search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் அவதி"

    • செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
    • சிறுநீரக நோயால் பலர் சிகிச்சை பெறுவதாக பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஒன்றியத்திலுள்ள 44 ஊராட்சிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நரிக்குடி, என்.முக்குளம், புல்வாய்க் காரை, மானூர், வீரசோழன், கொட்டகாட்சியேந்தல், மறையூர் உட்பட பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக் கள் 5 ரூபாய் நாணயம் செலுத்தி குடிநீர் பெரும் வகையில் 10-க்கும் மேற்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு திட்டங்கள் தீட்டப்பட்டு குடிநீர் நிலையங்கள் செயல்படுத்தப்பட்டன.

    இதில் கொட்டகாட்சி யேந்தல் மற்றும் மறையூர் ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்காக நிர்வாக அனுமதி இருந்தும் தற்போது வரை அதனை முழுமையாக செயல்படுத்துவதில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான மந்தநிலை காரணமாக திட்டமானது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்க ளுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது.

    மேலும் வீரசோழன் ஊராட்சிக்கு உட்பட்ட ஒட்டங்குளம், சாலை இலுப்பைகுளம் ஊராட் சிக்கு உட்பட்ட சொட்டமுறி என இன்னும் இது போன்ற பல்வேறு கிராமங்களில் குடிநீரில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குழாயில் வரும் குடிநீரை குடிப்பதற்கு பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர்.

    மேலும் குடிக்க குடிநீரின்றி வேறு வழியில்லாமல் பல வருடமாக அதனை குடித்து வருவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கல்லடைப்பு ஏற்பட்டு சிறுநீரக கோளாறுகளால் கடும் பாதிப்படைந்து வருகி ன்றனர்.

    இந்த நிலையில் நரிக்குடி ஒன்றியத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் அதன் திட்டங்கள் முடிக்கப்பட்ட நிலையில் இன்னும் மின் இணைப்பே கொடுக் கப்படாமல் உள்ளது.

    எனவே பெரும்பாலான குடிநீர் நிலையங்கள் இழுத்து மூடப்பட்டு செயல்பாடின்றி கிடப்பதால் பல லட்சம் ரூபாய் மதிப் புள்ள குடிநீர் நிலையங்க ளின் உபகரணங்கள் வீணாகி வருகிறது. இதன் மூலம் அரசுக்கு கடும் நிதியிழப்பு ஏற்பட்டு வருவதுடன் பொதுமக்களும் சுகாதாரமான குடிநீருக்காக பல வருடங்களாக ஏங்கி தவித்து வருவதாக அப்பகுதி களிலுள்ள சமூக ஆர்வலர் கள் கடும் மன வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    மேலும் பல கிராமங்களில் குழாய்களில் வரும் குடிநீரை குடித்து வருவதால் பொது மக்களுக்கு கல்லடைப்பு ஏற்பட்டு அதனால் சிறுநீரக கோளாறுகள் ஏற்பட்டு பெரும்பாலானோர் மருத்து வமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருவதா கவும் தெரிய வருகிறது. சில பகுதிகளில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் வேதனை யுடன் தெரிவித்தனர்.

    ஆகவே மாவட்ட கலெக்டர் பொதுமக்களின் நலன் கருதி குடிநீரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கல்லடைப்பு மற்றும் சிறுநீ ரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வரும் கிராமங்களை கண்டறிந்து ஆய்வு செய்து உடனடியாக அங்கு 5 ரூபாய் நாணய குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து தருவதோடு, அதன் செயல் பாடுகளை அதிகாரிகள் மூலமாக அவ்வப்போது ஆய்வுகள் செய்து பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு பஸ்கள் பராமரிப்பில் தொடர்ந்து நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
    • கண்ணாடி இல்லாத இருக்கையில் அமர்ந்து செல்லும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

    உடுமலை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உடுமலை கிளை மூலமாக சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ,பொதுமக்கள் ,கூலித்தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் அரசு பஸ்கள் பராமரிப்பில் தொடர்ந்து நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதும் தொடர்கதையாக உள்ளது. உடுமலையில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள் முழுமையாக இல்லை. இதனால் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணித்து வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏழை,எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு பஸ்கள் பெரிதும் உதவிகரமாக உள்ளது. அதன் மூலமாக பல்வேறு அடிப்படை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம். ஆனால் அரசு பஸ்களை முறையாக முழுமையாக பராமரிப்பதற்கு உடுமலை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை.

