என் மலர்
நீங்கள் தேடியது "Couple Dead"
- தீ விபத்தில் தம்பதி நடராஜன்- தங்கம் மற்றும் அவர்களது மகன் ஸ்ரீராம் ஆகியோர் சிக்கினர்.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கத்தில் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கணவன்- மனைவி உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்தில் தம்பதி நடராஜன்- தங்கம் மற்றும் அவர்களது மகன் ஸ்ரீராம் ஆகியோர் சிக்கினர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீ்ட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில், தம்பதி நடராஜன்- தங்கம் ஆகியோர் இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டது. மேலும், பலத்த காயங்களுடன் ஸ்ரீராம் மீட்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குள்ளாய்பாளையம் பகுதியில் பாலப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து நாகராஜ், அவரது மனைவி ஆனந்தி ஆகியோர் உயிரிழந்தனர். மகள் தீக்ஷிதா பலத்த காயமடைந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலம் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளாததே இந்த விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தை கலெக்டர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விபத்துக்கு காரணமான பாலப்பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கணேஷ், சைட் என்ஜினீயர் குணசேகரன், சைட் மேற்பார்வையாளர் கவுதம், ஒப்பந்ததாரர் சிவக்குமார் ஆகியோர் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், விபத்தை ஏற்படுத்தி மரணம் ஏற்படுத்துதல், உரிய பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தாமல், விபத்து ஏற்பட காரணமாக இருத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே விபத்து நடந்த பகுதியை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உயிரிழந்த நாகராஜ்-ஆனந்தி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
- விபத்தில் கணவன், மனைவி 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
- கணவன், மனைவி மீது மோதிய பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குபேரன் என்பவர் தொண்டாமுத்தூர் போலீசில் சரண் அடைந்தார்.
வடவள்ளி:
கோவை ஆலாந்துறை அருகே உள்ள கள்ளிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (37). இவரது மனைவி தேவி (31). இந்த தம்பதியினருக்கு தர்னிஷ், வாசுலேகா என 2 குழந்தைகள் உள்ளனர்.
ராஜேந்திரனும், அவரது மனைவி தேவியும், பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தனர். தினமும் கணவன், மனைவி 2 பேரும் அதிகாலையிலேயே சைக்கிளில் புறப்பட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.
இன்று காலையும் வழக்கம்போல கணவன், மனைவி 2 பேரும் வேலைக்கு புறப்பட்டனர். காலை 6 மணிக்கு வீட்டில் இருந்து பூலுவப்பட்டிக்கு சைக்கிளில் சென்றனர்.
அப்போது சிறுவாணி சாலையில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் ஆலாந்துறையில் இருந்து கோவை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
திடீரென அந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த ராஜேந்திரனின் சைக்கிள் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பஸ்சில் 2 பேர் சிக்கியது தெரியாமல் பஸ்சை டிரைவர் வேகமாக இயக்கி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரின் உடலும் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.
இந்த விபத்தில் கணவன், மனைவி 2 பேரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ் நிற்காமல் வேகமாக சென்று விட்டது.
இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். மேலும் ஆலாந்துறை போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே கணவன், மனைவி மீது மோதிய பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் குபேரன் என்பவர் தொண்டாமுத்தூர் போலீசில் சரண் அடைந்தார்.
அவரை தொண்டாமுத்தூர் போலீசார், ஆலாந்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் வேலைக்கு சென்ற கணவன்- மனைவி அரசு பஸ் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தம்பதியரின் உடலை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதது உருக்குவதாக இருந்தது.
இதற்கிடையே சிறுவாணி சாலையில் அதிகளவில் வாகன போக்குவரத்து உள்ளது.
இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. எனவே இங்கு சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சம்பவத்தன்று மணிகண்டன் அவரது மனைவி லதாவுடன் பீளமேடு-வடகோவை ரெயில்வே தண்டவளம் அருகே நடந்து சென்றனர்.
- சென்னை-கோவை இன்டர்சிட்டி ரெயில் தம்பதி மீது மோதியது.
கோவை:
கோவை கணபதி நல்லாம்பாளையம் ரங்கா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). கார் டிரைவர்.
இவரது மனைவி லதா (43). இவர்கள் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஸ்ரீஜா (21), ஜீவஸ்ரீ (17) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் போதிய வருமானம் இல்லாததால் தங்களது குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து வேதனை அடைந்து வந்தனர்.
சம்பவத்தன்று மணிகண்டன் அவரது மனைவி லதாவுடன் பீளமேடு-வடகோவை ரெயில்வே தண்டவளம் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த சென்னை-கோவை இன்டர்சிட்டி ரெயில் அவர்கள் மீது மோதியது.
