search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளம்"

    • தொழில்நுட்ப நிபுணர்கள் முழுமையான ஆய்வு நடத்தி வருகின்றனர்.
    • மழைக்குப் பிறகு நகரின் பிடிஎம் லேஅவுட் பகுதிகளில் 4 அடி பள்ளம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூர்:

    பெங்களூர் ஹலசூரில் உள்ள கென்சிங்டன் சிக்னல் சந்திப்பு அருகே இரவு 8 மணி அளவில் திடீரென 10 அடி ஆழத்தில் சிமெண்ட் சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது.

    இதை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நில நடுக்கம் ஏற்பட்டிருக்குமோ? என பீதி அடைந்தனர்.

    பரபரப்பான சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் உள்ளூர் அதிகாரிகள் பாதுகாப்புக்காக அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். பின்னர் பொதுமக்கள், வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விடாதபடி சுற்றிலும் பேரிகார்டர் அமைத்து, எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது.

    இதையடுத்து முதற்கட்ட விசாரணையில் கடந்த ஆண்டு இந்த சிமெண்ட் சாலை போடப்பட்டது. சாலையின் அடியில் உள்ள தண்ணீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த பள்ளம் ஏற்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நில நடுக்கம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், தொழில்நுட்ப நிபுணர்கள் முழுமையான ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த மே மாதம் பலத்த மழைக்குப் பிறகு நகரின் பிடிஎம் லேஅவுட் பகுதிகளில் 4 அடி பள்ளம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டது.
    • மழைநீர் தேக்கத்தால் மண் சரிந்து உள்வாங்கி இருக்கலாம் என்றனர்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலை பிரபலமானது. அந்த பகுதியில் வி.ஐ.பி.க்கள் வசிக்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து இந்த சாலை வழியாகத்தான் தலைமைச் செயலகத்துக்கு சென்று வருவார்.

    இந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் டி.டி.கே.சாலை தபால் நிலையம் அருகில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. 4 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு உண்டானது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அங்கு விரைந்த போலீசார் உடனடியாக பள்ளம் விழுந்த பகுதியை சுற்றி தடுப்பு வேலி அமைத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். அந்த வழியில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் வந்து சாலையில் திடீர் பள்ளம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். தற்போது ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டதா? அருகில் எதுவும் குழி உள்ளதா? என பார்வையிட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, பரபரப்பான இந்த சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மெல்ல மெல்ல சாலை மண்ணுக்குள் செல்வதை அறிந்து தகவல தெரிவித்தோம். உடனடியாக பள்ளத்தை பார்த்ததால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. மழைநீர் தேக்கத்தால் மண் சரிந்து உள்வாங்கி இருக்கலாம் என்றனர்.

    • அங்கிருந்தவர்கள் பள்ளத்தின் அருகில் தடுப்புகளை அமைத்து வாகன ஓட்டிகளை உஷார்படுத்தினர்.
    • மாநகராட்சி ஊழியர்களும் விரைந்து சென்று பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    கிண்டியில் இருந்து அடையாறு செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளது. இதன் அருகில் இன்று காலை 8 மணியளவில் 'திடீர்' பள்ளம் ஏற்பட்டது. 8 அடி ஆழத்தில் 6 அடி அகலத்தில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இருப்பினும் வாகன ஓட்டிகள் நடுரோட்டில் விழுந்த பெரிய பள்ளத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் பள்ளத்தின் அருகில் தடுப்புகளை அமைத்து வாகன ஓட்டிகளை உஷார்படுத்தினர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் விரைந்து சென்று பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேரம் இந்த பணி நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் பள்ளத்தை மூடி சரி செய்தனர்.

    இதன் காரணமாக சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். பள்ளம் மூடப்பட்ட பிறகு அந்த வழியாக போக்குவ ரத்து சீரானது. வழக்கம் போல வாகனங்கள் சென்றன.

