகர்வோர், கடந்த ஜனவரி மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே மார்ச் மாதத்திற்கும் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • மின் கட்டணம் உயர்வு பொதுமக்களுக்கு ‘ஷாக்’காக இருந்து வந்த நிலையில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணமும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட சிலர் கூடுதலாக உள்ள இணைப்புகளை சரண்டர் செய்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் மின்சார கட்டணத்தை உயர்த்தியது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு உயர்த்தி அறிவித்தன.

    500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துவோர் ரூ.2 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.

    மின் கட்டண உயர்வால் வாடகை வீடுகளில் குடியிருப்போர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். ஒவ்வொருவரும் கூடுதலாக ஆயிரத்திற்கும் மேல் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டது. ஏ.சி. பயன்படுத்தும் வீடுகளில் மின் கட்டணம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அதிகரித்தது.

    மின் கட்டணம் உயர்வு பொதுமக்களுக்கு 'ஷாக்'காக இருந்து வந்த நிலையில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணமும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதமே வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக பயன்பாடு, கடைகள் போன்றவை பொதுவாக பயன்படுத்தப்பட்ட படிக்கட்டு மின் விளக்குகள், மோட்டார், லிப்ட் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அந்த பாதிப்பு இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

    இதுவரையில் 1-ஏ என்ற அடிப்படையில் முதல் 100 யூனிட்டுகளுக்கு இலவசமாக பொது பயன்பாட்டிற்கு மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 1-டி யாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிக பயன்பாட்டிற்குரிய கட்டணமான ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஒரே வீட்டில் 3 சமையல் அறை கொண்ட வீடுகள் இருந்தால் 3 மின் மீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதுபோக 4-வதாக உள்ள ஒரு மீட்டர் பொதுவான மின்விளக்கு, குடிநீருக்கான மோட்டார் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.

    அந்த மீட்டருக்கு இதுவரையில் இலவசமாக வழங்கப்பட்ட 100 யூனிட் மின்சாரம் இனி கிடையாது. அவற்றிற்கு ஒரு யூனிட்டிற்கு 8 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர நிலையான கட்டணம் ரூ.200 வசூலிக்கப்படுகிறது.

    பொதுவாக பயன்படுத்தக்கூடிய மீட்டரை 100 யூனிட் உபயோகப்படுத்தி இருந்தால் ரூ.800 கட்டணமும் ரூ.200 நிலையான கட்டணமும் சேர்த்து ரூ.1000 வசூலிக்கப்படுகிறது.

    சென்னையில் இதுவரையில் பொதுவான பயன்பாட்டிற்கு பலர் தனி மின் மீட்டரை பயன்படுத்தி வந்தனர். வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் மோட்டார், பொதுவான மின் விளக்கிற்கு தனியாக கட்டணம் வசூலிக்க தனி மீட்டர் பயன்படுத்தி வந்தனர்.

    மேலும் சொந்த குடியிருப்புகள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பொதுவான பயன்பாட்டிற்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குடியிருப்புகளுக்கு வணிக ரீதியிலான கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல. இதனால் சாமான்ய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    ஏற்கனவே மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்ட சிலர் கூடுதலாக உள்ள இணைப்புகளை சரண்டர் செய்து வருகின்றனர். தற்போது மோட்டார், மின்விளக்கு, லிப்ட் ஆகியவற்றிற்கு கட்டணம் உயர்த்தியதால் பொதுவான பயன்பாடு உள்ள மின் இணைப்பை வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மீட்டருடன் இணைத்து வருகின்றனர்.

    இதனால் வரும் நாட்களில் பொது பயன்பாடு மின்மீட்டர் சரண்டர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாத சம்பளத்தில் மின் கட்டணத்திற்கே பெரும் தொகை செலவிட வேண்டிய நிலை உருவாகி உள்ளதால் பொதுமக்கள் ஏ.சி. பயன்படுத்துவதை தவிர்த்தும், தேவையற்ற மின்சாதனங்களை குறைத்தும் வருகின்றனர்.

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, 'பொதுவான மின் உபயோக பயன்பாட்டிற்குரிய மீட்டர் எந்தெந்த வீடுகளில் உள்ளது என்பதை ஊழியர்கள் ஆய்வின் மூலம் கண்டு பிடித்து மாற்றி வருகின்றனர்.

    அதிகளவு ஓடாமல் இருக்கும் மீட்டர், பொதுவான மோட்டார், படிக்கட்டு மின்விளக்கிற்கு பயன்படுத்தப்படுகிறது. அதுபோன்ற இணைப்புகளை அலுவலகத்தில் இருந்தும் கண்டுபிடித்து புதிய டேரிப்பிற்கு மாற்றி வருகிறோம்' என்றனர்.

