search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hard Cold"

    • காலை மற்றும் இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக கடும் குளிர் நிலவி வருகிறது.
    • விபத்து ஏற்படும் அபாயம் அளவுக்கு அதிகமாக உள்ளது.

    கடலூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் சீதோசன நிலை மாற்றத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் தற்போது கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.  அதன்படி கடலூர் நகர், புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக காலை மற்றும் இரவு நேரங்களில் அளவுக்கு அதிகமாக கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த கடும் குளிரால் சாலைகளில் தெருக்களில் திரும்பும் திசையெல்லாம் வெள்ளை புகை மண்டலமாக பணி அடர்ந்து காணப்படுகிறது.

    இந்த பனியினால் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் செல்லும்போது முன்னால் செல்லும். வாகனங்கள் தெரியாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு செல்கின்றனர்.

    குறிப்பாக சிறுவர் முதல் பெரியவர் வரை பணியினால் உண்டா கும் கடும் குளிரை தாங்க முடியாமல் அவதி ப்படுகின்றனர். மேலும் இதனால் பல்வேறு நோய்களும் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கூட்டம் அலைமோதுகிறது. பிற மாவட்டங்களை விட கடலூர் மாவட்டம் வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் கடும் பணி பெய்தாலும் அளவுக்கு அதிகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சீதோசன நிலை மாற்றத்தின் போது ஏற்படும் ஒவ்வொரு இடர்பாடுகளிலும் அளவுக்கு அதிகமாக பாதிக்கின்றனர்.

    ×