    அந்த வகையில் ஏராளமான பஸ்கள் ஜன்னல் கண்ணாடிகள் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கண்ணாடி இல்லாத இருக்கையில் அமர்ந்து செல்லும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக தொற்று நோய்களுக்கு ஆளாகும் சூழலும் உள்ளது. பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தரவேண்டிய அதிகாரிகள் பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொள்ளாதது வேதனை அளிக்கிறது.

    இதனால் உடுமலைப் பகுதியில் இயங்குகின்ற அரசு பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள் பொருத்துவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பஸ்களை பராமரிப்பதற்காக அளிக்கப்படுகின்ற தொகை முழுமையாக செலவிடப்படுகிறதா என்றும் மாவட்டஅனைத்து பஸ்களும் முறையாக கிராமத்துக்கு இயக்கப்படுகிறதா என்றும் நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். 

    • தினமும் 100 முதல் 120 கழிவு நீர் லாரிகள் இந்த வழியாக செல்கிறது.
    • இந்த பகுதிக்கு வருவதற்கு வாடகை கார் மற்றும் ஆட்டோக்களில் ரூ.50 முதல் ரூ.100 வரை அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    சென்னை:

    பெருங்குடியையும் துரைப்பாக்கத்தையும் இணைக்கும் இணைப்பு சாலை ஒரு கிலோ மீட்டர் தூரம் உடையது. ஆனால் இந்த சாலையில் பயணிப்பது அவ்வளவு எளிதானதல்ல.

    மாநகராட்சியின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். தினமும் 100 முதல் 120 கழிவு நீர் லாரிகள் இந்த வழியாக செல்கிறது. சில நேரங்களில் ரோட்டின் இரு பக்கங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 7 ஆண்டுகளாக செப்பனிடப்படாததால் இந்த சாலை குண்டும், குழியுமாக புழுதி பாதையாக மாறி உள்ளது. லாரிகள் செல்லும் போது வெளிவரும் புழுதி படலம் அந்த வழியாக செல்லும் பொது மக்களை பயமுறுத்துகிறது. இந்த புழுதிக்கு பயந்தே ஓ.எம்.ஆர். சாலைக்கு செல்பவர்கள் இந்த பாதை வழியாக செல்வதையே தவிர்த்துவிட்டார்கள்.

    இந்த பகுதிக்கு வருவதற்கு வாடகை கார் மற்றும் ஆட்டோக்களில் ரூ.50 முதல் ரூ.100 வரை அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.

    இந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள், தூசியின் காரணமாக இருமல், சளிகளால் அவதிப்படுகிறார்கள். கார்களில் இந்த சாலை வழியாக செல்பவர்கள் கார் பழுது பார்க்க 6 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.25 ஆயிரம் வரை செலவழிப்பதாக ஆதங்கப்படுகிறார்கள்.

    லாரி உரிமையாளர்கள் கூறும்போது, சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பங்கு லாரிகளை பழுதுபார்க்கவே செலவழிந்து விடுவதாக கூறினார்கள்.

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-வது வாரத்தில் ரூ.10.5 கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினார்கள்.

    • திருச்சுழியில் ஆதார் சேவைகளை பெற முடியாமல் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா வளாகத் தில் ஆதார் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆதார் கார்டுகளை புதிதாக விண்ணப்பிக்கவும், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு வந்து செல்கின்றனர்.

    ஆனால் இந்த ஆதார் சேவை மையத்தில் நாள்தோறும் முதலில் வரும் 25 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு ஆதார் சேவை வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்து வரும் பொதுமக்களுக்கு ஆதார் சேவை கிடைப்பது இல்லை. இதனால் நீண்ட தூரத்தில் இருந்து வரும் பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் மறுநாள் வரும் சூழல் ஏற்படுகிறது. மேலும் பண விரயமும், நேரமும் வீணாகிறது.

