search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EB tarrif"

    • மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்களும், தொழில்களும் பாதிப்படையும்
    • மத்திய, மாநில அரசுகளின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் மத்திய அரசு பால், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்தை கண்டித்தும்,உடனடியாக உயர்த்தப்பட்ட வரி மற்றும் மின் கட்டணத்தை திரும்ப பெறக் கோரி திருப்பூர் ரயில்நிலையம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டண உயர்வால் ஏழை எளிய மக்களும், தொழில்களும் பாதிப்படையும்.இதே போல் மத்திய அரசு அரிசி பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது.மத்திய மாநில அரசுகளின் இச்செயலை கண்டித்து திருப்பூர் மாவட்ட இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பாரி கணபதி தலைமையில்,திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சோனை முத்து,மாவட்டத்துணைத் தலைவர் முருகேசன், பொருளாளர் சக்திவேல், இளைஞரணி முருகன், மாணவரணி வேலுச்சாமி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது.

    பல்லடம் :

    பல்லடத்தில் திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் முத்துக்குமாரசாமி, கண்ணம்பாளையம் தலைவர் செல்வகுமார், வேலம்பாளையம் தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் பாலாஜி வரவேற்றார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் விசைத்தறிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை அரசு மானியமாக வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி தமிழக விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது, முதல்வரின் கவனத்திற்க்கு செல்லும் வகையில் வருகின்ற 8 ந்தேதி திங்கட்கிழமையன்று ஒருநாள் விசைத்தறிகளை அடையாள வேலை நிறுத்தம் செய்து குடும்பத்துடன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மின்கட்டண உயர்வை அரசே மானியமாக வழங்கிடக் கோரி மனு அளிப்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், கோபால், பழனிசாமி, பூபதி, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×