என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்சுழியில் ஆதார் சேவைகளை பெற முடியாமல் கிராம மக்கள் கடும் அவதி
- திருச்சுழியில் ஆதார் சேவைகளை பெற முடியாமல் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
- கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா வளாகத் தில் ஆதார் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆதார் கார்டுகளை புதிதாக விண்ணப்பிக்கவும், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் இந்த ஆதார் சேவை மையத்தில் நாள்தோறும் முதலில் வரும் 25 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு ஆதார் சேவை வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்து வரும் பொதுமக்களுக்கு ஆதார் சேவை கிடைப்பது இல்லை. இதனால் நீண்ட தூரத்தில் இருந்து வரும் பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் மறுநாள் வரும் சூழல் ஏற்படுகிறது. மேலும் பண விரயமும், நேரமும் வீணாகிறது.
வழக்கமாக திருச்சுழி தாலுகா அலுவலக இ- சேவை மையத்திற்கு நாள் தோறும் 50-க்கும் மேற்பட் டோர் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளி, கல்லூரி கள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகளும் ஆதார் கார்டுகளை விண் ணப்பிக்க அதிகமானோர் இ சேவை மையத்திற்கு வருகின்றனர்.
ஆனால் திருச்சுழி இ-சேவை மையத்தில் பணி யாளர்கள் பற்றாக்குறை, சர்வர் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால் உடனடியாக ஆதார் சேவைகளை தர முடிவதில்லை. இதனால் ஆதார் விண்ணப் பிக்க வருவோர் பல நாட்கள் காத்துக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு ஆதார் சேவை மையங்களுக்கு போதிய அளவு ஊழியர்களை நியமிப்பதுடன், மிகவும் பின்தங்கிய பகுதிகளான திருச்சுழி மற்றும் நரிக்குடி யூனியனில் முக்கிய பகுதிகளில் வசிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இ -சேவை மையங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் மேற்படி இ-சேவை மையங்களுக்கு ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ளும் சேவைகளை மீண்டும் வழங்குவதுடன் ஆதார் எடுக்கும் வகையில் புதிய ஆதார் சேவை மையங்களையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டு மென மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்