    வழக்கமாக திருச்சுழி தாலுகா அலுவலக இ- சேவை மையத்திற்கு நாள் தோறும் 50-க்கும் மேற்பட் டோர் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளி, கல்லூரி கள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகளும் ஆதார் கார்டுகளை விண் ணப்பிக்க அதிகமானோர் இ சேவை மையத்திற்கு வருகின்றனர்.

    ஆனால் திருச்சுழி இ-சேவை மையத்தில் பணி யாளர்கள் பற்றாக்குறை, சர்வர் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால் உடனடியாக ஆதார் சேவைகளை தர முடிவதில்லை. இதனால் ஆதார் விண்ணப் பிக்க வருவோர் பல நாட்கள் காத்துக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு ஆதார் சேவை மையங்களுக்கு போதிய அளவு ஊழியர்களை நியமிப்பதுடன், மிகவும் பின்தங்கிய பகுதிகளான திருச்சுழி மற்றும் நரிக்குடி யூனியனில் முக்கிய பகுதிகளில் வசிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இ -சேவை மையங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் மேற்படி இ-சேவை மையங்களுக்கு ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ளும் சேவைகளை மீண்டும் வழங்குவதுடன் ஆதார் எடுக்கும் வகையில் புதிய ஆதார் சேவை மையங்களையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டு மென மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயில் கொளுத்தி வருகிறது.
    • வீடுகளில் மின்விசிறி, ஏசி போன்ற எதுவும் இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    குனியமுத்தூர்,

    தமிழகத்தில் கடந்த சித்திரை மாத இறுதியில் இருந்து தற்போது வரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலின் தாக்கம் அதிகமா கவே காணப்ப டுகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வருவதே கிடையாது.

    அத்தியாவசிய தேவை யாக இருந்தாலும், வெயிலின் உஷ்ணம் குறைந்த பிறகே வெளியில் வருகின்றனர். அந்தளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரமும் முடிந்து விட்டாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.

    வீடுகளில் மின்விசிறி, ஏசி போன்ற எதுவும் இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவுகிறது.

    மேலும் பொதுமக்கள் வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், பதநீர், மோர், பழவகைகள் போன்ற குளிர்ச்சியான ஆகாரங்க ளை உணவாக எடுத்து கொண்டு வருகி ன்றனர்.

    இதுகுறித்து கோவையை சேர்ந்த இல்லத்தரசிகள் கூறியதாவது:-

    வருடா வருடம் அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது வெயில் தாக்கம் அதிகமாகி வருவது இயற்கை. ஆனால் இந்த வருடம் மிகவும் அதிகமாக உள்ளது.

    வீட்டில் மின்விசிறி இல்லாமல் உட்கார முடியாத சூழ்நிலை உள்ளது. இரவு நேரங்களில் மின்விசிறி இயங்கினால் கூட வெப்ப காற்று தான் வருகிறது.

    இதனை தவிர்த்து மொட்டை மாடியில் படுத்தால் கூட வெப்ப காற்று தான் வீசுகிறது. அவ்வப்போது ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது.

    ஆனாலும் அது ஒரு சில நாட்கள் தான். மீதி அனைத்து நாட்களிலும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் அவதிப்ப ட்டு வருகிறோம்.

    கடும் வெயில் காரணமாக குழந்தைகளுக்கு வியர்வை வேர்த்து ஊற்றுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சளி, இருமல் போன்ற நோய்களும் ஏற்படுகிறது. கடும் வெயில் காரணமாக தினமும் 2 நேரம் குளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். ஆனால் அதற்கும் தண்ணீர் தட்டுப்பாடு என்ற சூழ்நிலை உள்ளது. மிகவும் இக்க ட்டான சூழலில் உள்ளோம். ஆகவே விரைவில் இந்த வெயிலின் தாக்கம் குறைந்து வழக்க மான சூழ்நிலை ஏற்பட்டால் அனைவருக்கும் நல்லதாக சூழ்நிலை அமையும் என்று கருதுகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தேவகோட்டையில் டவுன் பஸ்கள் இயங்காதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
    • டவுன் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுவது தொடர் கதையாக உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு போக்கு வரத்து கழக பணிமனையில் 27 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தேவகோட்டையில் இருந்து கல்லல், வெற்றியூர், முப்பையூர், கோவிந்த மங்கலம், திருப்பாக் கோட்டை, ஆறாவயல், கண்ணங்குடி, சிறுவாச்சி, உஞ்சனை, புதுவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு வர அரசு பஸ் மட்டுமே உள்ளது.

