search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர்"

    • பேரூராட்சியில் புதிய நூலக கட்டிடம் கட்டுவது தொடர்பாக இடம் தேர்வு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
    • ஊராட்சி ஒன்றியம் மகளிர்க்கு மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கிடும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் திருச்சினம்பூண்டி ஊராட்சியில் உள்ள செந்தமிழ் நகரில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும், பூதலூர் வட்டம் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் புதிய நூலக கட்டிடம் கட்டுவது தொடர்பாக இடம் தேர்வு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    புது ஊராட்சி ஒன்றியம் சிவசாமிபுரம் ஊராட்சியில் அரசு கல்லூரி கட்டுவது தொடர்பாக இடம் தேர்வு குறித்தும், பூதலூர் ஊராட்சி ஒன்றியம் கூடநாணல் ஊராட்சியில் மாதம்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்று வருவதை குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

    திருவையாறு ஊராட்சி ஒன்றியம் விண்ணமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேற்கண்ட பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) பழனிவேல், பூதலூர் வட்டாட்சி யர்பெர்சி யா, பேரூராட்சி செயல் அலுவலர்நெ டுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ராஜா, பொற்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பெறும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
    • முதற்கட்டமாக நேற்று முதல் 4.8.2023 வரை 611 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரி மைத்திட்ட விண்ணப்பம் பெறும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நேற்று முதல் 4.8.2023 வரை 611 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன. 2-வது கட்டமாக 5.8.2023 முதல் 16.8.2023 வரை 303 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.

    இதனைத்தொடர்ந்து, நேற்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி பேரூராட்சி சமு தாய கூடம் மற்றும் வேலூர் பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாமினை கலெக்டர் டாக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுகளின் போது, விண்ணப்பங்க ளைப் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணி, விண்ணப் பங்கள் பதிவேற்றம் செய்யும் உள் ளிட்ட பணிகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும் விண்ணப்ப பதிவு முகாமில் பொது மக்களுக்கு தேவை யான குடிநீர், மின் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முகாம் பொறுப்பு அலுவ லர்கள் உறுதி செய்திடல் வேண்டு மெனவும், ஆவ ணங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்திட வேண்டும் என அலுவ லர்க ளுக்கு கலெக்டர் டாக்டர் உமா அறிவுறுத்தி னார்.

    இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆதிதிரா விடர் நல அலுவலர் சுகந்தி, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச் செல்வி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • லைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட முகாம் அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறும். நியாய விலைக் கடை பணியாளர் ஒவ்வொரு நியாய விலைக் கடைப் பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கு ம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார்.

    டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்பாக தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக நியாயவிலை கடைக்கு வரத் தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

    முதல் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை அகஸ்தீஸ்வரம் வருவாய் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், தோவாளை வருவாய் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், கல்குளம் வருவாய் வட்டத்தில் உள்ள 126 கிராமங்களின் நியாய விலை கடை பகுதியில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

    நாகர்கோவில் மாநக ராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், பத்மனாபபுரம் மற்றும் குளச்சல் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நியாய விலைக்கடை பகுதியில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடை பெறும்.

    கல்லுகூட்டம், கோத நல்லூர் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள தலா 5, குமார புரம் பேரூராட்சி பகுதியில் 7, மணவாளகுறிச்சி, நெய்யூர் பேரூராட்சி பகுதிகளில் தலா 6, மண்டைக்காடு பேரூ ராட்சியில் 8, வெள்ளிமலை பேரூராட்சியில் 5 நியாய விலைக்கடைகளில் முதல் கட்டமாக விண்ணப் பதிவு முகாம்கள் நடைபெறும். மேலும் வில்லுக்குறி பேரூ ராட்சிக்குட்பட்ட 14, 4, 5, 11, 6, 4 ஆகிய வார்டுகளிலுள்ள நியாயவிலை கடைகளிலும் முகாம் நடைபெறும்.

    திருவிதாங்கோடு பேரூ ராட்சிக்குட்பட்ட வார்டு எண். 12, திங்கள் நகர் பேருராட்சிக்குட்பட்ட வார்டு எண் 1, 11, 12, 8, 15 ஆகியவற்றில் உள்ள நியாய விலைக் கடை பகுதிகளில் முதல் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம் கள் நடைபெறும்.

