search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pollachi jeyaraman"

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே வரி உயர்வை அறிவித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது.
    • தி.மு.க. ஆட்சியில் மக்களின் நிலை குறித்து நடத்தி தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பூர் :

    அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று இரவு திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே வரி உயர்வை அறிவித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது. இந்தநிலையில் மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது மக்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. நாளுக்குநாள் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு திருப்பூர் குமரன் சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை அதிகம் பங்கேற்க செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் 2-வது ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதை எழுச்சியோடு நடத்த வேண்டும். தி.மு.க. ஆட்சியில் மக்களின் நிலை குறித்து கையெழுத்து இயக்கத்தை வரும் 1 மாதகாலம் நடத்தி அதை தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன், அ.தி.மு.க. மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் பூலுவபட்டி பாலு, மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கவுன்சிலர் கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் ஹரிகரசுதன், கருணாகரன், திலகர்நகர் சுப்பு, மகேஷ்ராம், சார்பு அணி செயலாளர்கள் கண்ணபிரான், சிட்டி பழனிசாமி, மார்க்கெட் சக்திவேல், கலைமகள் கோபால்சாமி, காங்கயம் நகர செயலாளர் வெங்கு மணிமாறன், வெள்ளகோவில் நகர செயலாளர் மணி, அம்மா பேரவை இணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • திருப்பூருக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்த அரசு அ.தி.மு.க. அரசு.
    • பஞ்சு, நூல் விலை உயர்வால் பனியன் தொழில் முடங்கியுள்ளது.

    திருப்பூர் :

    மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    எந்த வரியும் புதிதாக போட மாட்டோம் என்று சொல்லி வீட்டுவரி, சொத்துவரி, தண்ணீர் வரி, மின்கட்டணம் பன்மடங்கு உயர்வு போன்றவற்றை தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து அறிவித்து வருகிறது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல், புதிதாக வரியை போட்டு ஏழை, எளிய மக்கள் தலையில் சுமையை ஏற்படுத்தியுள்ளனர்.

    திருப்பூருக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்த அரசு அ.தி.மு.க. அரசு. 4-வது குடிநீர் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கொண்டு வந்தோம். ஆனால் அந்த திட்டங்களை விரைவில் முடிக்காமல் தி.மு.க. அரசு காலதாமதம் செய்து வருகிறது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை தற்போது தி.மு.க. அரசு திறந்து வைக்கிறது.

    பஞ்சு, நூல் விலை உயர்வால் பனியன் தொழில் முடங்கியுள்ளது. விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் திருப்பூருக்கு தோஷம் வந்துவிடுகிறது. மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. மீண்டும் பனியன் நிறுவனங்களை மூடும் நிலை வரும். அதை கண்டித்து இந்த போராட்டம் நடக்கிறது. தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், பழனிசாமி, என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் கே.ஜி.முத்து வெங்கடேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், கருணாகரன், ஹரிகரசுதன், பி.கே.எம்.முத்து, சுப்பிரமணியம், பட்டுலிங்கம், கே.பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், இணை செயலாளர் உஷா ரவிக்குமார், துணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி, வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என்.பழனிசாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், வக்கீல் பிரிவு செயலாளர் முருகேசன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சிட்டி பி.பழனிசாமி, துணை செயலாளர் ரோட்டரி தேவராஜ், இணை செயலாளர் சம்பத், அர்பன் வங்கி தலைவர் சடையப்பன், வெள்ளகோவில் ஒன்றிய தலைவர் வெங்கடேச சுதர்சன், அ.தி.மு.க. அம்மா பேரவை மாநில இணை செயலாளர் கே.ஜி.முத்துவெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் நீதிராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் தண்ணீர்பந்தல் தனபால் மற்றும் காங்கயம், வெள்ளகோவில், சென்னிமலை பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.

    • திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது.
    • சென்னையில் நாளை மறுதினம் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் எவ்வாறு கலந்து கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. விஜயகுமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சென்னையில் நாளை மறுதினம் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் எவ்வாறு கலந்து கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் இணைச்செயலாளர் சங்கீதா சந்திரசேகர், பகுதி செயலாளர்கள் கண்ணப்பன் , அன்பகம் திருப்பதி, கருணாகரன், ஹரிஹரன், திலகர் நகர் சுப்பு, கண்ணன், பாலசுப்பிரமணியம், குமார் மற்றும் தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான் மற்றும் நிர்வாகிகள் ஆண்டவர் பழனிச்சாமி, வக்கீல் அணி செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பொள்ளாச்சி வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதால் நக்கீரன் கோபால் இங்கு முன்ஜாமீன் பெறவேண்டிய அவசியமில்லை எனக்கூறி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #PollachiAbuseCase
    சென்னை:

    தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரி ராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்த்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, பொள்ளாச்சி விவகாரத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நக்கீரன் கோபால் மீது புகார் அளித்தார்.



    இந்நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போலீசில் அளித்துள்ள புகாரில் தன்னை கைது செய்யாமல் இருக்க நக்கீரன் கோபால் நேற்று முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொள்ளாச்சி வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுவதால் நக்கீரன் கோபால் இங்கு முன்ஜாமீன் பெறவேண்டிய அவசியமில்லை எனக்கூறி, அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. #PollachiAbuseCase
    பொள்ளாச்சி விவகாரத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போலீசில் அளித்த புகாரில் தன்னை கைது செய்யாமல் இருக்க நக்கீரன் கோபால் இன்று முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். #PollachiAbuseCase
    சென்னை:

    தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய குற்றவாளியான பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு, என்ஜினீயர் சபரி ராஜன், ஜவுளிக்கடை அதிபர் சதிஷ், வசந்த்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.



    இதற்கிடையே, பொள்ளாச்சி விவகாரத்தில் அவதூறு கருத்து பரப்பியதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நக்கீரன் கோபால் மீது புகார் அளித்தார்.

    இந்நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போலீசில் அளித்துள்ள புகாரில் தன்னை கைது செய்யாமல் இருக்க நக்கீரன் கோபால் இன்று முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது #PollachiAbuseCase
    ×