    • பள்ளத்தை சரி செய்யும் பணியில் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
    • வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் அருகே உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதனால் திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் சாலை மூடப்பட்டது. மத்திய கைலாசில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. அடையாறு பாலம் அருகே சாலையில் ஏற்பட்ட இந்த பள்ளத்தை சரி செய்யும் பணியில் போலீசாரும், மாநகராட்சி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் சாலை மூடப்பட்டதால் அப்பகுதிக்கு செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    தற்போது சிறிய அளவில் உள்ள பள்ளம் எதிர்பாராமல் கனரக வாகனம் சென்றால் பெரிய அளவிலான பள்ளம் ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளது.

    கடலூர்: 

    கடலூர் - நெல்லிக்குப் பம் சாலை அரசு ஆஸ்பத்திரி எதிரில் பாதாள சாக்கடை உள்ளது. இங்கு திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இத னால் இவ்வழியில் செல்லும் வாகனங்கள் சாலை ஓர மாக சென்று வருகின்றனர்.இந்நிலையில் இந்த பள்ளத்தில் தற்போது திடீரென்று மரக்கிளை வைக்கப்பட்டு, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல எச்சரிக்கப்பட்டுள்ளது

    கடலூர் - நெல்லிக்குப்பம் சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து நிறைந்த சாலை என்பதால் இந்த திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.மேலும், தொடர் மழை பெய்து வரும் காரணத்தி னால் தற்போது சிறிய அளவில் உள்ள பள்ளம் எதிர்பாராமல் கனரக வாகனம் சென்றால் பெரிய அளவிலான பள்ளம் ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளது.ஆகையால் சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் கால தாமதம் இன்றி உடனடியாக திடீரென்று ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்து பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் அச்சம்-போக்குவரத்து பாதிப்பு
    • சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    களியக்காவிளை :

    நாகர்கோவில்-களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் குழித்துறை சந்திப்பு பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். இந்த சாலையில் நேற்று இரவு திடீரென விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் சற்று நேரத்தில் 10 அடி ஆழமாக மாற அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் திடீரென ஏற்பட்ட பள்ளம் அந்தப் பகுதி மக்களை அச்சத்திற் குள்ளாக்கியது.

    அவர்கள் அந்த வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கபட்டது. சாலையின் இரு புறமும் வாகனங்கள் நின்றதால் சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொது மக்களும், இளைஞர்களும் சேர்ந்து போக்குவரத்தை சரி செய்ய முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

    எனவே களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் அந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு வேலிகள் அமைத்தனர்.

    சாலை பணி நடைபெற்று சில மாதங்களே ஆன நிலையில் சாலையின் நடுவில் 10 அடி பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தக்குழியில் வாகனங்கள் செல்ல, செல்ல மேலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
    • மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் மயானம் அருகே செல்லும் நடுரோட்டில் ஏற்பட்ட சிறிய குழியை மூட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர் முன்னா ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தார். தற்போது இந்தக்குழியில் வாகனங்கள் செல்ல, செல்ல மேலும் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளத்தில் உள்ளிருக்கும் அனைத்து கேபிள்களும் வெளியே தெரியும் வகையில் ஆபத்தான நிைலயில் காணப்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமூக ஆர்வலர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் அவதி
    • நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் உள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காகவும் குடிநீர் திட்ட பணிகளுக்காகவும் சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப் பட்டுள்ளது.

    நகரின் பிரதான சாலை களான கேப் ரோடு, அவ்வை சண்முகம் சாலை, மீனாட்சிபுரம் சாலை, செட்டிகுளம் சாலை மற்றும் நாகர்கோவில்- திருவனந்தபுரம் சாலை யிலும் குழிகள் தோண்டப் பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செட்டிகுளம் சந்திப் பில் சாலை நடுவே மிகப் பெரிய பள்ளம் ஏற்பட்டு அரசு பஸ் சிக்கியது. இதைத் தொடர்ந்து மாநக ராட்சி அதிகாரிகள் அந்த இடத்தை காங்கிரீட் கலவை களால் சரி செய்தனர்.

