search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Keysighter"

    • திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
    • கடந்த 16 நாட்களாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ. 2000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

    தற்போதைய சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, பருத்தி, பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம் ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள், சிறு,குரு, தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில்துறையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 5-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரை உற்பத்தி நிறுத்த போராட்டத்தை திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்து அது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 16 நாட்களாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ. 2000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

    இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.தற்போதைய சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, பருத்தி,பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது.

    இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து துணி இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது. மேலும் மற்ற மாநிலங்களில் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் துணி உற்பத்தியாளர்கள் போட்டி போட்டு தொழில் செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து துணி உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர்.

    உலக பொருளாதார மந்தம், உக்ரையன், இஸ்ரேல் போர்கள் காரணமாக ஏற்றுமதி தடைபட்டுள்ளது. கடந்த 6 மாதமாகவே ஜவுளி உற்பத்தி தொழில் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தோம். தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததால் கடந்த நவ.5 முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகிறோம். இதன் மூலம் கடந்த 16 நாட்களாக சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இருந்த போதிலும் ஜவுளி தொழிலுக்கு சாதகமான அறிவிப்புகள் இன்னும் அரசிடம் இருந்து வரவில்லை. மின் கட்டண உயர்வு, நிலை கட்டணம் ஆகியவற்றை குறைக்க வேண்டும். மின் மிகை பயன்பாடு கட்டணம் ரத்து செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஜவுளி தொழிலை காப்பாற்ற முடியும். மத்திய அரசு நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நூல் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும். பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால் தான் ஜவுளி உற்பத்தி தொழிலை மீட்டெடுக்க முடியும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பழனிசாமி கடந்த சில நாடக்ளாக நோய்வாய்ப்பட்டு, கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா்.
    • பரிசோதனையில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

    திருப்பூர்:

    கோவை மாவட்டம் சோமனூா் அருகே செந்தில் நகரை சோ்ந்தவா் பழனிசாமி (வயது 78). இவா் திருப்பூா், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளா் சங்கத் தலைவராக கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாா். இவா் தலைமையில் பல்வேறு போராட்டங்களை விசைத்தறியாளா்கள் முன்னெடுத்துள்ளனா்.

    பழனிசாமி கடந்த சில நாடக்ளாக நோய்வாய்ப்பட்டு, கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தாா். இந்த தகவல் அவரது மனைவி கருப்பாத்தாளிடம் (72) உறவினா்கள் மூலம் நேற்று அதிகாலை தெரிவிக்கப்பட்டது.

    செய்தியை கேட்டதும் கருப்பாத்தாள் அதிா்ச்சியில் மயக்கம் அடைந்தாா். தொடா்ந்து மயக்க நிலையிலேயே இருந்ததால், அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பரிசோதனையில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

    இதையடுத்து தம்பதி உடல்கள் திருப்பூா் மாவட்டம், வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டன. கணவன், மனைவி இருவரும் ஒரே நாளில் இறந்ததால் விசைத்தறியாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் ஏராளமானோா் திரண்டு அஞ்சலி செலுத்தினா். இவா்களது மறைவுக்கு ஜாா்க்கண்ட் மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட பல்வேறு தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

    பழனிசாமி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சோமனூர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள விசைத்தறி உரிமையாளர்கள் சாமளாபுரம் பேரூராட்சி, இச்சிப்பட்டி, பூமலூர் ஊராட்சி பகுதிகளில் நேற்று காலை முதல் இன்று காலை 6 மணிவரை விசைத்தறிகளை நிறுத்தி அஞ்சலி செலுத்தினர். மேலும் வி.அய்யம்பாளையம், காளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடை உரிமையாளர்கள் நேற்று காலை முதல் மாலை வரை கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தினர்.

    ×