என் மலர்
நீங்கள் தேடியது "Bangkok"
- ராஜமாதா சிரிகிட் உடைய பிறந்தநாள் அந்நாட்டில் அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
- தனது 18 வயதில் மன்னர் பூமிபால்-ஐ அவர் சிரிகிட் திருமணம் செய்து கொண்டார்.
தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிராலங்கார்னின் தாயாரான ராஜமாதா சிரிகிட் (Queen Mother Sirikit) உடல்நலக்குறைவால் காலனமார். அவருக்கு வயது 93.
ராஜமாதா சிரிகிட், தாய்லாந்தை மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான பூமிபால் அதுல்யதேஜின் மனைவியாவார்.
அக்டோபர் 17 ஆம் தேதி முதல் இரத்தத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9.14 மணியளவில் பாங்காக்கில் உள்ள சுலாலோங்கார்ன் மருத்துவமனையில் காலமானார் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல், இறுதிச் சடங்கு வரை பாங்காக்கில் உள்ள கிராண்ட் பேலஸில் வைக்கப்பட உள்ளது.
1932 ஆகஸ்ட் 12 பிறந்த ராஜமாதா சிரிகிட் உடைய பிறந்தநாள் அந்நாட்டில் அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
தனது 18 வயதில் மன்னர் பூமிபால்-ஐ அவர் சிரிகிட் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2016 இல் பூமிபால் காலமான பின் இவர்களது மகன் வஜிராலங்கார்ன் மன்னராக முடிசூடினார்.

2012 முதல் சிரிகிட் பொதுவெளியில் அதிகம் தோன்றாமல் இருந்து வந்தார். தாய்லாந்தில் கிராமப்புற மேம்பாடு பெண்களின் கைவினை தொழில்களுக்கு உதவுதல், சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வு மற்றும் பல்வேறுநலத்திட்ட பணிகளை சிரிகிட் மேற்கொண்டு வந்தார்.
- கிட்டத்தட்ட 160 அடிக்கு மேலாக பெரும் பள்ளம் ஏற்பட்டது.
- பள்ளத்தில் வாகனங்கள் மட்டுமில்லாமல் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் கார்கள் விழுந்தது நொறுங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிட்டத்தட்ட 160 அடிக்கு மேலாக பெரும் பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் வாகனங்கள் மட்டுமில்லாமல் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. ஆனால் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. சாலைக்கு அடியில் இருந்த சுத்திகரிப்பு குழாய்கள் வெடித்ததால் இந்த பெரும் பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- பிரபலமான ஓர் டோர் கோர் (Or Tor Kor) சந்தையில் நடந்தது.
- துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் வாகன நிறுத்துமிடத்தின் வழியாக ஓடும் காட்சியும் வெளியாகி உள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரபலமான ஓர் டோர் கோர் (Or Tor Kor) சந்தையில் திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, அடையாளம் தெரியாத ஒருவர் சந்தையில் நான்கு பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றார். பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சந்தையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும் மக்கள் தப்பியோடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும், துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் வாகன நிறுத்துமிடத்தின் வழியாக ஓடும் காட்சியும் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தின் நோக்கம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இது தனிப்பட்ட தகராறு காரணமாக நடந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையேயான தற்போதைய எல்லை மோதல்களுடன் இதற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இடிந்து விழுந்ததில் இறப்புகள் பதிவாகியுள்ளன.
- சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலஅதிர்வு ஏற்பட்டது.
மியான்மரில் இன்று நண்பகலில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகியுள்ளன.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.
சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மியான்மரில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மண்டலே நகரில் உள்ள ஒரு மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இடிந்து விழுந்ததில் இறப்புகள் பதிவாகியுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பலர் உள்ளே சிக்கியுள்ளதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் கடுமையாக உணரப்பட்டது. தாய்லாந்தில் உயரமான பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் வெளியே ஓடி வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் இந்த நிலநடுக்கம் இந்தியாவின் மேற்கு வங்க வங்க தலைநகர் கொல்கத்தா, மணிப்பூர் தலைநகர் இம்பால் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. வங்கதேசத்தின் டாக்கா மற்றும் சட்டோகிராமிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளது.
சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் வலுவான நிலஅதிர்வு ஏற்பட்டதாக சீன நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

- லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது.
- தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:45 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்றும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை. விபத்து தொடர்பான ரேடார் பதிவுகளில், விமானம் 37,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூன்று நிமிடங்களில் 31,000 அடிக்குக் கீழே இறங்கியது. பின் அங்கிருந்து வேகமாக இறங்கி அரை மணி நேரத்திற்குள் பாங்காக்கில் தரையிறங்கியது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் இதுவரை இதுவரை மொத்தம் ஏழு விபத்துகளைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கிறிஸ்மஸ் தினத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
- முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருவதாக அறிவிப்பு வெளியானது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அருண்விஜய் வில்லனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். 'திருச்சிற்றம்பலம்' படத்தின் நாயகியான நித்யாமேனனுடன் தனுஷ் மீண்டும் இணைகிறார் என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளியாகின.

இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி பகுதியில் தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், மீதமுள்ள காட்சிகளை படமாக்க இந்த வாரம் படக்குழு பாங்காக் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவடைந்து விடும் என்றும் சொல்லப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- முதல் விமானத்திலேயே 98 சதவீத இருக்கைகள் நிறைந்து காணப்பட்டது.
- 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அந்த விமானம் புறப்பட்டு 4 மணி நேரம் பயணித்துள்ளது.
டாடா குழுமத்துக்கு சொந்தமான இந்தியாவின் பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா குஜராத் மாநிலம் சூரத் நகரில் இருந்து தாலாய்ந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புதிதாகவிமான சேவையை தொடங்கியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமானமானது சூரத்தில் இருந்து புறப்பட்டு 4 மணி நேரம் பயணித்து பாங்காக் சென்றுள்ளது. இந்த விமானத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் அனைத்தையும் பயணிகக்ள் 4 மணி நேரத்தில் குடித்துத் தீர்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் விமானத்திலேயே 98 சதவீத இருக்கைகள் நிறைந்து காணப்பட்டது. அதாவது, 175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் அந்த விமானம் புறப்பட்டு 4 மணி நேரம் பயணித்துள்ளது. விமானத்தில் மதுபானம் தீர்ந்துவிட்டது என்று பயணிகள் கூறும் வீடியோக்கள் வெளிவந்தன.
1.8 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள 15 லிட்டர் பிரீமியம் மதுபான வகைகள் அந்த விமானத்தில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
விமானத்தில் ஒரு பயணிக்கு 100 மில்லிக்கு மேல் மதுபானம் வழங்கப்படுவதில்லை என்ற விமான ஊழியர்கள் தெரிவிக்கும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஏர் இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்திருந்தனர்.
அப்போது வணிக வளாகத்தின் 8-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த மாடிகளுக்கும் தீ மளமளவென பரவியது.
இதனால் பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது ஒருவர் வணிக வளாகத்தின் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

ஆனால் அதற்குள் தீயில் கருகி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 17 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #Thailand #ShoppingMall #FireAccident
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்த விமானத்தில் முகைதீன் என்பவர் கூடையில் வைத்து சிறுத்தை குட்டி ஒன்றை கடத்தி வந்திருந்தார்.
அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சிறுத்தை குட்டி வண்டலூர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.
பிறந்து 1½ மாதமே ஆன அந்த சிறுத்தை குட்டியை பூங்கா ஊழியர்கள் கண்காணித்து பராமரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தைக்குட்டியை மீண்டும் பாங்காங்குக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய அரசின் வனவிலங்கு மற்றும் விலங்கு பொருட்கள் தடுப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “தாய்லாந்தில் உள்ள அதிகாரிகளிடம் சிறுத்தை குட்டியை திருப்பி அனுப்புவது குறித்து பேசி உள்ளோம். அவர்கள் சிறுத்தை குட்டியை பெற சம்மதித்துள்ளனர். விரைவில் பாங்காங்கிற்கு சிறுத்தை குட்டி அனுப்பப்படும்” என்றார்.
வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, “மீட்கப்பட்ட சிறுத்தைகுட்டி பூங்காவில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அது நல்ல நிலையில் உள்ளது. உரிய உத்தரவு கிடைத்தவுடன் அந்த சிறுத்தை குட்டியை ஒப்படைப்போம்” என்றார். #Leopardcub #Bangkok
தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த அபாயகரமான நச்சு துகள்கள் பிஎம் 2.5 எனும் அளவை கடந்து, தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருகிறது என அந்நாட்டின் காற்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் அப்பகுதியில் பாதிப்புக்குள்ளான மக்கள், தங்கள் மூக்குகளில் இருந்து ரத்தம் கசிவதையும், இருமலின் போது ரத்தம் வருவதையும், கண்களின் கருவிழிகளில் ரத்தம் உறைந்து இருப்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த பதிவுகளை வெளியிட்டு, தங்கள் உடல்நலனை பாதுகாக்கும் படியும், இதுபோன்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இதனையடுத்து அடுத்த சில வாரங்களுக்கு பள்ளிகள் மூடவும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கக் கோரியும் நாடு முழுவதும் ஆலைகளை ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தாய்லாந்து அரசின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு பின்னரும் காற்றில் எந்த மாறுபாடும் இல்லாமல் நச்சுத்தன்மையின் வீரியம் அதிகரித்து வருகிறது. மேலும் ஏர்விஷ்வல்ஸ் நிறுவனம் கடந்த வாரம் நடத்திய ஆய்வில், உலக அளவில் காற்று மாசுபாடு நிறைந்த நாடுகளில் பாங்காக் 5-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #BangkokToxicAir