    கிராம பகுதி மக்கள் தேவகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடை பெறும் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க அதிகளவில் வந்து செல்வார்கள். இந்த நிலையில் நேற்று 9 டவுன் பஸ்கள் இயங்காததால் கிராம மக்கள் பல மணி நேரமாக தேவகோட்டை பஸ் நிலையத்தில் நீண்டநேரம் காத்திருந்தனர்.

    இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகினர். சிலர் ஆபத்தான நிலையில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.பெரும்பாலான டவுன் பஸ்களின் டயர் மோசமான நிலையில் உள்ளன. தரம் குறைந்த பஸ்கள் தான் கிராமங்களுக்கு சென்று வருகிறது. அவ்வப்போது இந்த டவுன் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுவது தொடர் கதையாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு டவுன் பஸ்களின் அவல நிலையை வீடியோவாக அரசு பஸ் டிரைவர் எடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் தேவகோட்டையில் இருந்து 9 டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    • கூடுதலாக பொதுத்துறை வங்கிகளோ, தனியார் வங்கிகளோ இல்லை.
    • தினசரி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றனர்.

    ஏரியூர்,

    தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக தருமபுரி உள்ளது. அத்தகைய மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஏரியூர் ஒன்றியம்.

    தருமபுரி மாவட்ட நிர்வாகத்தலும் அரசாலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு ஒதுக்கப்பட்ட ஒன்றியமாகவே திகழ்கிறது. பின் தங்கிய மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியாக ஏரியூர் ஒன்றியம் உள்ளது. 10 ஊராட்சிகளை உள்ளடக்கிய 200-க்கும் மேற்பட்ட குக் கிராமங்களை கொண்டது ஏரியூர் ஒன்றியம்.

    இந்தப் பகுதியில் உள்ள ஆண்களும், இளைஞர்களும் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்கின்றனர். பெரும்பாலும் 70 சதவீதம் ஆண்கள் வெளியூரிலேயே வேலை செய்து வருகின்றனர்.

    வேலை தேடி திருப்பூர், கோவை, ஈரோடு, உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் வேலைக்கு செல்கின்றனர்.

    இந்நிலையில் தங்கள் குடும்பத்திற்கு வங்கிகள் மூலம் செலுத்தப்படும் பணத்தை, குடும்பத்தில் உள்ளவர்கள் சென்று பெற, போதிய வங்கி வசதிகள் ஏரியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இல்லை.

    இந்தியன் வங்கி மற்றும் கனரா வங்கி என்ற இரண்டு வங்கி சேவைகள் மட்டுமே உள்ளது. கூடுதலாக பொதுத்துறை வங்கிகளோ, தனியார் வங்கிகளோ இல்லை.

    மேலும் தனியார் ஏடிஎம் உள்ளடக்கி, 5 ஏ.டி.எம். மட்டுமே இந்த பகுதியில் உள்ளது. இந்த ஏ.டி.எம்.களிலும் பெரும்பாலும் பணம் இருப்பதில்லை. அல்லது ஏ.டி.எம்.கள் பழுதாகி விடுகிறது.

    தற்போது 100 நாள் வேலை திட்டம், மகளிர் சங்கங்கள் மற்றும் முதியோர் உதவித்தொகை போன்றவைகளை பெற பெண்களும், முதியோர்களும் வங்கிக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து பணத்தை பெற முடியாமல் திரும்பிச் செல்கின்றனர்.

    தங்களுடைய சேமிப்பு பணத்தை எடுக்க இரண்டு, மூன்று நாட்கள் வங்கிக்கு அலைய வேண்டிய அவல நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது

    மேலும் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளும் அரசு உதவித்தொகை பெற தற்போது வங்கி கணக்கு துவங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளும் பள்ளி, கல்லூரிக்கு செல்லாமல் வங்கியில், கணக்கு தொடங்க நாள் கணக்கில் காத்துக் கிடக்கின்றனர்.

    அதிகப்படியான வங்கிகள் இல்லாததால் ஓரிரு வங்கியிலேயே பொதுமக்கள் நாடுவதால் வங்கி பணியாளர்களால் உரிய சேவையை செய்ய இயலுவதில்லை. இதன் காரணமாக தினசரி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் தடுமாறி வருகின்றனர்.

