search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
    X

    மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    • ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மகளிர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சேத்தூர் வேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டியில் மாவட்ட தலைவி செல்வமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அய்யனார், செட்டியார்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர். விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் மாவட்ட தலைவரும், விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவருமான தளவாய் பாண்டியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ேபசினார்.

    மாவட்ட முன்னாள் பொதுச்செயலாளர் செல்வராஜ், இளைஞர் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற தலைவர் சாமி, மாவட்ட விவசாய அணி தலைவர் தளவாய் பாண்டியன், மாவட்ட மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவி மேரி, துணைத் தலைவி முத்து, நெசவாளர் அணி மாநில செயலாளர் குமாரசாமி ராஜா, மகளிர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் காளீஸ்வரி, ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க தலைவர் பொன்னுசாமி வைரமுத்து, எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் ராமர், சேத்தூர் வேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம் வட்டார துணைத் தலைவர் சின்னத்தம்பி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

    Next Story
    ×