    • மின் கட்டண உயர்வு, ஜவுளி உற்பத்தித் தொழிலை மிகப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது.
    • அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால், ஆர்டர்கள் வருவதில்லை.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்க (சிஸ்வா) ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில் சங்க செயலாளர்கள் கோகுல்குமார், ரவிச்சந்திரன், பொருளாளர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் தங்கவேல், சங்க ஆலோசகர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்க தலைவர் வெங்கடேசன் கூறியதாவது :- தமிழ்நாடு மின்சார வாரியம் நடைமுறைப்படுத்தியுள்ள மின் கட்டண உயர்வு, ஜவுளி உற்பத்தித் தொழிலை மிகப் பெரிய அளவில் பாதிப்படையச் செய்துள்ளது. கொரோனா தொற்று, நூல் விலையேற்றம், உலகப் பொருளாதார மந்தநிலை போன்றவற்றால் ஏற்கனவே,கடும் நஷ்டத்தில் தொழில் புரிந்து வருகிறோம். இந்த நிலையில் மின் கட்டண உயர்வை மாற்றி அமைக்க வேண்டும் என மின்துறை அமைச்சரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

    அரசு அறிவித்த உச்சகட்ட மின் கட்டண குறைப்பு அறிவிப்பு, எந்த விதத்திலும் பாதிப்பை ஈடு செய்யாது. சிறு, குறு தொழில்களின் கீழ் உள்ள நாடா இல்லா தறிகளுக்கு தனியாக மின்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.ஜவுளி அமைச்சகத்தின் கீழ் தனி குழு அமைத்து எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும். ஜவுளி உற்பத்தி துறை கடந்த ஓராண்டாக வலுவிழந்ததுடன், அபரிமிதமான நூல் விலை ஏற்றத்தால், ஆர்டர்கள் வருவதில்லை.

    தொழில் நிறுவனங்கள் 30 சதவீதம் இயங்காத நிலையில், ரிசர்வ் வங்கியின் 2 சதவீத வட்டி உயர்வு மிகப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறையினர் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணையை ஓராண்டு தள்ளி வைக்க வேண்டும். சோலார் வாயிலாக மின் உற்பத்தி செய்ய கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும்.மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பை கூட்டத்தை கூட்டி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை மின்நுகர்வோர் அக்டோபர் மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • மின் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்திய மின் அளவீடு நிர்வாகக் காரணத்தினால் மேற்கொள்ள முடியவில்லை.

    தாராபுரம்:

    தாராபுரம் மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டத்தில் மானூர்பாளையம் பிரிவு அலுவலகதிற்குட்பட்ட காசிலிங்கபாளையம்,நிறையூர் மேற்கு சடையபாளையம் ஆகிய மின் பகிர்மான அலுவலகத்திற்குட்ட பகுதி மின் நுகர்வோர் தாங்கள் பயன்படுத்திய மின் அளவீடு நிர்வாகக் காரணத்தினால் மேற்கொள்ள முடியவில்லை. ஆகையால் கடந்த ஆகஸ்டு மாதம் கணக்கீட்டு பணியில் குறிப்பிட்டுள்ள தொகையை மின்நுகர்வோர் அக்டோபர் மாதத்திற்கு செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கான அறிவிப்பு ஆணை இருந்தால் காண்பியுங்கள்.
    • பாதாள சாக்கடை மேன்ஹாலை கண்டுபிடித்து பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு :-

    கவுன்சிலர் சரவணன்:

    சீனிவாசபுரம் ராஜாஜி ரோடு பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.

    கவுன்சிலர் கோபால்:

    4 ராஜ வீதிகளிலும் பாதாள சாக்கடை பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பல நாட்களாகியும் பணி முடியவில்லை.

    இதன் காரணமாக பலர் பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்தித்து வருகின்றனர். உடனடியாக இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்.

    கவுன்சிலர் கண்ணுக்கினியாள்:

    மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும்.

    கவுன்சிலர் ஜெய் சதீஷ்:

    மத்திய அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கான அறிவிப்பு ஆணை இருந்தால் காண்பியுங்கள். மத்திய அரசு ஒருபோதும் மின் கட்டணத்தை உயர்த்துமாறு கூறவில்லை.

    மாநில அரசுதான் உயர்த்தி உள்ளது.

    எனது வாடுக்கு உட்பட்ட பழைய ராமேஸ்வரம் சாலையில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளது.

