என் மலர்
இந்தியா

இறுதியாக கலால் வரி மூலம் டிரம்ப் வரி விதிப்புக்கு பதிலடி: ராகுல் காந்தி கிண்டல்
- லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோலுக்கு 13 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் கலால் வரி வசூலிக்கப்படுகிறது.
- பண வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசுக் கொள்ளை என்ற மற்றொரு பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர விதியை அமல்படுத்தியுள்ளது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதித்துள்ளார் டொனால்டு டிரம்ப். இதற்கு இந்தியாவின் எதிர்வினை என்ன என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் டொனால்டு டிரம்பின் வரி விதிப்புக்கு பிரதமர் மோடி கலால் வரியை உயர்த்தி பதிலடி கொடுத்துள்ளார் என ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். பண வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசுக் கொள்ளை என்ற மற்றொரு பரிசு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் கார்கே "மோடி ஜி, கச்சா எண்ணெய் விலை கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதத்தை ஒப்பிடும்போது தற்போது 41 சதவீதம் குறைவாக உள்ளது. ஆனால் உங்கள் கொள்ளைடியக்கும் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதற்குப் பதிலாக மத்திய கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோலுக்கு 13 ரூபாயும், டீசலுக்கு 10 ரூபாயும் கலால் வரி வசூலிக்கப்படுகிறது.






