search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபாட்டில்கள்"

    • தியாகதுருகம் பகுதியில் மது பாட்டில் விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்
    • இவர்களிடமிருந்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி

    தியாகதுருகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் தியாகதுருகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் அரசு அனுமதி இன்றி தியாகதுருகம் அண்ணா நகர் பகுதியில் டீக்கடையில் மது பாட்டில் விற்பனை செய்த தியாகதுருகம் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த சங்கர் (வயது 52), வீட்டின் பின்புறம் மது பாட்டில் விற்பனை செய்தவர்களான பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (60), வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பத்மா (37), வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் (48), சூளாங்குறிச்சி டாஸ்மார்க் அருகே மது பாட்டில் விற்பனை செய்த க.அலம்பலம் கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி மகன் ராஜா (39) ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து 34 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கரூர் மாவட்டத்தில் 70 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்
    • கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் 90க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணி வரை கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்கள விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசாரும், அந்த பகுதி காவல் நிலைய போலீசாரும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், கரூர், குளித்தலை சின்னதாராபுரம், மாயனூர் மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக 10 பேர்கள் மீது வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து 70 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன் மில்லி லிட்டரின் அளவு 12,600 என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீசார்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


    • விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 900 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் பழைய பஸ் நிலைய பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்தப் பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பழைய பஸ் நிலையம் சைக்கிள் நிறுத்தம் அருகே சிலர் மது வாங்கி சென்றனர்.

    இதனைப் பார்த்த போலீசார் அந்தப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு ஏராளமான பெட்டிகளில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றில் மொத்தமாக 909 மதுபாட்டில்கள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ. 1,18,170 ஆகும். இது தொடர்பாக அங்கிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சந்திரகிரி புரத்தைச் சேர்ந்த சிவசக்தி முருகன் (வயது 47) என்பதும், மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து வந்தததும் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த மது பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் முருகனை கைது செய்தனர்.

    மேலும் இது குறித்து விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
    • ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மன்னார்குடிக்கு சொகுசு காரில் மதுபானங்கள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவுப்படி தனிப்படை போலீசார் திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரம் புதுக்கடை பாலம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அதில் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில் பெட்டியில் அடுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் நாகப்பட்டினம் மருந்து கொத்தலரோட்டை சேர்ந்த விஜயகாந்த், மன்னார்குடி பூக்காரத்தெருவை சேர்ந்த பெருமாயி என்பது தெரியவந்தது.

    இதன் பின்னர் தனிப்படை போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஆயிரம் மதுபாட்டில்கள் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • 180 மி.லி. கொண்ட 96 மது பாட்டில்கள் மற்றும் 230 லிட்டர் பாண்டி சாராயம் இருந்தது.
    • காரில் 4 நபர்கள் வந்தவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் பெருங்கடம்பனூர் - சிக்கல் சாலையில் உள்ள குற்றம் பொருத்தானிருப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த காரில் காரைக்கால் பகுதியில் இருந்து கடத்திவரப்பட்ட வெளி மாநில 90மிலி கொண்ட 1920 மது பாட்டில்களும், 180மிலி கொண்ட96 மது பாட்டில்களும் மற்றும் 230 லிட்டர் பாண்டி சாராயமும் இருந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரில் 4 நபர்கள் வந்தவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரில் வந்த நாகை வெளிப்பாளையம் வ.உ.சி. தெருவை சேர்ந்த தென்னரசன் (வயது 57), வெளிப்பாளையம் கொட்டுப்பாளைய தெரு காளியப்பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த யாசர் அரபாத் (35), காரைக்கால், தருமபுரம் தெற்கு தெருவை சேர்ந்த செல்வம் (47), காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த கருணாகரன் (43) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தனிப்படை போலீசார் கீழ்வேளூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தென்னரசன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

    • மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அருண்குமார் மதுவை பதுக்கி வைத்து விற்றது விசாரணையில் தெரியவந்தது.

    சிவகிரி:

    சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையில் போலீசார் ராயகிரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காளியம்மன்கோவில் தெருவில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் பள்ளிக்கூட தெருவில் வசிக்கும் அருண்குமார்(வயது 25) என்பவர் மதுவை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சங்கரன்கோவில் கிளைச்சிறையில் அடைத்தனர்.

    சந்தேகத்துக்குஇடமாக வந்த மினி வேனை மறித்து சோதனை செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட ேபாலீஸ் சூப்பிரண்டுக்கு புதுவையில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்துக்குஇடமாக வந்த மினி வேனை மறித்து சோதனை செய்தனர். உடனே போலீசாரை கண்டவுடன் வேனில் வந்தவர்கள் தப்பிக்க முயற்சி செய்தனர்.

    உஷாரான போலீசார் அவர்களை மடக்கி பிடித்து வாகனத்தில் சோதனை செய்தனர். சோதனையில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான புதுவை மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஅதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இவை அனைத்தும் திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மது பாட்டில்கள் கடத்தி வந்ததாக புதுவை மாநிலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன சோதனையிட்டனர்.
    • சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த ஒரு வேனை போலீசார் வழி மறித்தனர்.

    தஞ்சாவூா்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து தஞ்சைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையில் போலீசார் தஞ்சை-நாஞ்சிக்கோட்டை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த ஒரு பொலிரோ வேனை போலீசார் வழி மறித்தனர்.

    இதனைப்பார்த்த அந்த வாகனத்தில் இருந்த ஒருவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.

    சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாகனத்தை சுற்றி வளைத்து சோதனை செய்தனர்.

