search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசைத்தறியாளர்"

    • திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
    • கடந்த 16 நாட்களாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ. 2000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    தற்போதைய சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, பருத்தி, பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம் ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள், சிறு,குரு, தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில்துறையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 5-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரை உற்பத்தி நிறுத்த போராட்டத்தை திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்து அது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 16 நாட்களாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ. 2000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

    இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.தற்போதைய சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, பருத்தி,பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது.

    இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து துணி இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது. மேலும் மற்ற மாநிலங்களில் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் துணி உற்பத்தியாளர்கள் போட்டி போட்டு தொழில் செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து துணி உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர்.

    உலக பொருளாதார மந்தம், உக்ரையன், இஸ்ரேல் போர்கள் காரணமாக ஏற்றுமதி தடைபட்டுள்ளது. கடந்த 6 மாதமாகவே ஜவுளி உற்பத்தி தொழில் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தோம். தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததால் கடந்த நவ.5 முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகிறோம். இதன் மூலம் கடந்த 16 நாட்களாக சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இருந்த போதிலும் ஜவுளி தொழிலுக்கு சாதகமான அறிவிப்புகள் இன்னும் அரசிடம் இருந்து வரவில்லை. மின் கட்டண உயர்வு, நிலை கட்டணம் ஆகியவற்றை குறைக்க வேண்டும். மின் மிகை பயன்பாடு கட்டணம் ரத்து செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஜவுளி தொழிலை காப்பாற்ற முடியும். மத்திய அரசு நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நூல் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும். பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால் தான் ஜவுளி உற்பத்தி தொழிலை மீட்டெடுக்க முடியும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.
    • முதல்வர் மு.க. ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. இவற்றில் பல்லடம், சோமனூர் பகுதிகளில் அதிகப்படியான விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி தொழிலை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பல்லடம் பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என விசைத்தறியாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:- விசைத்தறி தொழில் மேலும் வளர்ச்சி பெற, பல்லடத்தை மையமாகக் கொண்டு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கடந்த 2017 முதல் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசே நிலம் அளித்து, அதில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இன்று வரை திட்டம் கிடப்பில் உள்ளது.

    சமீபத்தில் கோவை வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், கொங்கு மண்டலத்தில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். எங்களது பல நாள் கோரிக்கையின்படி பல்லடத்தில் ஜவுளி சந்தை அமைத்து தர வேண்டும். இதனால் நெசவாளர்கள் சொந்த விசைத்தறியாளர்களாக மாற வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். 

    • விசைத்தறிக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டண த்தை, தமிழக அரசு 50 சதவீதம் குறைந்தது
    • முதல் 1,000 யூனிட் வரை இலவச மின்சார சலுகையையும் அளித்தது.

    மங்கலம்  :

    தவணை முறையில் மின் கட்டணத்தை செலுத்த அனுமதி வழங்க கோரி அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் விசைத்தறி யாளர்கள் கூட்டமைப்பினர் மனு அளித்துள்ளனர்.

    விசைத்தறிக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டண த்தை, தமிழக அரசு 50 சதவீதம் குறைந்தது. முதல் 1,000 யூனிட் வரை இலவச மின்சார சலுகையையும் அளித்தது. இந்நிலையில் நிலுவை யில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த தவணை கேட்டும், மின் கட்டணத்துக்கான அபராத தொகையை ரத்து செய்ய கோரியும், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டு ள்ளனர்.அங்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, மின்வா ரிய சேர்மன் ராஜேஷ் லக்கானி ஆகி யோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.கூட்டமை ப்பு நிர்வாகிகள் கூறுகையில், ஒவ்வொரு விசைத்தறி குடோன்களுக்கும் 3 முதல்4 மின் கட்டண பில்கள் வந்து ள்ளன. அவற்றை தவணை முறையில் கட்ட அனுமதி கேட்டும், அபராத தொகையை ரத்து செய்ய வலியுறுத்தியும் அமைச்சரை சந்தித்து மனு அளித்து ள்ளோம் என்றனர்.