    மேலும் ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகள் செயல்பட்டு வருகிறது. இவர்களின் பண பரிவர்த்தனைக்கும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    நகை கடன் பெறவும் சுமார் நான்கு மணி நேரம் வரை காத்திருந்தே, நகை கடன் பெற்று செல்லும் பொதுமக்கள், மிகவும் சிரமப்படுகின்றனர்.

    இந்நிலை மாற, இந்த பகுதி மக்களின் வங்கி தேவையை பூர்த்தி செய்ய, கூடுதலாக ஏரியூர் பகுதியில் வங்கிகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சி.புதூர் கிராமத்தில் வீதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
    • சுகாதார சீர்கேட்டால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள வாடிப்பட்டி யூனியனுக்குட்பட்ட சி.புதூர் கிராமத்தில் வடக்கில் இருந்து தெற்கு பக்கம் செல்லும் முக்கிய கழிவுநீர் வாய்காலில் குடியிருப்பு களில் இருந்து வெளியேறும் தண்ணீர் கலந்து சென்று தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் பாய்ந்து வந்துள்ளது. இந்தநிலையில் நிலத்தில் பாய்ந்து வந்த கழிவுநீர் பாதையை நில உரிமையாளர் மண்கொட்டி அடைத்து விட்டதால் 2 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மேற்கொண்டு செல்ல வழியின்றி வீதிகளில் வெள்ளம்போல் தேங்கி நிற்கிறது.

    இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இந்த பகுதி வீடுகளில் உள்ளவர்கள் கால்கள் நனையாமல் நடந்து செல்ல தற்காலிகமாக கல்பாதை அமைத்து நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஊராட்சி தலைவர் பாண்டுரங்கன் கூறுகையில், இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மாற்று வழியில்லாத நிலையால் தனியார் பட்டா இடத்தை ஆர்ஜிதம் செய்து கழிவுநீர் வாய்க்கால் கட்ட ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிள்ளோம். ஊரக வளர்ச்சி துறையின் அனுமதி கிடைத்த பின்னர் சாக்கடை நீர் வெளியேற வாய்கால் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தெருவில் தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

    • இந்த மாற்றத்தினால் கடலூர் மாவட்டம் முழு வதும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.
    • பல்வேறு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    கடலூர் :

    தமிழகத்தில் கடந்து சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கடலில் காற்று அதிகம் இருந்ததால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. தற்போது கடல் பகுதியில் அமைதி திரும்பியது. என்றாலும் கடலூர் மாவட்டத்தில் திடீர் என பருவநிலை மாறி உள்ளது. இந்த மாற்றத்தினால் கடலூர் மாவட்டம் முழு வதும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. இந்த கடும் குளிர் கடலூர் நெல்லிக்குப்பம் பண்ருட்டி விழுப்புரம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் பனிமூட்டம் அடர்ந்த புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

    இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களில் செல்வோர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் முகப்பு விளக்கை எரிய விட்டபடி கடும் குளிரில் நடுங்கியபடி எப்போது விபத்து ஏற்படும் என்ற அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கிறார்கள்.  குறிப்பாக கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் கடுங்குளிர் வாட்டி வதைகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கடுங்குளிரை தாங்காமல் பெரும் சிரமப்பட்டு செல்கிறார்கள்.  இந்த கடும் குளிரால் அவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானோர் இந்த குளிரால் ஏற்படும் உடல் நடுக்கத்தை தாங்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர் அலுவல கத்திற்கு செல்லும் பணி யாளர்கள் அதிகாலை நேரத்தில் இந்தக் கடுங்குளிரிலும் குளிர்ந்த தண்ணீரில் குளித்து விட்டு செல்கின்றனர்.இந்த தண்ணீரால் அவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கடலூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் ஏற்படும் கடும் குளிரிலிருந்து ஸ்வெட்டர் அணிந்து செல்கிறார்கள். எனவே பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உடல் நல பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    • ராஜபாளையம் பஸ் நிறுத்தங்கள் மாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
    • டவுன் பஸ்கள் எங்கெங்கு நிறுத்தப்பட்டுள்ளது? என்ற அறிவிப்பு பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு மக்கள் பார்லையில் படும்படி வைக்க வேண்டும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சிறப்பு நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. நகராட்சி சார்பில் 60 ஆண்டு காலமாக பழைய பஸ் நிலையம் நகரின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சங்கரன்கோவில் சாலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அதுவும் செயல்பட்டு வருகிறது. அதிகமான மக்கள் வந்து செல்லும் அளவிற்கு பழைய பஸ் நிலையம் உள்ளது.