இதில் தலை நசுங்கி கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த எஞ்ஜின் உடனே கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் மோதி தம்பதி பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கணவர் உடலை பார்த்து கதறி அழுதுகொண்டே இருந்த நிலையில் திடீரென கல்யாணி, அவரது கணவரின் உடலில் சாய்ந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
- கணவர் இறந்த சிறிது நேரத்திலேயே மனைவியும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:-
செங்கோட்டை அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி என்ற துரை (வயது 58). வாடகை கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கல்யாணி(50).
இன்று அதிகாலை மாடசாமி என்ற துரை வீட்டில் இருந்தபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதைப்பார்த்த கல்யாணி அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். தனது கணவர் உடலை பார்த்து அவர் கதறி அழுதுகொண்டே இருந்த நிலையில் திடீரென கல்யாணி, அவரது கணவரின் உடலில் சாய்ந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரிழந்த செய்தி அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அவர்களது வீட்டில் உறவினர்களும், அப்பகுதி மக்களும் அஞ்சலி செலுத்த குவிந்தனர்.
கணவர் இறந்த சிறிது நேரத்திலேயே மனைவியும் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
- விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் தண்ணீர் பந்தல் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 24). கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேணுகா(20). நேற்றிரவு இவர்கள் மோட்டார்சைக்கிளில் பண்ணக்காரன்பட்டி திருமண விழாவிற்கு சென்றனர்.
கோவிந்தராஜ் மோட்டார்சைக்கிளை ஓட்டினார், ரேணுகா பின்னால் அமர்ந்திருந்தார். செஞ்சேரி பைபாஸ் ரோட்டில் தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக ஒரு டிப்பர் லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக லாரி கோவிந்தராஜ் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதில் கோவிந்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரேணுகா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். இதை அறிந்த அந்த பகுதி மக்கள் விரைந்து வந்து ரேணுகாவை மீட்டு பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே ரேணுகா பரிதாபமாக இறந்தார். விபத்தில் கணவன்-மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ரேணுகாவின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு எடுத்து சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.
விபத்துக்கு காரணமான டிப்பர் லாரி டிரைவர் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- மனைவி இறந்ததால் நேற்று முதல் சங்கர மகாலிங்கம் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
- இறப்பிலும் இணை பிரியாத தம்பதியின் மரணம் காரணமாக கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்பேத்கர்நகர் 3-ம் தெருவை சேர்ந்தவர் சங்கரமகாவிங்கம். இவரது மனைவி சிவஞானம்மாள். கணவன், மனைவி இருவரும் மிகவும் பாசமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை சிவஞானம்மாள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு இன்று காலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. மனைவி இறந்ததால் நேற்று முதல் சங்கர மகாலிங்கம் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.
இதற்கிடையே மனைவி இறந்ததை தாங்கி கொள்ள முடியாத அவர் இன்று காலை உயிரிழந்தார். இறப்பிலும் இணை பிரியாத தம்பதியின் மரணம் காரணமாக அக்கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.
- தனது வீட்டு வளாகத்தில் இருந்த உருண்டை பாக்கெட்டை வாசனை இல்லாத டீ தூள் என அப்பயம்மா நினைத்தார்.
- தகவல் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து கோவிந்த் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பல்ல காயத்தை சேர்ந்தவர் கோவிந்த் (வயது 70). இவரது மனைவி அப்பயம்மா (64). இவருக்கு கண் பார்வை தெரியாது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களது வீட்டு வளாகத்தில் சுற்றி திரிந்த குரங்கு ஒன்று உருண்டையான பொருட்கள் கொண்ட பாக்கெட்டை வீசிவிட்டு சென்றது.
தனது வீட்டு வளாகத்தில் இருந்த உருண்டை பாக்கெட்டை வாசனை இல்லாத டீ தூள் என அப்பயம்மா நினைத்தார். உருண்டை பாக்கெட்டைகளை எடுத்துச் சென்ற அப்பயம்மா டீ போட்டார். கணவனும், மனைவியும் குடித்தனர். டீ குடித்த சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி இருவரும் கீழே விழுந்தனர்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு வந்து கோவிந்த் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.
குரங்கு கொண்டு வந்து போட்டது என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- சந்தேகமடைந்த மக்கள் கதவை உடைத்துச் சென்று பார்த்தனர்.
- போலீசாருக்கு தெரிவிக்காமல் தம்பதியின் உடலை தகனம் செய்ததாக கூறப்படுகிறது.