    உடனடியாக பாதாள சாக்கடை மேன்ஹாலை கண்டுபிடித்து இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

    இதே போல் மற்ற கவுன்சிலர்களும் தங்களது வார்டுக்கு உட்பட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.

    முன்னதாக கூட்டத்தில் ஏற்கனவே 22 கவுன்சிலர்கள் கொண்டு வந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மேயர் சண் .ராமநாதன் பேசும்போது:-

    மத்திய அரசு மானியம் உள்ளிட்ட நிதிகளை தர மாட்டோம் என கூறியதாலும், அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகவும் தான் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவுதான். கவுன்சிலர்களின் கோரிக்கைகள் பரீசிலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • மின்கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • மின்கட்டண உயர்வால் தொழில் முனைவோர் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    கொரோனா தொற்று சூழ்நிலையில் இருந்து, இயல்பு நிலைமைக்கு மக்கள் இன்னும் மாறவில்லை, ஆனால் தற்போது மின்சார கட்டணத்தை அரசு உயர்த்தி உள்ளது. தற்போது தி.மு.க. அரசு ஒரு யூனிட் மின் கட்டணம் 27.50 காசு முதல் ரூ.1.25 வரைஉயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது, சில பிரிவினருக்கு 52 சதவீதம் வரை மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது, இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது.

    சேவை கட்டணம், மீட்டர் காப்பு தொகை, பதிவு கட்டணம், வளர்ச்சி கட்டணம் என புதிதாக மும்முனை மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் 2018-ம் ஆண்டில் ரூ.7,450 ஆக இருந்தது, தற்போது அந்த கட்டணம் ரூ. 54 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது, 2018-ம் ஆண்டை ஒப்பிடும்போது இது 625 சதவீதமாக உள்ளது. அனைத்து மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறிவிட்டு, கூடுதல் மின் இணைப்பு பெற்றால் முதல் 100 யூனிட்டுக்கும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த புதிய மின் கட்டண உயர்வின் படி 2 மாதங்கள் சேர்த்து வீடுகளில் 401 முதல் 500 வரை யூனிட் வரை பயன்படுத்தும் நுகர்வோர் தான் அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். தற்போது 500 யூனிட் பயன்படுத்தினால் ரூ.1,130 கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கு மேல் ஒரு யூனிட் பயன்படுத்தினாலும் ரூ.1,725 கட்டணம் செலுத்த வேண்டும். இது 52.60சதவீதம் அதிகமாகும், மின்கட்டண உயர்வால் தொழில் முனைவோர் மிகவும் பாதிக்கப்படுவார்கள், குறிப்பாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படும். மின் கட்டண உயர்வு தொடர்பாக, பொது மக்களிடம் தமிழக அரசு சார்பில் கருத்து கேட்பு நடந்தது. மதுரை, கோவை, சென்னையில் நடந்த கூட்டங்களில் ஒரு நபர் கூட மின் கட்டண உயர்வை ஆதரித்து பேசவில்லை.எத்தனை மாவட்டங்களில் நடந்தாலும் யாரும் மின் கட்டண உயர்வை ஆதரித்து பேச மாட்டார்கள். முதலமைச்சரும், மின்சாரத்துறை அமைச்சரும் கள நிலவரங்களை உள்வாங்கி கொண்டு மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 10 விசைத்தறிகளை வைத்து நெசவு செய்ய 25 - 30 லட்சம் ரூபாய் வரை தேவை.
    • தமிழக அரசு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.

    பல்லடம் :

    கோவையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பிலான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், தொழில் துறையினர் பங்கேற்றனர்.அதில் பங்கேற்ற திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:-

    சொந்த கட்டடம் கட்டி, குறைந்தபட்சம் 10 விசைத்தறிகளை வைத்து நெசவு செய்ய 25 - 30 லட்சம் ரூபாய் வரை தேவை. இவ்வாறு, முதலீடு செய்தாலும், 30 ஆயிரம் ரூபாய் தான் வருவாய் கிடைக்கும். இவ்வாறு குறுந்தொழிலாக உள்ள விசைத்தறி தொழிலுக்கு, தமிழக அரசு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.பண மதிப்பிழப்பு, அகமதாபாத் டையிங் பிரச்னை, ஜி.எஸ்.டி., கொரோனா ஊரடங்கு, கூலி பிரச்னை, மற்றும் நூல் விலை உயர்வு என, கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். நாங்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.பல கட்ட போராட்டத்துக்குப் பின், கூலி உயர்வு கிடைத்தது. தற்போது போராடி பெற்ற கூலிக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் விசைத்தறி தொழில் காணாமல் போகும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

    • திருப்பூருக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்த அரசு அ.தி.மு.க. அரசு.
    • பஞ்சு, நூல் விலை உயர்வால் பனியன் தொழில் முடங்கியுள்ளது.