    இந்த நிலையில் நாகர் கோவில்- திருவனந்தபுரம் நெடுஞ்சாலை சந்திப்பில் நேற்று இரவு குடிநீர் குழா யில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதைத் தொடர்ந்து அதிகா ரிகள் அந்த பகுதியில் குடிநீர் விநியோகத்தை நிறுத்தி உடைப்பை சரி செய்தனர்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் இன்று காலை பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்திற்காக தோண் டப்பட்டு மூடப்பட்ட பகுதி யில் சாலையின் நடுவே மிகப்பெரிய அள வில் பள்ளம் விழுந்தது. இதில் அந்த வழியாக வந்த ஆட்டோ சிக்கியது. மேலும் கார் ஒன்றும் அதில் சிக்கி யது.

    சாலையின் நடுவே கிடந்த பள்ளத்தை தொ டர்ந்து வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்காமல் இருக்க அந்த பகுதியில் சாலையின் ஓரமாக சென்ற னர். சாலையில் பள்ளம் ஏற்பட்டதையடுத்து சாலை ஓரமாக வாகனங்கள் சென் றன. இதனால் அந்த பகுதி யில் கடுமையான போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட் டது. காலை நேரம் என்ப தால் பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகளை இரு சக்கர வாகனங்களிலும் 4 சக்கர வாகனங்களில் அழைத்து சென்ற பெற்றோ ரும் போக்குவரத்து நெருக் கடியில் சிக்கித் தவித்தனர். அரசு பஸ்களும் போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கி தவித்ததால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளானார் கள்.

    சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது பற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று போக்கு வரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சாலை நடுவே கிடந்த பள்ளத்தை சுற்றியும் கற்கள் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் வேறு வாகனங்கள் சிக்காத வகையில் மரக் கிளைகளையும் பொது மக்கள் முறித்து வைத்துள்ள னர்.

    மாநகராட்சி ஊழியர்கள் உடனடி நடவடிக்கையாக அந்த பகுதியில் உள்ள பள்ளத்தை சீரமைத்து சாலையை சரி செய்ய வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பிரதான சாலைகளில் பள்ளங்கள் ஏற்படு வது வாடிக்கையாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாதாள சாக்க டைக்காக தோண்டப்பட்ட பிறகு சாலைகள் மூடப்படும் போது சரியான காங்கிரீட் கலவைகள் அமைக்கப்படாமல் சாலைகள் அமைக்கப் படுவது தான் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி மேயர் இதில் தனிக் கவனம் செலுத்தி பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்படும் பள்ளங் கள் மூடப்படும் போது அதற்கான விதிமுறைக் குட்பட்டு காங்கீரீட் தளம் அமைத்து மூடப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஆதினங்குடியிலிருந்து கணபதிபுரம் வரை செல்லும் சாலை உள்ளது.

    இந்த சாலை சுமார் 5 கிலோமீட்டர் தொலைவு கொண்டது.

    இந்த சாலையை ஆதினங்குடி,பண்டாரவடை, இடையாத்தங்குடி, தென்பிடாகை, கிடாமங்கலம், ஏர்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடும் நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வர இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

    மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் இந்த சாலை வழியே சென்று வருகின்றன.

    மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உள்ளூர் வெளியூர்களுக்கு எடுத்துச்செல்ல இதே சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் சாலை சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றன.

    இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்லும் பொதுமக்கள் சாலையில் மின் வசதி இல்லாத காரணத்தால் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றன.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    • சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் கம்பிகள் ஆபத்தான நிலையில் வெளியே நீட்டிக்கொண்டுள்ளது.
    • உயிர்பலி வாங்க காத்திருக்கும் இந்த பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்க வேண்டும், ஒளிரும் பட்டைகள் ஒட்டவேண்டும்.

    திண்டுக்கல்:

    பழனி-ஒட்டன்சத்திரம் இடையே 17 கி.மீ தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.172 கோடி மதிப்பில் 4 வழிச்சாலை பணிகள் தொடங்கி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இத்திட்டத்திற்காக 9.50 மீட்டர் அகலமுள்ள சாலையை 16.50 மீட்டராக அகலப்படுத்தப்பட்டது.