    சடையமங்கலம், முத்தல குறிச்சி, தென்கரை, வெள்ளி சந்தை கக்கோட்டுதலை, நெட்டாங்கோடு ஆகிய ஊராட்சிகளில் உள்ள தலா 2 கட்டடிமாங்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 5, குருந்தன்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 7, சைமன் காலனி பகுதியில் 4, முட்டம் பகுதியில் 8 நியாய விலைக்கடைகளிலும், தலக்குளம் ஊராட்சி பகுதியிலுள்ள 1 நியாய விலைக்கடையிலும் முதற்கட்டமாக விண்ணபப்பதிவு முகாம்கள் நடைபெறும்.

    இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை திருவட்டார் வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும், கிள்ளியூர் வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும், விளவங்கோடு வருவாய் வட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் நியாய விலைக் கடைப் பகுதியில் விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும். கல்குளம் வட்டத்தில் மீத முள்ள 49 நியாய விலை கடைப் பகுதிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும். கொல்லங் கோடு நகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் உள்ள நியாய விலைக் கடை பகுதியில் 2-ம் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.கல்குளம் வட்டத்தில் இரணியல் பேரூராட்சிப் பகுதியிலுள்ள 3 நியாய விலைக்கடைகளிலும், கப்பியறை பேரூராட்சிப் பகுதியிலுள்ள 7 நியாய விலைக்கடைகளிலும், முளகுமூடு பேரூராட்சி பகுதியிலுள்ள 6 நியாய விலைக்கடைகளிலும், வாள்வச்சகோஷ்டம் பேரூ ராட்சி பகுதியிலுள்ள 8 நியாயவிலைக்கடைகளிலும் இரண்டாம் கட்ட விண்ணப் பபதிவு முகாம் நடைபெறும்.

    மேலும் வில்லுக்குறி பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 15, திருவி தாங்கோடு பேரூராட்சி பகுதியில் வார்டு எண். 6, 7, 12, திங்கள்நகர் பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 5 ஆகிய நியாய விலை கடைகளிலும், நுள்ளிவிளை ஊராட்சி பகுதியிலுள்ள 6 நியாய விலைக்கடை களிலும், திக்கணங்கோடு ஊராட்சி பகுதியிலுள்ள 7 நியாய விலைக்கடைகளிலும், மருதூர்குறிச்சி ஊராட்சியில் உள்ள 4 நியாய விலைக்கடைகளிலும், ஆத்திவிளை ஊராட்சியில் உள்ள 3 நியாய விலைக்கடைகளிலும், 2-ம் கட்டமாக விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடை பெறும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு, சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ், பெண்கள் உரிமைத் தொகை திட்டம் செயல் படுத்த, விரிவான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகள் அருகே, உரிய விண்ணப்பப் பதிவு முகாம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழக அரசு, சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ், பெண்கள் உரிமைத் தொகை திட்டம் செயல் படுத்த, விரிவான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியை, நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திடும் வகை யில், அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய, மாவட்ட மற்றும் வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகள் அருகே, உரிய விண்ணப்பப் பதிவு முகாம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பங் களை , முகாம் ஆரம்பிக்கும் நாட்களுக்கு முன், நேரடை யாக ரேசன்கார்டுதாரர்கள் வீட்டிற்கே சென்று, முகாமிற்கு வரவேண்டிய நாள், நேரம் குறித்து விற்பனையாளர் பதிவு செய்து வழங்குவார்கள்.

    முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அந்தந்த குடும்பத்தலைவியே, அவருக்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்ப முகா மில் ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண், ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின் கட்டண ரசீது ஆகிய வற்றுடன் சமர்ப்பித்து கைவிரல் ரேகை பதிவுகள் மூலம் பதிவுகள் செய்ய வேண்டும்.அனைத்து முகாம்களி லும் போலீசார் மூலம் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தடுக்க நடவ டிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகை யில் அனைத்து தாலுகா அலுவல கங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

    கலெக்டர் அலுவல கத்தில் 1800 425 1997, நாமக்கல் தாலுக்கா அலுவ லகம்-04286 233701, ராசிபுரம்- 04287-222840, சேந்தமங்கலம்- 04286-271127, கொல்லிமலை- 63792-85667, மோகனூர்-04286-297768, திருச்செங்கோடு- 04288-253811, ப.வேலூர்- 04268-250099, குமாரபாளையம்- 04288-264546 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், விண்ணப்பப் பதிவு முகாம்கள், 2 கட்டங் களாக நடத்தப்படுகிறது. காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமைகளிலும் முகாம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது.
    • சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை ெதாகை வழங்கும் திட்டத்துக்கான பூர்வாங்க நடவ டிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை ெதாகை வழங்கும் திட்டத்துக் கான பூர்வாங்க நடவ டிக்கை கள் தொடங்கப்பட்டுள்ளன.