    திருப்பூர் :

    மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    எந்த வரியும் புதிதாக போட மாட்டோம் என்று சொல்லி வீட்டுவரி, சொத்துவரி, தண்ணீர் வரி, மின்கட்டணம் பன்மடங்கு உயர்வு போன்றவற்றை தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து அறிவித்து வருகிறது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல், புதிதாக வரியை போட்டு ஏழை, எளிய மக்கள் தலையில் சுமையை ஏற்படுத்தியுள்ளனர்.

    திருப்பூருக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்த அரசு அ.தி.மு.க. அரசு. 4-வது குடிநீர் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கொண்டு வந்தோம். ஆனால் அந்த திட்டங்களை விரைவில் முடிக்காமல் தி.மு.க. அரசு காலதாமதம் செய்து வருகிறது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை தற்போது தி.மு.க. அரசு திறந்து வைக்கிறது.

    பஞ்சு, நூல் விலை உயர்வால் பனியன் தொழில் முடங்கியுள்ளது. விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் திருப்பூருக்கு தோஷம் வந்துவிடுகிறது. மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. மீண்டும் பனியன் நிறுவனங்களை மூடும் நிலை வரும். அதை கண்டித்து இந்த போராட்டம் நடக்கிறது. தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், பழனிசாமி, என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், கருணாகரன், ஹரிகரசுதன், பி.கே.எம்.முத்து, சுப்பிரமணியம், பட்டுலிங்கம், கே.பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், இணை செயலாளர் உஷா ரவிக்குமார், துணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி, வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், வக்கீல் பிரிவு செயலாளர் முருகேசன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிட்டி பி.பழனிசாமி, துணை செயலாளர் ரோட்டரி தேவராஜ், இணை செயலாளர் சம்பத், அர்பன் வங்கி தலைவர் சடையப்பன், வெள்ளகோவில் ஒன்றிய தலைவர் வெங்கடேச சுதர்சன், அ.தி.மு.க. அம்மா பேரவை மாநில இணை செயலாளர் கே.ஜி.முத்துவெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் நீதிராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் தண்ணீர்பந்தல் தனபால் மற்றும் காங்கயம், வெள்ளகோவில், சென்னிமலை பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.

    • மின்கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என கலெக்டரிடம் த.மா.கா.வினர் மனு கொடுத்தனர்.
    • மின் கட்டண உயர்வு வெந்த புண்ணில் வேைல பாய்ச்சுவதாக உள்ளது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜாங்கம் தலைமையில் நிர்வாகிகள் இன்று கலெக்டர் அனீஷ்சேகரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு தற்போது மின்சார கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. கடந்த 3,4 வருடங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிறு தொழில், குறு தொழில்கள் நசிந்து ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் வீட்டு வரி, ெசாத்துவரியை தமிழக அரசு உயர்த்தியது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வு வெந்த புண்ணில் வேைல பாய்ச்சுவதாக உள்ளது.

    மின்கட்டண உயர்வு குறித்து அமைச்சர் கூறுகையில் சம்பந்தமே இல்லாமல் மத்திய அரசின் அழுத்தம் காரணமாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், தமிழ்நாடு மின்சாரவாரிய ஒழுங்குமுறை ஆணையமே மின்கட்டண உயர்வுக்கு காரணம் என்றும் சொல்லி ஏழை, எளிய, நடுத்தர மக்களை இந்த அரசு வாட்டி வதைக்கிறது. எனவே தமிழக அரசு உயர்த்திய மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே.ராஜேந்திரன், நிர்வாகிகள் லக்கி மைதீன் பாட்சா, சிலுவை, பைரவமூர்த்தி, மணி, நடராஜன், சீனிவாசன், பிரேம்குமார், எஸ்.பி.ஆறுமுகம், சிவசுந்தரம், மீனா செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மின்கட்டண உயர்வை கண்டித்து 3 இடங்களில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    மதுரை

    மின் கட்டண உயர்வு, மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் நாளை (திங்கட்கிழமை) அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் 3 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள். மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முனிச்சாலை சந்திப்பில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறார்கள்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கருப்பாயூரணியில் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கிழக்கு மாவட்ட செயலாளர்- அமைப்பு செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

    சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவில் முன்பு தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்று சிறப்புரை யாற்றுகிறார். சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

    நாளை மறுநாள் (26-ந்தேதி) தேனியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டத்தில் நாளை 3 இடங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அ.தி.மு.க. வினர், பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    ×