search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "window door"

    • அரசு பஸ்கள் பராமரிப்பில் தொடர்ந்து நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
    • கண்ணாடி இல்லாத இருக்கையில் அமர்ந்து செல்லும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

    உடுமலை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உடுமலை கிளை மூலமாக சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் ,பொதுமக்கள் ,கூலித்தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் அரசு பஸ்கள் பராமரிப்பில் தொடர்ந்து நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவதும் தொடர்கதையாக உள்ளது. உடுமலையில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள் முழுமையாக இல்லை. இதனால் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணித்து வருகின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏழை,எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு பஸ்கள் பெரிதும் உதவிகரமாக உள்ளது. அதன் மூலமாக பல்வேறு அடிப்படை அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம். ஆனால் அரசு பஸ்களை முறையாக முழுமையாக பராமரிப்பதற்கு உடுமலை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை.

    அந்த வகையில் ஏராளமான பஸ்கள் ஜன்னல் கண்ணாடிகள் இல்லாமல் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் கண்ணாடி இல்லாத இருக்கையில் அமர்ந்து செல்லும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடி பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.இதன் காரணமாக தொற்று நோய்களுக்கு ஆளாகும் சூழலும் உள்ளது. பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தரவேண்டிய அதிகாரிகள் பொதுமக்களின் உடல் நலனை கருத்தில் கொள்ளாதது வேதனை அளிக்கிறது.

    இதனால் உடுமலைப் பகுதியில் இயங்குகின்ற அரசு பஸ்களில் ஜன்னல் கண்ணாடிகள் பொருத்துவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பஸ்களை பராமரிப்பதற்காக அளிக்கப்படுகின்ற தொகை முழுமையாக செலவிடப்படுகிறதா என்றும் மாவட்டஅனைத்து பஸ்களும் முறையாக கிராமத்துக்கு இயக்கப்படுகிறதா என்றும் நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். 

    ×