    மேலும் சாலையோரங்களில் இருந்த 700-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. தற்போது பழனி-திண்டுக்கல் சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மழைநீர் வடிந்து செல்ல சிறுபாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

    இதற்காக சாலையின் இருபுறமும் பெரியபள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் தடுப்புமற்றும் அறிவிப்பு பலகை உள்ளிட்ட எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பணிகள் நடைபெறும் இடத்தில் கம்பிகள் ஆபத்தான நிலையில் வெளியே நீட்டிக்கொண்டுள்ளது.

    எனவே உயிர்பலி வாங்க காத்திருக்கும் இந்த பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைக்க ேவண்டும், ஒளிரும் பட்டைகள் ஒட்டவேண்டும். பணி நடைபெறும்போது எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிநீர் திட்டப்பணிக்காக பிரதான சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • அந்த பகுதியில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதி என்பது குறிப்பிடதக்கது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு வரும் காவேரி கூட்டுகுடிநீர் திட்ட குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளதாக மாலை மலர் செய்தி வெளியானது.

    இதனைதொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் ராமேசுவரம், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை திட்ட குடி கார்னர் பகுதியில் சேதமடைந்த காவேரி குழாய் சீரமைப்பு பணிக் காக குழி தோண்டப்பட்டு அதிகாலை 4 மணிக்கு சேதமடைந்த பகுதி சீரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. சிமெண்ட் மூலம் சீரமைக் கப்பட்டதால் குறைந்த பட்சம் 12 மணிநேரம் ஆகும்.

    குழி தோண்டப்பட்ட இடம் ராமநாதசுவாமி கோவில், தனுஷ்கோடி, ராமநாதபுரம், கெந்தமாதன பர்வதம் ஆகிய பகுதிக்கு பிரிந்து செல்லும் பிரதான சாலை என்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளா கினர். மேலும் அந்த பகுதியில் நாள் தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் பகுதி என்பது குறிப்பிடதக்கது.

    • சேலம்-கோவை பைபாஸ் ரோட்டில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது
    • தொடர் மழையின் காரணமாக இந்தப் பகுதி யில் மழைநீர் தேங்கியதால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    பவானி,

    ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் இருந்து கோபி, கவுந்தப்பாடி வழி யாக செல்லும் சாலையில் பச்சப்பாளி பஸ் ஸ்டாப் அருகே உள்ள வாய்க்கால் மேடு உள்ளது. அப்பகுதியில் நேற்று இரவு திடீர் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இந்த திடீர் பள்ளத்தில் கவுந்த ப்பாடியில் இருந்து சித்தோடு நோக்கி வந்து கொண்டு இருந்த சித்தோடு, தாய்நகர் பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளி வெங்கடேசன் (52) நிலை தடுமாறி தான் ஓட்டி வந்த பைக் உடன் பள்ளத்தில் தவறி விழுந்து ள்ளார்.

    இதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். அவரின் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இச்சம்பவம் தொடர்பாக கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிற்க்கு பொது மக்கள் தகவல் தெரிவி த்துள்ளனர். அவரின் உத்தர வின் பேரில் ஈரோடு எஸ்.பி. ஜவகர், ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறை யினர், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து திடீர் பள்ளம் ஏற்பட்டது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில் அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகளுக்காக அப்போது அந்த பகுதியில் சாலையில் குறுக்கே குழாய் அமைக்கும் பணி நடைபெற்றதாகவும், கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக இந்தப் பகுதி யில் மழைநீர் தேங்கியதால் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டு அந்த வழியே சென்ற வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து பவானி சித்தோடு உட்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அம்மாபேட்டை ஹைவே ரோந்து பணி போலீசாராக பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசு ப்பிரமணியம் (52) என்பவர் மீது அவ்வழியாக வந்த ஜீப் ஒன்று மோதி விபத்துக்கு ள்ளானது. இதனைத் தொடர்ந்து பலத்த காயம் அடைந்த பாலசுப்பிரம ணியம் தனியார் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×