உத்தரகாண்ட்:
கடும் குளிர் காரணமாக மூட்டிய நெருப்பில் மூச்சுத்திணறி தம்பதியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் பிலங்கானா பகுதியின் த்வாரி தப்லா கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதன் மோகன் செம்வால் (52) மற்றும் அவரது மனைவி யசோதா தேவி (48) ஆகியோர் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள த்வாரி தப்லாவிற்கு வந்திருந்தனர். அப்போது இரவு 11 மணியளவில் கடும் குளிர் காரணமாக நெருப்பை மூட்டி அதனை அறைக்குள் வைத்து கதவை சாத்திக்கொண்டனர். நெருப்பிடம் இருந்து வெளியேறிய புகையால் தூக்கத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
மறுநாள் காலை அவர்களது மகன் அவர்களை எழுப்ப கதவை தட்டும் போது எந்த பதிலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்து கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது அந்த தம்பதி படுக்கையில் இறந்து கிடந்தனர். இதையடுத்து போலீசாருக்கு தெரிவிக்காமல் தம்பதியின் உடலை தகனம் செய்ததாக கூறப்படுகிறது.
- திருமணம் ஆகி ஒரு மாதமே ஆன நிலையில் சாமுண்டீஸ்வரி கடந்த 15-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மனைவி தற்கொலை செய்து கொண்டதால் ஜெய்சங்கர் சோகத்தில் காணப்பட்டார்.
ராயப்பேட்டை:
சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது26).
வடபழனியில் உள்ள தனியார் கியாஸ் சிலிண்டர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.
திருமணம் ஆகி ஒரு மாதமே ஆன நிலையில் சாமுண்டீஸ்வரி கடந்த 15-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி தற்கொலை செய்து கொண்டதால் ஜெய்சங்கர் சோகத்தில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மாலை அவர் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே வாயில் நுரை தள்ளியபடி சாலையில் மயங்கி கிடந்தார். இதை அறிந்த அவரது உறவினர்கள் அவரை தண்டையார்பேட்டையில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் விஷம் குடித்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவி தற்கொலை செய்த 5 நாளில் கணவரும் இறந்திருப்பது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- தேவதானப்பட்டி காட்ரோடு பகுதியில் இருந்து தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் ஒரு ஆட்டோவில் சென்றனர்.
- ஆட்டோவை கெங்குவார்பட்டி அக்ரஹார தெருவை சேர்ந்த அருண்குமார் என்பவர் ஓட்டிச்சென்றார்.
தேவதானப்பட்டி:
சென்னை மயிலாப்பூர் பரமேஸ்வரி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(69). இவரது மனைவி சந்திரிகா(65). இவர்களுக்கு சொந்தமான வீடு கொடைக்கானல் அருகில் உள்ள பாரிகார்டன் என்ற பகுதியில் உள்ளது.
தீபாவளி பண்டிகையை இங்கு கொண்டாடுவதற்காக நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் பஸ்சில் வந்தனர். தேவதானப்பட்டி காட்ரோடு பகுதியில் இருந்து தங்கள் இருப்பிடத்திற்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் ஒரு ஆட்டோவில் சென்றனர். ஆட்டோவை கெங்குவார்பட்டி அக்ரஹார தெருவை சேர்ந்த அருண்குமார்(35) என்பவர் ஓட்டிச்சென்றார்.
இரவு 12.30 மணியளவில் ஆட்டோ காட்ரோடு சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வாகனம் ஆட்டோ மீது மோதியது. இதில நிலை குலைந்து ஆட்டோவை அருண்குமார் நிறுத்த முயன்றார். அப்போது எதிர்திசையில் பண்ணைக்காட்டில் இருந்த காய்கறிகளை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு வந்த வேன் பயங்கரமாக ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கி கமலக்கண்ணன் மற்றும் அவரது மனைவி சந்திரிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த ஆட்டோ டிரைவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த தம்பதியின் உடலையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவரான கொடைக்கானலை சேர்ந்த பாலமுருகன்(21) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொடைக்கானல் அருகில் உள்ள பாரிகார்டன் பகுதியில் பெரும்பாலானோர் வில்லா என்ற குடியிருப்பை அமைத்துள்ளனர். இங்கு வயது முதிர்ந்த தம்பதியினர் மட்டுமே வசித்து வருகின்றனர். பணியில் இருந்து ஓய்வுபெற்ற பலர் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பி இதுபோன்ற இடங்களை தேர்வு செய்து இல்லங்களை அமைத்துள்ளனர். பெரும்பாலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் நாடு முழுவதும் கேட்கும் பட்டாசு, வெடிச்சத்தம் இப்பகுதியில் இருக்காது. இதனால் சென்னையில் இருந்து பட்டாசு, வெடி சத்தத்தில் இருந்து விடுபட்டு அமைதியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் தீபாவளி பண்டிகைக்காக கொண்டு வந்த புத்தாடைகள் மற்றும் பலகாரங்களும் சிதறி கிடந்தன.