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநகராட்சி பகுதியில் 188 ரேசன் கடைகளும், கிராம ஊராட்சிகளில் 1,093 ரேசன் கடைகளும், பேரூராட்சிகளில் 126 ரேசன் கடைகளும் மற்றும் நகராட்சிகளில் 134 ரேசன் கடைகளும் என மொத்தம் 1,541 ரேசன் கடைகள் உள்ளன.

    500 ரேசன் கார்டுகள் உள்ள கடைகளுக்கு ஒரு பதிவு மையம், 600 ரேசன் கார்டுகள் உள்ள கடைகளில் 2 பதிவு மையம், 1000 முதல் 1500 ரேசன் கார்டு உள்ள கடைகளில் 3 பதிவு மையம், 1500-க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் உள்ள கடைகளில் 4 பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. 2-வது கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை, 3-வது கட்ட முகாம் ஆகஸ்டு 17-ந்தேதி தொடங்கும். ரேசன் கார்டு தாரர்கள் அனைவருக்கும் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பப்பதிவு அரசின் சார்பில் மேற்ெகாள்ளப்படு வதால் கட்டணம் ஏதும் கிடை யாது. இடைத்தரகர்களை யாரும் நம்ப வேண்டாம்.

    நாளொன்றுக்கு 30 முதல் 50 பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. வருவாய்த்துறை, கூட்டு றவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட அனைத்து துறை அலுவலர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இந்த தகவலை கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் நடந்த மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குவது குறித்த கருத்தரங்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்றார்.
    • மகளிர் சுய உதவி குழு கடன் மேளா நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்த லுக்கு இணங்க கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குவது தொடர்பான கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் வளாக மக்கள் குறைதீர் கூட்டரங்கில் நடத்தியது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜூலு கலந்து கொண்டார்.

    அவர் பேசியதாவது:-

    மகளிர் சுய உதவி குழு கடன்கள் அதிகம் வழங்கப்படுவதன் மூலம் மாவட்டத்தில் பண சுழற்சி அதிகம் ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 100-க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்கள் உருவாக்கப் படவும், இந்த நிதியாண்டில் ரூ.300 கோடிக்கும் மேலாக மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கவும் உறுதி பூண்டு துறை அலுவலர்கள் மற்றும் சங்க பணியாளர்கள் செயல்பட வேண்டும்.

    மேலும் மே 15 முதல் ஜூன் 30 வரை மாவட்டத்தில் உள்ள 131 வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் மகளிர் சுய உதவி குழு கடன் மேளா நடைபெற உள்ளது. இதில் சங்கத்தின் விவகார எல்லையில் உள்ள அனைத்து மகளிரும் உறுப்பினராகி, கடன் பெற்று பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள், கூட்டுறவுத்துறை மற்றும் மத்திய வங்கி அலுவலர்கள் கலந்துகொண்டனர். சிறந்து விளங்கிய கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சேத்தூர் வேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியில் மாவட்ட தலைவி செல்வமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அய்யனார், செட்டியார்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைவரும், விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவருமான தளவாய் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ேபசினார்.

    மாவட்ட முன்னாள் பொதுச்செயலாளர் செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற தலைவர் சாமி, மாவட்ட விவசாய அணி தலைவர் தளவாய் பாண்டியன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவி மேரி, துணைத் தலைவி முத்து, நெசவாளர் அணி மாநில செயலாளர் குமாரசாமி ராஜா, மகளிர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் காளீஸ்வரி, ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் பொன்னுசாமி வைரமுத்து, எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராமர், சேத்தூர் வேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம் வட்டார துணைத் தலைவர் சின்னத்தம்பி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது
    • பொதுத் தேர்வை தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் எழுதவில்லை

    நாகர்கோவில், 

    குமரி மாவட்ட அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நேற்று நடை பெற்றது.

    மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் சின்னதுரை, முன்னாள் அமைச்சர் பச்சைமால், கழக இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், மாநகர கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, சேகர், அனிலா சுகுமாரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கிழக்கு கழக பகுதி செயலாளர் வக்கீல் ஜெயகோபால் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் 28 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தீய செயல்களை நினைவு கூட்டம் என்ற பெயரில் கூட்டம். நடத்தி பிரச்சினையை தி.மு.க. உருவாக்கி உள்ளது.

    தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறை வேற்றவில்லை. தொற்று பாதிப்பு காலங்களில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட வில்லை. குமரி மாவட்டத் தில் உள்ள ஒரு குளங்கள் கூட தூர் வாரப்படவில்லை. தண் ணீர் தட்டுப்பாடு உள்ளது. அரசு கட்டிடங்களுக்கு பெயர் வைப்பதிலும், பேனா வைப்பதிலும் தான் தி.மு.க. அரசு தீவிரம் காட்டு கிறது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக உள்ளது. தி.மு.க.வில் அதிக அளவில் அ.தி.மு.க.வில் இருந்தவர்கள் தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள். எனவே தி.மு.க. என்பதை விட அதி.மு.க. 2-ம் பாகம் என கூறினால் பொருந்தும்.

    பொதுத் தேர்வை தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் எழுதவில்லை. இதுவே தி.மு.க. அரசின் சாதனை ஆகும். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சீராக இருந்தது. தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. பெண் போலீசாருக்கு பாது காப்பு இல்லாத நிலை உள்ளது.

    அ.தி.மு.க. அரசால் கொண்டு வந்த அம்மா உணவகம், அம்மா மருந்தகம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தி வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களை தி.மு.க. அரசு நசுக்கி வரு கிறது. மக்க ளுக்கான அரசு தி.மு.க. இல்லை. அது குடும்ப அரசாக உள்ளது. ஈரோடு இடைத் தேர்தல் மூலம் தேர்தல் ஆணையம் முழுமையாக தோல்வியடைந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் அவைத் தலைவர் சேவியர் மனோக ரன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் ஜெஸீம், நகர முன்னாள் செயலாளர் சந்துரு, கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் அக் ஷயாகண்ணன் நன்றி கூறி னார்.

    • ஊடகத்துறையில் மகளிர் பங்களிப்பு எனும் தலைப்பில் தனியார் கல்லூரியில் கருத்தரங்கு நடைபெறுகிறது.
    • ஊடகத்துறையில் மகளிர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

    சென்னையில் உள்ள பிரபல மகளிர் தனியார் கல்லூரியில் ஊடகங்களில் மகளிர் பங்களிப்பு என்ற தலைப்பில் வரும் 3ஆம் தேதி முதல் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைப்பெற இருக்கிறது.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவி மகளிர் கல்லூரியில் ஊடகப்பிரிவு தொடர்பான பாடப்பிரிவில் பயின்ற மகளிர் ஊடகத்துறையில் சிறந்து விளங்குகின்றனர். இந்த நிலையில் அந்த கல்லூரியில் ஊடகங்களில் மகளிரின் பங்களிப்பு என்ற தலைப்பை மையமாகக் கொண்டு சர்வதேச கருத்தரங்கம், நடைபெற உள்ளது.

    பிப்ரவரி 3 மற்றும் 4 தேதிகளில் நடக்கும் இந்த கருத்தரங்கில், அதே கல்லூரியில் பயின்று வெளி நாடுகளில் பணியாற்றுபவர்கள் பங்கேற்கிறார்கள். ஊடகத்துறையில் மகளிரின் பங்களிப்பு மாற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.

