என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tarrif Hike"

    • இதற்காக அமெரிக்கா பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
    • இந்த அபராத வரி வருகிற 27-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை கடந்த ஏப்ரல் மாதம் விதித்தார்.

    அதன்பின் வரி விதிப்பை நிறுத்தி வைத்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை அமெரிக்கா நடத்தியது.

    இதில் இந்தியா-அமெரிக்கா பிரதிநிதிகள் குழுக்கள் இடையே 5 சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் உடன்பாடு எதுவும் எட்டப் படவில்லை.

    இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 6-வது சுற்று பேச்சு வார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக அமெரிக்கா பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமாக மேலும் 25 சதவீதம் வரியை விதித்தார்.

    இந்த அபராத வரி வருகிற 27-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் வரி பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று டிரம்ப் தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 25-ந்தேதி தொடங்குவதாக இருந்த இந்தியா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் குழுவின் இந்திய வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தை வேறு தேதியில் நடத்த திட்டமிடப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ரத்து செய்வதற்கான அதிகாரபூர்வ காரணம் வெளியிடப்படவில்லை.

    புதிய வரி விதிப்பு அமலுக்கு வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய பொருட்கள் மீது டொனால்டு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தது நெருக்கடி உத்தியாகும்.
    • இந்திய மக்களாகிய நாம், நாட்டின் நலனை காக்க அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நெருக்கடி உத்தியை இந்தியா அரசுக்கு எதிராக பயன்படுத்துகிறார். டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு எதிராக இந்தியா அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில மூத்த அரசியல் கட்சி தலைவரும், தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) கட்சி தலைவருமான சரத் பவார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சரத் பவார் கூறியதாவது:-

    இந்திய பொருட்கள் மீது டொனால்டு டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தது நெருக்கடி உத்தியாகும். இந்திய மக்களாகிய நாம், நாட்டின் நலனை காக்க அரசுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

    அமெரிக்க அதிபராக முதல்முறை பணியாற்றிய டிரம்பின் பணி முறையை நாம் பார்த்திருக்கிறோம். அவரை கட்டுப்படுத்த யாரும் இல்லை என நான் உணர்கிறேன். அவர் தனது மனதில் தோன்றுவதை உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறார்.

    நம் நாட்டிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டு வரும் விரிசலை பிரதமர் மோடி புறந்தள்ளி விடக்கூடாது. இன்று பாகிஸ்தான் நமக்கு எதிராக இருக்கிறது. நேபாளம், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள் கூட நம்முடைய மகிழ்சியாக இல்லை.

    நம்முடைய அண்டை நாடுகள் நம்மை விட்டு வலகிச் சென்று கொண்டிருக்கின்றன. உறவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு சரத் பவார் தெரவித்துள்ளார்.

    • அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிக்குப் பதிலாக கூடுதல் வரி விதிக்க டிரம்ப் முடிவு.
    • கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி முதல் 90 நாட்கள் வரி விதிப்பு நடைமுறையை நிறுத்தி வைத்துள்ளார்.

    அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    அதன்படி அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரி விதிப்பை அறிவிப்பை வெளியிட்டார். சீனா மட்டும் பதிலடி கொடுக்கும் வகையில் பதில் வரி விதிப்பை வெளியிட்டது. மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்தன.

    அதனைத்தொடர்ந்து 90 நாட்களுக்கு வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் நிறுத்தி வைத்தார். ஒவ்வொரு நாடுகளடன் வரி விதிப்பு குறித்து அமெரிக்கா பேச்சுவார்தை நடத்தி வருகிறது.

    ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடியாக 50 சதவீதம் வரி விதிக்க விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் வர்த்தக போர் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

    ஏப்ரல் 2ஆம் தேதி டொனால்டு டிரம்ப் வரி விதிப்பை அறிவித்தார். பின்னர் 90 நாட்களுக்கு அதை நிறுத்தி வைத்தார். ஜூலை மாதம் தொடக்கத்தில் 90 நாட்கள் முடிவடையும். அதற்குள் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

    • கொரோனா வரும்போது மக்களை தட்டுகளை தட்டச் சொன்னார். மொபைல் போனில் லைட்டை ஆன் செய்ய சொன்னார்.
    • தற்போது பொருளாதார சூறாவளி வந்து கொண்டிருக்கிறது. கோடிக்காணக்கானவர்கள் இழப்பை சந்திப்பார்கள்.

    இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 26 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடி இது தொடர்பாக வாய் திறக்காமல் உள்ளார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது:-

    முன்னதாக இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, டிரம்பை கட்டிப்பிடித்தார். இந்த முறை அவர்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பார்த்தீர்களா? அது எங்கே மறைந்துவிட்டது?