    • பழனிசாமி கடந்த சில நாடக்ளாக நோய்வாய்ப்பட்டு, கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா்.
    • பரிசோதனையில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

    திருப்பூர்:

    கோவை மாவட்டம் சோமனூா் அருகே செந்தில் நகரை சோ்ந்தவா் பழனிசாமி (வயது 78). இவா் திருப்பூா், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளா் சங்கத் தலைவராக கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாா். இவா் தலைமையில் பல்வேறு போராட்டங்களை விசைத்தறியாளா்கள் முன்னெடுத்துள்ளனா்.

    பழனிசாமி கடந்த சில நாடக்ளாக நோய்வாய்ப்பட்டு, கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தாா். இந்த தகவல் அவரது மனைவி கருப்பாத்தாளிடம் (72) உறவினா்கள் மூலம் நேற்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது.

    செய்தியை கேட்டதும் கருப்பாத்தாள் அதிா்ச்சியில் மயக்கம் அடைந்தாா். தொடா்ந்து மயக்க நிலையிலேயே இருந்ததால், அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதனையில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

    இதையடுத்து தம்பதி உடல்கள் திருப்பூா் மாவட்டம், வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டன. கணவன், மனைவி இருவரும் ஒரே நாளில் இறந்ததால் விசைத்தறியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் ஏராளமானோா் திரண்டு அஞ்சலி செலுத்தினா். இவா்களது மறைவுக்கு ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

    பழனிசாமி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சோமனூர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் சாமளாபுரம் பேரூராட்சி, இச்சிப்பட்டி, பூமலூர் ஊராட்சி பகுதிகளில் நேற்று காலை முதல் இன்று காலை 6 மணிவரை விசைத்தறிகளை நிறுத்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் வி.அய்யம்பாளையம், காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடை உரிமையாளர்கள் நேற்று காலை முதல் மாலை வரை கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தினர்.

    • கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • விசைத்தறியாளர்கள் ,சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தை அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள அம்மன் கலையரங்கத்தில் மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மங்கலம் சங்க தலைவர் ஏ.பி.வேலுச்சாமி தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர்.கோபால் ,மங்கலம் சங்க செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் விசைத்தறியாளர்கள் ,சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி யை இன்னும் இரண்டு தினங்களில் நேரில் சந்தித்து சாதா விசைத்தறிக்கு உயர்த்திய மின் கட்டணத்தை குறைக்க முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லக்கோரியும், உடனடியாக மின்கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . மின் கட்டணம் செலுத்தாத விசைத்தறி கூடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் விசைத்தறி கூட்டுக்கமிட்டி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • வேலைநிறுத்தம் செய்வது குறித்தும், உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
    • 800 ரூபாயாக குறைத்ததற்கு,தமிழக அரசுக்கு நன்றிகூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம் :

    திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத்தின் பொது உறுப்பினர் கூட்டம் பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் சின்னம்மன் சேவா சங்க திருமண மண்டபத்தில் நடைபெற்றது.சங்க தலைவர் இரா.வேலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணை செயலாளர் பாலாஜி வரவேற்றார்.

    இதில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்துவது குறித்தும், வேலைநிறுத்தம் செய்வது குறித்தும், உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விசைத்தறிகளுக்கு ,உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை விசைத்தறியாளர்கள் செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளதால் வருகிற அக்டோபர் மாதம் 1 ந்தேதி முதல் மின்கட்டணம் செலுத்துவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் விசைத்தறி மின் இணைப்புகளுக்கு நிலைக்கட்டணம் 560 ல் இருந்து 1600 ஆக உயர்த்தியதை 800 ரூபாயாக குறைத்ததற்கு,தமிழக அரசுக்கு நன்றிகூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதேபோல் மின் கட்டணத்தையும் குறைத்து பல லட்சம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டுமெனக்கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மின்சாரத்துறை ஆகியோரைச் சந்தித்து மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • மின்சார துறை ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
    • விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    பல்லடம் :

    விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தமிழக முதல்வரை சந்திக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முடிவு செய்து இருப்பதாக திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி,செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறினர்.

    இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் மூலம் விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை உயர்த்துவது என்றும் மேலும் நிலை கட்டணத்தை உயர்த்துவது என்றும் முடிவு செய்த போது தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முதற்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு மின்சார துறை ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

    தமிழ்நாடு மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையம் மூலம் சென்னை, கோவை மற்றும் மதுரை கருத்து கேட்பு கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டு விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பாக கோவையில் ஆயிரக்கணக்கான விசைத்தறி உரிமையாளர்கள் எடுத்துரைத்தார்கள்.பின்னர் திருப்பூர் வருகை தந்த முதலமைச்சரை சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி எடுத்துரைக்கப்பட்டது.ஆனால் தற்போது நிலை கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டு மின்சார கட்டணம் ஒரு ரூபாய் 47 பைசா உயர்ந்துள்ள காரணத்தால் விசைத்தறி தொழிலை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம். மேலும் இதனை சார்ந்த ஜவுளி தொழில்கள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே நூல் விலை ஏற்ற மற்றும் இறக்கம் காரணமாக ஜவுளி தொழில் அதனை சார்ந்த உள்ள விசைத்தறி தொழில் மிகவும் பாதிப்படைந்து அழியும் தருவாயில் உள்ளது. ஆகவே தமிழக முதல்வரை நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் எடுத்துரைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • யூனிட் ஒன்றுக்கு 1.40 ரூபாய் மின் கட்டணம் உயர்த்தி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • குறைந்தபட்ச கூலியை பெற்று தொழில் செய்கிறோம்.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சோமனூர் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது :-

    8 ஆண்டுகளாக ஒப்பந்த படி, கூலி உயர்வு இல்லாமல் விசைத்தறிகளை இயக்கி வருகிறோம்.நூல் விலை உயர்வால் தொழில் முடங்கியுள்ளது.இந்நிலையில், விசைத்தறிகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 1.40 ரூபாய் மின் கட்டணம் உயர்த்தி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறைந்தபட்ச கூலியை பெற்று தொழில் செய்கிறோம். இதை நம்பி பல்லாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.மின் கட்டணத்தை உயர்த்தினால் விசைத்தறி மற்றும் சார்பு தொழில்கள் முடங்கி விடும். மின் கட்டண உயர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.
    • தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.

    பல்லடம் :

    திருப்பூர் வந்த மத்திய இணை அமைச்சர் முருகனிடம் விசைத்தறிதொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி,செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் மனு அளித்தனர்

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி தொழிலை நம்பி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் உள்ளனர். தற்போது அதிநவீன ஏர்ஜெட்,சூல்ஜர்,போன்ற தானியங்கி விசைத்தறிகள் அதிகரிப்பால் விசைத்தறி தொழிலில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

    எனவே விசைத்தறி தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற, கைத்தறி தொழிலுக்கு ரகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை போல் விசைத்தறிக்கு என்று தனி ரகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்கான சட்டம் இயற்றி விசைத்தறி தொழிலையும், விசைத்தறியாளர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்த மத்திய அரசு முழு மானியம் வழங்க வேண்டும். அதேபோல பஞ்சு மற்றும் நூல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து வரவுள்ள பருத்தி சாகுபடி சீசனில் பருத்தியை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் வருடம் முழுவதும் ஒரே சீரான விலையில் நூல் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி விசைத்தறி தொழிலை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • 10 விசைத்தறிகளை வைத்து நெசவு செய்ய 25 - 30 லட்சம் ரூபாய் வரை தேவை.
    • தமிழக அரசு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.

    பல்லடம் :

    கோவையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பிலான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், தொழில் துறையினர் பங்கேற்றனர்.அதில் பங்கேற்ற திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:-

    சொந்த கட்டடம் கட்டி, குறைந்தபட்சம் 10 விசைத்தறிகளை வைத்து நெசவு செய்ய 25 - 30 லட்சம் ரூபாய் வரை தேவை. இவ்வாறு, முதலீடு செய்தாலும், 30 ஆயிரம் ரூபாய் தான் வருவாய் கிடைக்கும். இவ்வாறு குறுந்தொழிலாக உள்ள விசைத்தறி தொழிலுக்கு, தமிழக அரசு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.பண மதிப்பிழப்பு, அகமதாபாத் டையிங் பிரச்னை, ஜி.எஸ்.டி., கொரோனா ஊரடங்கு, கூலி பிரச்னை, மற்றும் நூல் விலை உயர்வு என, கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். நாங்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.பல கட்ட போராட்டத்துக்குப் பின், கூலி உயர்வு கிடைத்தது. தற்போது போராடி பெற்ற கூலிக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் விசைத்தறி தொழில் காணாமல் போகும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

    • விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது.

    பல்லடம் :

    பல்லடத்தில் திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமாரசாமி, கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார், வேலம்பாளையம் தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் பாலாஜி வரவேற்றார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் விசைத்தறிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை அரசு மானியமாக வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழக விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது, முதல்வரின் கவனத்திற்க்கு செல்லும் வகையில் வருகின்ற 8 ந்தேதி திங்கட்கிழமையன்று ஒருநாள் விசைத்தறிகளை அடையாள வேலை நிறுத்தம் செய்து குடும்பத்துடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின்கட்டண உயர்வை அரசே மானியமாக வழங்கிடக் கோரி மனு அளிப்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், கோபால், பழனிசாமி, பூபதி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தமிழக அரசின் பள்ளி சீருடைகள் மற்றும் வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.
    • தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி தொடங்கப்பட்டு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது.

    திருப்பூர் :

    தமிழக அரசின் வேட்டி, சேலை உற்பத்தி செய்திட விசைத்தறிகளுக்கு ஆா்டா் வழங்கிட வேண்டும் என விசைத்தறியாளா்கள் சங்க கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஈரோடு சுரேஷ், செயலாளா் பல்லடம் வேலுசாமி, பொருளாளா் சித்தோடு பாலசுப்பிரமணயம் ஆகியோா் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அரசு முதன்மை செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சாா்பில் 223 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளா் சங்கங்கள் மூலம் 67ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகள் மூலம் தமிழக அரசின் பள்ளி சீருடைகள் மற்றும் வேட்டி சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் பல நெசவாளா்கள் பயன் பெற்று வருகிறாா்கள். கடந்த ஒரு மாதமாக ஜவுளித் துறையில் நூல் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் காரணமாக பல்லாயிரம் விசைத்தறிகள் வேலை இல்லாமல் அதனை சாா்ந்த நெசவாளா்களும் அவா்கள் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் உள்ளனா்.கடந்த 10 ஆண்டுகளாக 2021ம் ஆண்டு வரை ஜூன் மாதத்தில் தமிழக அரசின் வேட்டி சேலை உற்பத்தி தொடங்கப்பட்டு தமிழக அரசின் சாா்பில் வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. அதேபோல இந்த ஆண்டும் ஜூலை மாதத்தில் வேட்டி, சேலை வடிவத்தில் எவ்வித மாறுதல் இல்லாமல் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அதே ரகமும் தரமும் மாற்றப்படாமல் உற்பத்தி செய்ய உத்தரவிட்டால் பல லட்சம் நெசவாளா் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வழிவகை செய்ய ஏதுவாக இருக்கும்.

    கடந்த வருடம் வேட்டி தயாரிப்பு ஆகஸ்ட் மாதத்திலும், சேலை தயாரிப்பு நவம்பா் மாதத்திலும் தொடங்கப்பட்ட காரணத்தால் உற்பத்தி செய்வதில் பெரும் தொய்வு ஏற்பட்டது. ஆதலால் இந்த வருடம் வேட்டி, சேலை உற்பத்தியை விரைவில் தொடங்கி விசைத்தறியாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனா்.

    ×