search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்தரங்கம்"

    • மற்ற மூன்று மாவட்டங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
    • ஒரே நாளில் 4 மாவட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் நடைபெறுகிறது.

    மாபெரும் கருத்தரங்கம்

    ஒரே நாளில் 4 மாவட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் வல்லுனர்கள் பேசுவதை மற்ற மூன்று மாவட்டங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

    பங்கேற்பாளர்கள்

    Dr.பிரசாத் அவர்கள். முதன்மை விஞ்ஞானி.

    ஒருங்கிணைப்பாளர். AICRPS. IISR. கோழிக்கோடு.

    Dr. கண்டி அண்ணன் முதன்மை விஞ்ஞானி

    IISR. கோழிக்கோடு.

    Dr. முகமது பைசல். முதன்மை விஞ்ஞானி

    ICAR-IISR. மடிக்கேரி. கர்நாடகா.

    திரு. சிமந்தா சாய்கியா. துணை இயக்குனர்

    இந்திய நறுமணப் பயிர்கள் வாரியம்.போடிநாயக்கனூர்.

    திரு. கனக திலீபன் அவர்கள். உதவி இயக்குனர்.

    இந்திய நறுமண பயிர்கள் வாரியம். ஈரோடு.

    இடம்: புதுக்கோட்டை, கோயம்புத்தூர், மயிலாடுதுறை, கடலூர்.

    நாள்: ஏப்ரல் 28 ஞாயிறு

    முன்பதிவு அவசியம்

    94425 90079, 94425 90081

    பயிற்சி கட்டணம் ₹200

    • கருத்தரங்கில் ஆரோக்கியமான உணவு சமையல் குறித்த கேள்வி, பதில் அமர்வும் இடம்பெற்றது.
    • இதில் பங்கேற்றவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    ஆரோக்கியமான மனம், உடல் மற்றும் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு நீடித்த மற்றும் ஆக்கப்பூர்வமான ஆன்லைன் வணிகத் தளத்தை 'நேச்சுரலே' நிறுவனம் நடத்தி வருகிறது.

    இதேபோல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நிலையான வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவும் இந்த நிறுவனம் தன்னை அர்ப்பணித்து அதுதொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.

    அந்த வரிசையில் ஆரோக்கியமான மற்றும் சத்துகள் நிறைந்த சுவையான உணவுகளை சமைப்பது எப்படி? என்பது குறித்த கருத்தரங்கத்தை சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள பேரோஸ் ஓட்டலின் 'அலெக்சாண்ட்ரியா டாவெர்ன்' உணவு விடுதியில் நேற்று நடத்தியது. 

    இந்த கருத்தரங்கத்துக்கு நேச்சுரலே நிறுவனத்தின் நிறுவனர் சம்யுக்தா ஆதித்தன் தலைமை தாங்கினார். இதில் நடிகர் அரவிந்த்சாமியின் மகளும், புகழ்பெற்ற உணவு ஆலோசகரும், சமையல் கலை நிபுணருமான அதிரா முன்னிலை வகித்தார்.

    சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் மிகவும் கவனம் செலுத்துவதோடு, சுவை மற்றும் நேரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல், ஆரோக்கியமான உணவுகளை சமைப்பது குறித்த செயல்முறையை சுவாரஸ்யமாகவும், அழகாகவும் எடுத்துரைப்பதுதான் இந்த கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது.

    அதன்படி, சமையல் கலை நிபுணர் அதிரா, ஆரோக்கியமான, சத்துகள் நிறைந்த சுவையான உணவுகள் தயாரிப்பு குறித்த சமையல் விளக்கத்தை கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு கூறியதோடு, சமைத்தும் காட்டினார். 

    பின்னர், அலெக்சாண்ட்ரியா டாவெர்ன் உணவு விடுதி சமையல் கலைஞர்கள் மற்றும் உணவு ஆலோசகரும், சமையல் கலை நிபுணருமான அதிரா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் கருத்தரங்கில் உள்ளவர்களுக்கு பகிரப்பட்டன. அதனை அவர்கள் அனைவரும் ருசி பார்த்து, உணவின் சுவைக்காக பாராட்டும் தெரிவித்தனர்.