    பிரதமர் மோடி தனது நண்பர் என்று அழைக்கும் ஜனாதிபதி டிரம்ப், நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்க மாட்டோம், இந்த முறை நாங்கள் வரிகளை விதிப்போம் என்று அவருக்கு உத்தரவிட்டார். அவரால் (மோடியால்) ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவர் மறைந்துவிட்டார்.

    அமெரிக்க வரி விதிப்பு மீது மக்களின் கவனம் திரும்பாமல் இருக்க, பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் நாடகம் நடத்தி நள்ளிரவில் இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளனர்.

    ஆனால் உண்மை என்னவென்றால் பொருளாதார புயல் வந்து கொண்டிருக்கிறது. கொரோனா வரும்போது மக்களை தட்டுகளை தட்டச் சொன்னார். மொபைல் போனில் லைட்டை ஆன் செய்ய சொன்னார். தற்போது பொருளாதார சூறாவளி வந்து கொண்டிருக்கிறது. கோடிக்காணக்கானவர்கள் இழப்பை சந்திப்பார்கள். அவர் எங்கே, அவர் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    • லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோலுக்கு 13 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் கலால் வரி வசூலிக்கப்படுகிறது.
    • பண வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசுக் கொள்ளை என்ற மற்றொரு பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்கா உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர விதியை அமல்படுத்தியுள்ளது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதித்துள்ளார் டொனால்டு டிரம்ப். இதற்கு இந்தியாவின் எதிர்வினை என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

    இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் டொனால்டு டிரம்பின் வரி விதிப்புக்கு பிரதமர் மோடி கலால் வரியை உயர்த்தி பதிலடி கொடுத்துள்ளார் என ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். பண வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசுக் கொள்ளை என்ற மற்றொரு பரிசு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் கார்கே "மோடி ஜி, கச்சா எண்ணெய் விலை கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதத்தை ஒப்பிடும்போது தற்போது 41 சதவீதம் குறைவாக உள்ளது. ஆனால் உங்கள் கொள்ளைடியக்கும் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதற்குப் பதிலாக மத்திய கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோலுக்கு 13 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் கலால் வரி வசூலிக்கப்படுகிறது.

    • இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிப்பு.
    • டிரம்ப் நடவடிக்கையால் இந்திய பொருளாதாரதம் பாதிக்கப்படையும் எனக் கருதப்படுகிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளார். இந்தியாவுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதித்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும், மோடி இதற்கு எதிரான எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார். பொருளாதார வல்லுனர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பின் தாக்கத்தை மதிப்பீடு செய்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

    ஒரு நிகழ்ச்சியில் கலந்த கொண்டபோது டிரம்பின் நடவடிக்கை குறித்த கேள்விக்கு பங்கஜ் சவுத்ரி "டொனால்டு டிரம்பிற்கு அமெரிக்கா முதன்மையாக இருக்கலாம். ஆனால், மோடிக்கு இந்தியாதான் முதன்மையானது. அமெரிக்கா அமல்படுத்தியுள்ள பரஸ்பர வரி விதிப்பின் தாக்கத்தை மதிப்பிட்டு வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    • ஒரு பக்கம் சீனா நமது நாட்டின் 4 ஆயிரம் ச.கி.மீ. பரப்பளவு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளது.
    • மறுபக்கம் அமெரிக்கா திடீரென நம்மீது வரியை திணித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியுள்ளார். அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    இதனால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் என வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், எதிர்க்கட்சிகள் இந்த பாதிப்பை குறைக்கும் வகையில் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகள் என்ன? இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு இந்தியாவின் பொருளாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார். மேலும் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.

    மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் (Zero Hour) ராகுல் காந்தி பேசும்போது கூறியதாவது:-

    சீனா நமது நாட்டின் 4 ஆயிரம் ச.கி.மீ. பரப்பளவு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளது. நம்முடைய வெளியுறவுத்துறை செயலாளர் (விக்ரம் மிஸ்ரி) சீனா தூதரக அதிகாரியுடன் கேக் வெட்டியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

    கேள்வி என்னவென்றால்- சீனா கைப்பற்றிய 4,000 ச.கி.மீ. நிலப் பகுதியில் உண்மையில் என்ன நடக்கிறது? என்பதுதான். நம் நிலத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் சீனாவுக்கு கடிதம் எழுதியிருப்பதும் எனது கவனத்திற்கு வந்துள்ளது.

    நம்முடைய மக்களிடம் இருந்து இந்த தகவலை நாங்கள் பெறவில்லை. சீனா தூதர் இந்திய மக்களிடம், உங்கள் ஜனாதிபதி, பிரதமர் எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். அதன்மூலம் தெரியவந்துள்ளது.

    ஒரு பக்கம் நாம் சீனாவுக்கு 4 ஆயிரம் ச.கி.மீ. நிலத்தை கொடுத்துள்ளோம். மறுபக்கம் அமெரிக்கா திடீரென நம்மீது வரியை திணித்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பு இந்திய பொருளாதாரத்தை முற்றிலும் சீரழிக்கும். குறிப்பாக வாகனம், மருந்து மற்றும் விவசாயத்துறைகளை பாதிப்படையும்.