    • பாரதிய ஜனதா கூட்டத்தில் கண்டனம்
    • மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகத்தை 2000 இடங்களில் ஒளிபரப்பு செய்து மக்களிடம் கொண்டு செல்ல தீர்மானம்

    கன்னியாகுமரி:

    பாரதிய ஜனதா குமரி மாவட்ட செயற்குழு கூட்டம் மேலசங்கரன்குழியில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி தலைவி சத்திய ஸ்ரீ ரவி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மேலசங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்து சரவணன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் பால் கனகராஜ் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன் தீர்மானங்களை முன் மொழிந்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் ஸ்ரீகலா, ராமநாதன், பொதுச் செயலாளர் ஜெக நாதன், மாவட்ட துணை பொதுச்செயலாளர் வினோத், செயலாளர் சுடர்க்கின மனோகரகுமார், பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் சிவக்குமார், விளையாட்டு மேம்பாட்டு மாநில தலைவர் அமர் பிரசாத்ரெட்டி, ஒன்றிய பொருளாளர் சுகுமார், ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அதிபன் உட்பட மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் பல மகளிர் பஸ்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து துறை யின் இந்த நடவடிக்கைக்கு செயற்குழு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா தேசிய தலைவராக பொறுப்பேற்ற ஜே.பி. நட்டா பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்த குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசுக்கும், கட்சிக்கும் அயராது உழைத்த பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப் பட்டது. மாவட்டத்தில் அச்சமின்றி தேர்வு எழுதும் வழியில் பரிக்ஷா பெ சர்ச்சா நிகழ்ச்சிகளை கன்னியாகுமரி மாவட்டத் தில் சிறப்பாக நடத்திய கல்வியாளர் பிரிவு பொறுப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட் டது. மாவட்டத்தில் மனதின் குரல் நிகழ்ச்சியின் 100-வது பாகத்தை 2000 இடங் களில் ஒளிபரப்பு செய்து மக்களிடம் கொண்டு செல்ல இச்செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரட்டை ரயில் பாதை, 4 வழி சாலை திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டதுடன் தேவையான மணல் ஜல்லி கட்டுமான பொருட்கள் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டது.தொடர்ந்து மத்திய அரசு டன் தொடர்பு கொண்டு இத்திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றி முடிக்க அயராது பாடுபட்டு வரும் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ண னுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் ஒன்றிய தலைவர் பொன். சுரேஷ் நன்றி கூறினார்.

    • ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.

    திருப்பூர்:

    திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும், ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இத்தகைய நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து குன்னத்தூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தில் ஏறுவதற்காக பழைய பேருந்து நிலையத்தில் மகளிா் சிலா் காத்திருந்தனா். இதனிடையே பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியபோது மகளிா் சிலா் பேருந்தை நிறுத்தியுள்ளனா். ஆனால், ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.

    ஆகவே அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும், அலைக்கழிக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் பயணிகள் தெரிவித்துள்ளனா்.

    இது குறித்து அரசுப் போக்குவரத்துகழக திருப்பூா் 2 கிளை மேலாளா் வடிவேலிடம் கேட்டபோது, அரசுப் பேருந்துகளில் மகளிரை அலைக்கழிக்கக்கூடாது என்று ஏற்கெனவே ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆகவே பாதிக்கப்பட்ட மகளிா் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
    • வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்க ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்திலுள்ள போலீஸ் நிலையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நித்திரவிளை, சுசீந்திரம், வடசேரி, நேச மணி நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அவர் ஆய்வு மேற்கொண்டு இருந்தார்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் திடீர் ஆய்வு மேற்கொண் டார். அப்போது போலீ சார் அவருக்கு அணி வகுப்பு மரியாதை அளித்த னர். அணிவகுப்பு மரியா தையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட் டார்.

    இதை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பரா மரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் வருகை பதிவேடு ஆகிய வற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல் தகவல் அறிக்கை புகார் மனு அளிக்க வந்தவர்களின் விபரங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். இந்த ஆண்டு இதுவரை எத்த னை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த வழக்குகளில் எத்தனை குற்றவாளிகள் கைது செய் யப்பட்டுள்ளனர். குற்றப் பத்திரிகைகள் அனைத்து வழக்குகளி லும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என் பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.வழக்கு களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    மகளிர் போலீஸ் நிலை யங்களுக்கு குடும்ப பிரச்சி னைகள் பெண்கள் மீதான தொந்தரவுகள் தொடர்பான புகார் மனுக்கள் வரும்.அவ்வாறு வரும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவ டிக்கை எடுக்க வேண்டும். போலீசார் அனைவரும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் அதை தெரிவிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் புகார் பெட்டி வைக்கப் பட்டுள்ளது.

    உங்களது பிரச்சினை களை புகார் பெட்டியில் போட்டால் அதை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பெண்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்க ளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ×