search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜவுளி தொழில்"

    • மத்திய பட்ஜெட்டில் டப் திட்டம் தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாக அமைந்தது.
    • டப் திட்டத்தை பொறுத்தவரை குறைந்தபட்ச முதலீடு செய்தாலும் அதற்கான மானியம் கிடைக்கும்.

    திருப்பூர்:

    நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஜவுளித்தொழிலின் பங்களிப்பு முக்கியமானது. அதன்படி ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் சலுகை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருப்பூர் பின்னலாடை தொழிலை பொறுத்தவரை, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் (டப்) அமல்படுத்தப்பட்டது.

    சாய ஆலைகள்,நிட்டிங், காம்பாக்டிங், ரைசிங், பிரின்டிங், கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரிங் என அனைத்து வகை ஜாப் ஒர்க் பிரிவுகளும், டப் திட்டத்தில் பயனடைந்தன. அதாவது உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எந்திரங்கள் நிறுவ 15 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட்டது.

    இத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டு திருத்தப்பட்ட டப் திட்டமாக 2022 மார்ச் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் உயர்த்திய மானியத்துடன் மீண்டும் செயல்படுத்தப்படுமென அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதை நம்பி வழக்கம் போல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

    மத்திய பட்ஜெட்டில் டப் திட்டம் தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் திருத்தப்பட்ட டப் திட்டத்தை 2022 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்த வேண்டுமென தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த மாதம் திருப்பூர் வந்திருந்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனாவிடமும் இதுகுறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

    உற்பத்தி சார் ஊக்குவிப்பு (பி.எல்.ஐ., 2.0) திட்டம், பின்னலாடை தொழிலுக்கு கை கொடுக்கும் என தொழில்துறையினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும் குறைந்தபட்ச முதலீடு உச்சவரம்பு உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.இத்திட்டம் இறுதியாகாமல் இழுபறி நீடிப்பதால் டப் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு மென்மேலும் அதிகரித்துள்ளது.

    டப் திட்டத்தை பொறுத்தவரை குறைந்தபட்ச முதலீடு செய்தாலும் அதற்கான மானியம் கிடைக்கும். உற்பத்தியை உயர்த்தி காண்பிக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் இல்லை. டப் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் 2022 மார்ச் மாதத்திற்கு பிறகு புதிய தொழில்நுட்ப எந்திரங்களை நிறுவிய ஆயிரக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மானிய அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.

    புதிய முதலீடு, இயக்க செலவு என 35 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் திருத்தப்பட்ட டப் திட்ட மானியம் கிடைத்தால் மட்டுமே ஜவுளித்தொழில்கள் புத்துயிர் பெறும். கடந்த ஆண்டில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்த நிறுவனங்கள் மானியத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

    பி.எல்.ஐ., -2.0 திட்டத்தில் பயன்பெற முடியாதவர் டப் திட்டத்தை பயன்படுத்தும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என தொழில்துறையினர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், திருத்தப்பட்ட டப் திட்டத்தை 2022 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்த வேண்டுமென, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த டப் திட்டம் மிகவும் அவசியம் என மத்திய அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.

    • தொழில்கள் செய்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் கவலையடைந்துள்ளனர்.
    • ஜவுளித் தொழில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் செய்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து லகு உத்யோக் பாரதி அமைப்பின் சோமனூர் பகுதி தலைவர் நாராயணசாமி கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஒருபுறம் பஞ்சு விலை உயர்வு, மறுபுறம் துணிக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. அதிக விலை கொடுத்து நூல்களை வாங்கி துணி உற்பத்தி செய்யும் போது ஆர்டர்கள் இல்லை எனக்கூறி வியாபாரிகள் குறைந்த விலைக்கே துணிகளை கொள்முதல் செய்கின்றனர்.இதனால் மில்களில் உற்பத்தி குறைக்கப்பட்டதால் விசைத்தறிகளும் இயங்குவதில்லை. தற்போது அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வால் ஒட்டு மொத்த ஜவுளி தொழிலும் முடங்கிவிடும். பல லட்சம் பேர் வேலை இழந்து தவிக்க வேண்டியது வரும். அதனால் விசைத்தறி மற்றும் ஜவுளித்தொழில் நலன் கருதி மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 விசைத்தறிகளை வைத்து நெசவு செய்ய 25 - 30 லட்சம் ரூபாய் வரை தேவை.
    • தமிழக அரசு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.

    பல்லடம் :

    கோவையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பிலான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், தொழில் துறையினர் பங்கேற்றனர்.அதில் பங்கேற்ற திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:-

    சொந்த கட்டடம் கட்டி, குறைந்தபட்சம் 10 விசைத்தறிகளை வைத்து நெசவு செய்ய 25 - 30 லட்சம் ரூபாய் வரை தேவை. இவ்வாறு, முதலீடு செய்தாலும், 30 ஆயிரம் ரூபாய் தான் வருவாய் கிடைக்கும். இவ்வாறு குறுந்தொழிலாக உள்ள விசைத்தறி தொழிலுக்கு, தமிழக அரசு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கி வருகிறது.பண மதிப்பிழப்பு, அகமதாபாத் டையிங் பிரச்னை, ஜி.எஸ்.டி., கொரோனா ஊரடங்கு, கூலி பிரச்னை, மற்றும் நூல் விலை உயர்வு என, கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். நாங்கள் கூலிக்கு நெசவு செய்பவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.பல கட்ட போராட்டத்துக்குப் பின், கூலி உயர்வு கிடைத்தது. தற்போது போராடி பெற்ற கூலிக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டால் விசைத்தறி தொழில் காணாமல் போகும் அபாயம் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

    ×