    சீனா கைப்பற்றியுள்ள நமது நிலத்தை பற்றியும், நமது நட்பு நாடு நம் மீது விதித்துள்ள பரஸ்பர வரி பற்றியும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மதுபானத்திற்கு வரி விதிக்க ஐரோப்பிய யூனியன் பரிந்துரை.
    • ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒயின்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து மெக்சிகோ, கனடா, சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதித்து வருகிறார். அதேவேளையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் தங்கள் நாட்டின் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கக்கூடாது என்கிறார்.

    குறிப்பாக ஐரோப்பிய நாடுகள், கனடா, சீனாவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் போன்றவற்றிற்கு அதிக வரி விதித்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு சீனா பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளது.

    தற்போது டொனால்டு டிரம்பின் பார்வை மதுபானங்கள் மீது திரும்பியுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் மதுபானங்களுக்கு இந்தியா 150 சதவீதம் வரி விதிக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

    ஐரோப்பிய நாடுகளில் இருந்து இரும்பு, அலுமினியம் இறக்குமதிக்கு டிரம்ப் அதிக விரி விதித்துள்ளதால், அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மதுபானத்திற்கு ஐரோப்பிய நாடுகள் வரிவிதிக்க பரிந்துரை செய்துள்ளது. ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஒயின்ஸ், ஷாம்பெயின், பிரான்ஸ் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப்படும். இது அமெரிக்காவின் ஒயின் மற்றும் ஷாம்பெயின் தொழிலுக்கு சிறப்பானதாக இருக்கும்" டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இதனால் அமெரிக்கா- ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் மதுபானம் விசயத்தில் வர்த்த போர் ஏற்படும் அபாயம் உள்ளது.

    • வர்த்தக போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
    • இந்திய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    பிரேசில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் அதிக வரி விதிப்பதை அடுத்து, அந்த நாடுகளுக்கு அதிக வரி வசூலிக்கும் திட்டம் ஏப்ரல் 2-ம் தேதி அமலுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் காரணமாக இரு நாடுகள் இடையே வர்த்தக போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.

    இந்த நிலையில், வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வரி விதிப்பில் சூமூக உடன்பாடு எட்டப்படும் என்று நம்புவதாக இந்திய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    அதிக வரி வசூலிக்கப்படுவதை எதிர்த்து வரி விதிப்பை அதிகப்படுத்தும் திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்தார். இவரது அறிவிப்பு உலகளவில் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஒரு வார காலம் அமெரிக்க பயணம் மேற்கொண்டு வர்த்தக விவகாரங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள இருப்பதை அடுத்து, அதிபர் டிரம்ப் இவ்வாறு அறிவித்துள்ளார்.

    "மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான இந்திய அதிகாரிகள் மிக முக்கிய கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளனர். 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இருதரப்புக்கும் அதிக பாதிப்புகள் இன்றி ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன," என்று இந்த விவகாரம் குறித்த விவரங்கள் அறிந்த பெயர் குறிப்பிட விரும்பாத நபர் தெரிவித்துள்ளார்.

    அதிக வரி விதிக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், டிரம்ப்-இன் வரி தீட்டும் நடவடிக்கையில் இருந்து இந்தியா தப்பிக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    • மின்சார துறை ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
    • விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    பல்லடம் :

    விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தமிழக முதல்வரை சந்திக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முடிவு செய்து இருப்பதாக திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி,செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறினர்.

    இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் மூலம் விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை உயர்த்துவது என்றும் மேலும் நிலை கட்டணத்தை உயர்த்துவது என்றும் முடிவு செய்த போது தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முதற்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு மின்சார துறை ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

    தமிழ்நாடு மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையம் மூலம் சென்னை, கோவை மற்றும் மதுரை கருத்து கேட்பு கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டு விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பாக கோவையில் ஆயிரக்கணக்கான விசைத்தறி உரிமையாளர்கள் எடுத்துரைத்தார்கள்.பின்னர் திருப்பூர் வருகை தந்த முதலமைச்சரை சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி எடுத்துரைக்கப்பட்டது.ஆனால் தற்போது நிலை கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டு மின்சார கட்டணம் ஒரு ரூபாய் 47 பைசா உயர்ந்துள்ள காரணத்தால் விசைத்தறி தொழிலை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம். மேலும் இதனை சார்ந்த ஜவுளி தொழில்கள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே நூல் விலை ஏற்ற மற்றும் இறக்கம் காரணமாக ஜவுளி தொழில் அதனை சார்ந்த உள்ள விசைத்தறி தொழில் மிகவும் பாதிப்படைந்து அழியும் தருவாயில் உள்ளது. ஆகவே தமிழக முதல்வரை நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் எடுத்துரைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×