search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டவுன் பஸ்கள் இயங்காதால் கிராம மக்கள் அவதி
    X

    தேவகோட்டை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள பஸ்கள்.

    டவுன் பஸ்கள் இயங்காதால் கிராம மக்கள் அவதி

    • தேவகோட்டையில் டவுன் பஸ்கள் இயங்காதால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
    • டவுன் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுவது தொடர் கதையாக உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு போக்கு வரத்து கழக பணிமனையில் 27 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தேவகோட்டையில் இருந்து கல்லல், வெற்றியூர், முப்பையூர், கோவிந்த மங்கலம், திருப்பாக் கோட்டை, ஆறாவயல், கண்ணங்குடி, சிறுவாச்சி, உஞ்சனை, புதுவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நகர் பகுதிக்கு வர அரசு பஸ் மட்டுமே உள்ளது.

    கிராம பகுதி மக்கள் தேவகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடை பெறும் வாரச்சந்தையில் பொருட்கள் வாங்க அதிகளவில் வந்து செல்வார்கள். இந்த நிலையில் நேற்று 9 டவுன் பஸ்கள் இயங்காததால் கிராம மக்கள் பல மணி நேரமாக தேவகோட்டை பஸ் நிலையத்தில் நீண்டநேரம் காத்திருந்தனர்.

    இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகினர். சிலர் ஆபத்தான நிலையில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.பெரும்பாலான டவுன் பஸ்களின் டயர் மோசமான நிலையில் உள்ளன. தரம் குறைந்த பஸ்கள் தான் கிராமங்களுக்கு சென்று வருகிறது. அவ்வப்போது இந்த டவுன் பஸ்கள் பழுதடைந்து நடுவழியில் நின்று விடுவது தொடர் கதையாக உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு டவுன் பஸ்களின் அவல நிலையை வீடியோவாக அரசு பஸ் டிரைவர் எடுத்தது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் தேவகோட்டையில் இருந்து 9 டவுன் பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    Next Story
    ×