    அதில் 2400 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து வாகனத்தில் இருந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள நிரவி குமரன் கோவில் தெருவை சேர்ந்த செல்வகணபதி (வயது 22), காரைக்கால் இலத்தியூர் முதலியார் தெருவை சேர்ந்த ஜெயபால் (40), மேல பொன்னேரி மேட்டுத் தெருவை சேர்ந்த ராஜப்பா (32) ஆகிய 3 பேர் என்பதும், காரைக்கால் நிரவி பகுதியில் சட்ட விரோதமாக இயங்கி வந்த போலி மதுபான ஆலையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வகணபதி, ஜெயபால், ராஜப்பா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 2400 மது பாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் காரைக்கால் பகுதி போலீசாரிடம் தகவல் தெரிவித்து அங்கு உள்ள போலி மதுபான ஆலையம் மூட வைத்தனர்.

    தப்பி ஓடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காந்திநகர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக ஆத்தூர் வருவாய் கோட்டாட்சிரியருக்கு புகார் வந்தது.
    • காந்திநகர் பகுதியில், கலைச்செல்வன் என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக 80 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காந்திநகர் பகுதியில் அரசு மது பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதாக ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யாவிற்கு புகார் வந்தது. அவரது உத்தரவின் பேரில், கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையிலான வருவாய் துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது காந்திநகர் பகுதியில், கலைச்செல்வன் என்பவர் வீட்டில் சட்ட விரோதமாக 80 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியர் வெங்கடேசன், தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தம்மம்பட்டி போலீசார், வருவாய் துறையினருடன சேர்ந்து, கலைச்செல்வன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 3,840 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளது. இதையடுத்து விடுமுறையை பயன்படுத்தி மது பாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை வருவாய் துறையினர், தம்மம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் கலைச்செல்வனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கீழக்கரையில் கள்ள மார்க்கெட்டில் மதுபாட்டில்கள் விற்பனை நடக்கிறது.
    • ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    கீழக்கரையில் அரசு மதுபான கடைகள் இல்லாததால் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்புல்லாணி பகுதிகளில் செயல்படும் மதுபான கடைகளில் இருந்து வாகனங்களில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு கீழக்கரையில் மது விற்பனை களைகட்டி நடந்து வருகிறது.

    கீழக்கரையில் புதிய பஸ் நிலையம், வள்ளல் சீதக்காதி சாலை, ஏர்வாடி முக்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை போல் அமைத்து கள்ள மார்க்கெட்டில் மது பாட்டில் விற்பனை நடக்கிறது.

    மேலும் பெண்கள் நடந்து செல்லும் பல்வேறு பாதைகளில் மது பிரியர்கள் சர்வ சாதாரணமாக அமர்ந்து திறந்த வெளியில் மது அருந்தி வருகின்றனர். இதனால் கீழக்கரையில் ரோந்து பணியில் போலீசார் உள்ளனரா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் உள்ள தனிப்பிரிவு போலீசார் உறக்கத்தில் உள்ளனர். மேலும் சட்ட விரோதமான செயல்கள் குறித்து தலைமை இடத்துக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் மறைத்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். மது பிரியர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வந்தும் கோர்ட், வழக்கு, விசாரணைக்கு பயந்து எவ்வித புகாரும் தெரிவிக்காமல் சென்று விடுகின்றனர்.

    இதுசட்ட விரோத மான மதுபான விற்பனையாளர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காதாரக் கேடு நிலவி வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
    • இதர கழிவுகளை டேங்கா் லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் செல்வதும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    தாராபுரம்:

    பி.ஏ.பி.,இரண்டாம் மண்டல பாசனத்துக்காக தற்போது தண்ணீா் திறக்கப்பட்டு, விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பி.ஏ.பி.பிரதான வாய்க்கால்களில் கோழிப் பண்ணைகளில் நோய்த் தாக்குதலால் செத்துப்போன கோழிகளைக் கொண்டு வந்து போடுவதும், இதர கழிவுகளை டேங்கா் லாரிகளில் கொண்டு வந்து கொட்டிச் செல்வதும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் சுகாதாரக் கேடு நிலவி வருவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

    இந்நிலையில், பி.ஏ.பி.,வாய்க்காலில் காலி மது பாட்டில்கள் குவியல் குவியலாக மிதந்து வருவது விவசாயிகளுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குண்டடம் அருகே காணிக்கம்பட்டி அருகே பாயும் நந்தவனம்பாளையம் கிளை வாய்க்காலில் திடீரென ஆயிரக்கணக்கான மது பாட்டில்கள் குவியல்குவியலாக மிதந்து வந்தன.

    இது குறித்து குண்டடம் பகுதி விவசாயிகள் கூறியதாவது: -சமீப காலமாக பிஏபி. வாய்க்கால் என்பது கழிவுகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. தண்ணீரில், செத்த கோழிகளை சாக்குகளில் கொண்டு வந்து வீசிச் செல்வதால் அந்த கோழிகள் அழுகிப் போய் துா்நாற்றத்துடன், விவசாய வயல்களுக்குள் வந்து சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்த ஆயிரக்கணக்கான காலி மது பாட்டில்கள் உடைந்து, அதன் கண்ணாடிச் சிதறல்கள் வயல்களுக்குள் வந்து விவசாய வேலை செய்வோரின் கால்களை பதம் பாா்க்கும் நிலை உள்ளது.எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு, பிஏபி. வாய்க்காலில் கழிவுகளைக் கொட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

    • மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 734 மது பாட்டில்கள், மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.

    கோவை:

    காந்தி ஜயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலா் மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன்பேரில் பீளமேடு, போத்தனூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை, புறநகர் போலீசார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இதில், தடையை மீறி மாநகரில் மது விற்ற 16 பேரும், புறநகரில் 20 பேரையும் கைது செய்தனர். போலீஸாா் அவா்களிடம் இருந்து 734 மது பாட்டில்கள், மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.

    ×