    இந்த பஸ் நிலையத்தை அகற்றிவிட்டு நவீன வசதிகளுடன் அமைக்க ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதற்காக கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பழைய பஸ் நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு 21 கடைகள், 2 உணவு விடுதிகள், 2 காத்திருக்கும் அறைகள், ஒரு புறக் காவல் நிலையம், பெண்களுக்கான பாலூட்டும் அறை போன்ற வசதிகளுடன் 2 நவீன கழிப்பிடங்களும் கட்டப்பட உள்ளன.

    பஸ் நிலையம் புதுப்பி க்கும் பணிகள் காரணமாக பஸ்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருந்து வரும் பஸ்கள் பஞ்சு மார்க்கெட் டி.பி. மில்ஸ் ரோடு வழியாக ெரயில்வே பீடர் ரோடு சென்று அங்கிருந்து தென்காசி சாலை வழியாக புதிய பஸ் நிலையம் செல்லவும், கிழக்கே செல்லும் பஸ்கள் மதுரை சாலை, பஞ்சு மார்க்கெட், டி.பி. மில்ஸ் ரோடு வழியாக மலையடிப்பட்டி ெரயில்வே கேட் சென்று மலையடிப்பட்டி வழியாக கிழக்கே செல்லவும், தெற்கே இருந்து வரும் பஸ்கள் தென்காசி சாலை வழியாக காந்தி சிலை ரவுண்டானா வந்து மேற்கு புறமாக முடங்கியார் ரோடு திரும்பி வட்டாட்சியர் அலுவலகம் சாலை வழியாக, மாடசாமி கோவில் சாலை வழியாக பஞ்சு மார்க்கெட் சென்று வடக்கே செல்லவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில் டவுன் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கும், பஞ்சு மார்க்கெட்டில் இருந்து மலையடிப்பட்டி வழியாக கிழக்கு பகுதி செல்லவும், பஞ்சு மார்க்கெட் பகுதியில் இருந்து டி.பி. மில்ஸ் ரோடு, ெரயில்வே பீடர் ரோடு வழியாக முடங்கியார் சாலை, மாடசாமி கோவில் தெரு வழியாக ஒரு டவுன் பஸ் விடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஏற்கனவே ெரயில்வே மேம்பால பணிகள், பாதாள சாக்கடை பணிகள், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட பணிகளால் சாலை மோசமான நிலையில் உள்ளது. இந்த நிலையில், பழைய பஸ் நிலைய மேம்பாட்டு பணிகளால் எந்தெந்த டவுன் பஸ்கள் எங்கெங்கு நிறுத்தப்பட்டுள்ளது? என்ற அறிவிப்பு பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு மக்கள் பார்லையில் படும்படி வைக்க வேண்டும்.

    கிராமங்களுக்கு ெசல்லும் டவுன் பஸ்கள் புதிய பஸ்நிலையத்தில் இருந்தும், அரசுமகப்பேறு மருத்துவமனை முன்பிருந்தும் புறப்ப டுவதை பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் பலகைகளை பழைய பஸ்நிலையம் முன்பு வைத்தால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு தலை சுற்றுவது கொஞ்சம் குறைய வாய்ப்புள்ளது.

    கூடுதலாக சிரமங்களை சந்திக்கும் பொதுமக்கள் மீது ராஜபாளையம் ெரயில் நிலையத்தையும் மேம்ப டுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது வயிற்றில் புளியை கரைத்துள்ளது. நடிகர் வடிவேல் பாணியில், ''அடிக்குமேல அடியா அடிச்சுக்கிட்டே இருந்தா' எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி இருக்கமுடியும்'' என்ற நிலை தான் ராஜபாளையம் மக்களின் நிலை என்பது குறிப்பிடத்தக்கது.

