search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bangkok"

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள். #Thailand #ShoppingMall #FireAccident
    பாங்காக்:

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்திருந்தனர்.

    அப்போது வணிக வளாகத்தின் 8-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த மாடிகளுக்கும் தீ மளமளவென பரவியது.

    இதனால் பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது. மக்கள் அனைவரும் அலறிஅடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது ஒருவர் வணிக வளாகத்தின் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.



    இதற்கிடையில் தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ஆனால் அதற்குள் தீயில் கருகி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 17 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  #Thailand #ShoppingMall #FireAccident 
    தாய்லாந்து நாட்டின் ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். #BangkokFire
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டின் தலைநகரம் பாங்காங். இந்நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது பாங்காங் சென்ட்ரல் வேர்ல்டு ஷாப்பிங் மால். இந்த ஷாப்பிங் மாலில் இன்று மாலை திடீரென தீ ஏற்பட்டது. மாலின் 8வது மாடியில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்  தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். #BangkokFire
    பாங்காங்கில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிறுத்தைக்குட்டியை மீட்ட அதிகாரிகள் அதனை மீண்டும் பாங்காங்குக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். #Leopardcub #Bangkok
    சென்னை:

    தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு வந்த விமானத்தில் முகைதீன் என்பவர் கூடையில் வைத்து சிறுத்தை குட்டி ஒன்றை கடத்தி வந்திருந்தார்.

    அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சிறுத்தை குட்டி வண்டலூர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டது.

    பிறந்து 1½ மாதமே ஆன அந்த சிறுத்தை குட்டியை பூங்கா ஊழியர்கள் கண்காணித்து பராமரித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தைக்குட்டியை மீண்டும் பாங்காங்குக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக மத்திய அரசின் வனவிலங்கு மற்றும் விலங்கு பொருட்கள் தடுப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “தாய்லாந்தில் உள்ள அதிகாரிகளிடம் சிறுத்தை குட்டியை திருப்பி அனுப்புவது குறித்து பேசி உள்ளோம். அவர்கள் சிறுத்தை குட்டியை பெற சம்மதித்துள்ளனர். விரைவில் பாங்காங்கிற்கு சிறுத்தை குட்டி அனுப்பப்படும்” என்றார்.

    வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, “மீட்கப்பட்ட சிறுத்தைகுட்டி பூங்காவில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. அது நல்ல நிலையில் உள்ளது. உரிய உத்தரவு கிடைத்தவுடன் அந்த சிறுத்தை குட்டியை ஒப்படைப்போம்” என்றார். #Leopardcub #Bangkok
    பாங்காக்கில் பரவி வரும் நச்சுக்காற்றினால் மக்களின் கண்கள் மற்றும் மூக்குகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #BangkokToxicAir
    பாங்காக்:

    தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது.  இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகிறது.  இந்த அபாயகரமான நச்சு துகள்கள் பிஎம் 2.5 எனும் அளவை கடந்து, தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருகிறது என அந்நாட்டின் காற்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    மேலும் அப்பகுதியில் பாதிப்புக்குள்ளான மக்கள், தங்கள் மூக்குகளில் இருந்து ரத்தம் கசிவதையும், இருமலின் போது ரத்தம் வருவதையும், கண்களின் கருவிழிகளில் ரத்தம் உறைந்து இருப்பதையும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த பதிவுகளை வெளியிட்டு, தங்கள் உடல்நலனை பாதுகாக்கும் படியும், இதுபோன்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.  இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.  

    இதனையடுத்து அடுத்த சில வாரங்களுக்கு பள்ளிகள் மூடவும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கக் கோரியும் நாடு முழுவதும் ஆலைகளை ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தாய்லாந்து அரசின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு பின்னரும் காற்றில் எந்த மாறுபாடும் இல்லாமல் நச்சுத்தன்மையின் வீரியம் அதிகரித்து வருகிறது. மேலும்  ஏர்விஷ்வல்ஸ் நிறுவனம் கடந்த வாரம் நடத்திய ஆய்வில், உலக அளவில் காற்று மாசுபாடு நிறைந்த நாடுகளில் பாங்காக் 5-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #BangkokToxicAir
    ×