search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி விசைத்தறியாளர்கள் முதல்-அமைச்சரை சந்திக்க முடிவு
    X

    கோப்புபடம்.

    மின்கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி விசைத்தறியாளர்கள் முதல்-அமைச்சரை சந்திக்க முடிவு

    • மின்சார துறை ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
    • விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

    பல்லடம் :

    விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி தமிழக முதல்வரை சந்திக்க தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முடிவு செய்து இருப்பதாக திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் வேலுசாமி,செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கூறினர்.

    இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், தமிழ்நாடு மின்சாரத்துறை மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் மூலம் விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை உயர்த்துவது என்றும் மேலும் நிலை கட்டணத்தை உயர்த்துவது என்றும் முடிவு செய்த போது தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முதற்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு மின்சார துறை ஒழுங்குமுறை ஆணைய தலைவர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

    தமிழ்நாடு மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையம் மூலம் சென்னை, கோவை மற்றும் மதுரை கருத்து கேட்பு கூட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டு விசைத்தறிக்கான மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பாக கோவையில் ஆயிரக்கணக்கான விசைத்தறி உரிமையாளர்கள் எடுத்துரைத்தார்கள்.பின்னர் திருப்பூர் வருகை தந்த முதலமைச்சரை சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி எடுத்துரைக்கப்பட்டது.ஆனால் தற்போது நிலை கட்டணம் மட்டும் குறைக்கப்பட்டு மின்சார கட்டணம் ஒரு ரூபாய் 47 பைசா உயர்ந்துள்ள காரணத்தால் விசைத்தறி தொழிலை நடத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம். மேலும் இதனை சார்ந்த ஜவுளி தொழில்கள் அனைத்தும் வேறு மாநிலங்களுக்கு செல்லக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே நூல் விலை ஏற்ற மற்றும் இறக்கம் காரணமாக ஜவுளி தொழில் அதனை சார்ந்த உள்ள விசைத்தறி தொழில் மிகவும் பாதிப்படைந்து அழியும் தருவாயில் உள்ளது. ஆகவே தமிழக முதல்வரை நேரில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சார்பில் எடுத்துரைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×