    • காலை மற்றும் இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக கடும் குளிர் நிலவி வருகிறது.
    • விபத்து ஏற்படும் அபாயம் அளவுக்கு அதிகமாக உள்ளது.

    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் சீதோசன நிலை மாற்றத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் தற்போது கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.  அதன்படி கடலூர் நகர், புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த கடும் குளிரால் சாலைகளில் தெருக்களில் திரும்பும் திசையெல்லாம் வெள்ளை புகை மண்டலமாக பணி அடர்ந்து காணப்படுகிறது.

    இந்த பனியினால் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் செல்லும்போது முன்னால் செல்லும். வாகனங்கள் தெரியாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு செல்கின்றனர்.

    குறிப்பாக சிறுவர் முதல் பெரியவர் வரை பணியினால் உண்டா கும் கடும் குளிரை தாங்க முடியாமல் அவதி ப்படுகின்றனர். மேலும் இதனால் பல்வேறு நோய்களும் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கூட்டம் அலைமோதுகிறது. பிற மாவட்டங்களை விட கடலூர் மாவட்டம் வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் கடும் பணி பெய்தாலும் அளவுக்கு அதிகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சீதோசன நிலை மாற்றத்தின் போது ஏற்படும் ஒவ்வொரு இடர்பாடுகளிலும் அளவுக்கு அதிகமாக பாதிக்கின்றனர்.

    • ஈரோட்டில் இன்று காலை கடும் பனி பொழிவு இருந்தது.
    • வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மாவட்ட த்தின் பல பகுதிகளில் கடும் குளிர் வாட்டியது. தொட ர்ந்து மழை குறைந்தது. ஆனால் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது.

    மாவடடத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வரு கிறது. மேலும் பனி மூட்ட மாக காணப்பட்டு வருகிறது. இதனால் கடும் குளிர் வாட்டி வருகிறது.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள வனப்பகுதிகளான தாள வாடி, கேர்மாளம், ஆசனூர், பண்ணாரி, தலமலை உள்பட பல்வேறு கடும் பனி மூட்டமாக இருந்து வருகிறது.

    இதனால் தாளவாடி வனப்பகுதிகளில் கடும் குளிர் வாட்டி வருகிறது.

    இதனால் பொதுமக்கள் வெளியே வரமுடி யாமல் கடும் அவதி அடைந்து வருகிறா ர்கள். அதிகாலையி ல் வேலைக்கு செல்லும் கிராம மக்கள் கடும் குளிரால் வெளியே வர தயக்கம் காட்டி வரு கிறார்கள்.

    மேலும் பலர் ஸ்சுவட்டர், குல்லா அணிந்த படியே வருகிறார்கள். மேலும் வனப்பகுதி களில் கடும் பனி பொழிவு பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டப்படியே செல்கிறார்கள்.

    மேலும் கோபிசெட்டி பாளையம், நம்பியூர், சென்னிமலை, பெருந்துறை, கவுந்தப்பாடி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இன்று காலை வரை கடும் பனி பொழிவு பொழிந்து வருகிறது.

    அதே போல் அந்தியூர் அடுத்த பர்கூர், தாமரை க்கரை, தட்டக்கரை போன்ற மலைப்பகுதியில் இன்று காலை பனி பொழிவு காரண மாக கடும் குளிர் வாட்டியது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது. மேலும் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    ஈரோட்டில் இன்று காலை கடும் பனி பொழிவு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர். மேலும் பனியால் குளிர் வாட்டியது.

    இதனால் பெரும்பாலான பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் கடும் குளிரால் குல்லா அணிந்தபடியே வந்தனர்.

    சென்னிமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் வழக்கத்தை விட கடந்த 2 நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

    காலை சூரிய உதயத்தை கடந்தும் 8 மணி வரை பனிப்பொழிவு தொடர்வதால் காலை நேரத்தில் வேலைக்கு, தொழிற்சாலைக்கும், கைத்தறிநெசவுத் தொழிலுக்கும், விசைத்தறி குடோனுக்கு, நெசவு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், அதிகாலை நடைப்பயிற்சி செய்வோர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    அதனால் வெளியில் செல்லும் பெரும்பாலானோர் குல்லா, ஸ்வெட்டர் அணியும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்றும் அதிகாலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவும், குளிர் நடுக்கம் இருந்தது.

    ×