search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ரெயில் மோதி தம்பதி பலி- தற்கொலையா? என போலீஸ் விசாரணை
    X

    கோவையில் ரெயில் மோதி தம்பதி பலி- தற்கொலையா? என போலீஸ் விசாரணை

    • சம்பவத்தன்று மணிகண்டன் அவரது மனைவி லதாவுடன் பீளமேடு-வடகோவை ரெயில்வே தண்டவளம் அருகே நடந்து சென்றனர்.
    • சென்னை-கோவை இன்டர்சிட்டி ரெயில் தம்பதி மீது மோதியது.

    கோவை:

    கோவை கணபதி நல்லாம்பாளையம் ரங்கா லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 44). கார் டிரைவர்.

    இவரது மனைவி லதா (43). இவர்கள் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஸ்ரீஜா (21), ஜீவஸ்ரீ (17) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் போதிய வருமானம் இல்லாததால் தங்களது குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து வேதனை அடைந்து வந்தனர்.

    சம்பவத்தன்று மணிகண்டன் அவரது மனைவி லதாவுடன் பீளமேடு-வடகோவை ரெயில்வே தண்டவளம் அருகே நடந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த சென்னை-கோவை இன்டர்சிட்டி ரெயில் அவர்கள் மீது மோதியது.

    இதில் தலை நசுங்கி கணவன்-மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த எஞ்ஜின் உடனே கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் மோதி தம்பதி பலியான சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×