    மேலும், கருத்தரங்கில் ஆரோக்கியமான உணவு சமையல் குறித்த கேள்வி, பதில் அமர்வும் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற ஆர்வலர்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சில நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. அதுமட்டுமல்லாமல், இதில் பங்கேற்றவர்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    • காலநிலை பாதிப்புகள் அடுத்துவரும் சந்ததிகளுக்கு பிரச்சினையை உண்டாக்கும்.
    • விருதுநகர் சுற்றுச்சுழல் கருத்தரங்கில் தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் சுற்றுச் சுழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், காலநிலை மாற்றம் இயக்கம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது. தமிழ்நாடு கால நிலை மாற்ற இயக்கம் உதவி இயக்குநர் மணிஷ்மீனா, துணை இயக்குநர் (ஸ்ரீவில்லி புத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திலீப்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி னார். கருத்தரங்கில் கலெக் டர் மற்றும் அதிகாரிகள் பேசினர்.

    அதில் இந்தியரின் சரா சரி ஆயுட்காலம் 73 ஆண்டு கள். இந்தியாவின் டெல்லி போன்ற நகரங்களில் ஒரு மனிதனின் சராசரி ஆயுட்கா லம் காற்று மாசால் 6 ஆண்டு கள் குறைகிறது என ஆய்வு கள் தெரிவிக்கின்றன. 2050 ஆம் ஆண்டில் 4-ல் 3 பங்கு மக்கள் நகரங்கள் மற்றும் நகரங்கள் ஒட்டி பகுதிகளில் தான் வசிப்பார் கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நகரத்தின் மீது அவற்றின் இயற்கை வளங்களின் மீது நாம் தரக் கூடிய அழுத்தம் என்பது மிக அதிகமாக இருக்கின்றது. இட நெருக்கடி, சுற்றுச்சூழல், தனிமனித சுகாதாரத்தை ஒட்டி வரக்கூடிய பிரச்சி னைகள் அதிகமாகும். மேலும், வெப்பநிலை படிப் படியாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் நகரமயவாவதில் முன்னி லையில் இருப்பது தமிழ்நாடு தான்.காலநிலை மாற்றத் தால் கடல் மட்டத்தில் இருந்து வெப்பம் அதிகமாக வருவதால் பலத்த காற்றுடன் வெப்ப சலனம் மழை அதிக மாக உள்ளது. சில இடங் களில் பருவமழை பொய்த்து தண்ணீருக்காக அதிக நேரம் செலவிட வேண்டிய நிலை யும் உள்ளது.இந்த பிரச்சினைகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், நம் அடுத்த சந்ததிகளுக்கு இது மிகவும் பெரிய பிரச்சனைகளை உண்டாக்க வழி வகுத்திடும்.

    இந்தியா போன்ற அதிக மான மக்கள் தொகை வாழக்கூடிய நாடுகளில் இது குறித்து அதிகமாக பேசு வதற்கும், சிந்திப்பதற்கும் மிக முக்கியமான தேவை இருக்கிறது. இதை அனை வருக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இது போன்ற கருத்தரங் குகள் நடைபெறுகிறது.

    இவ்வாறு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராம்ராஜ், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், ஆசிரி யர்கள், மாணவர்கள் உள் பட பலர் கலந்து கொண்ட னர்.

    • மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தலைமைதாங்கினார்
    • தனிமனித வாழ்க்கையில் கூட்டுறவு குறித்து அதிகாரிகள் பேச்சு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கி வருகிற 20-ந்தேதிவரை நடக்க உள்ளது. இதன் 3-வது நாள் நிகழ்ச்சி கூட்டுறவு விற்பனை சங்க மண்டபத்தில் நடந்தது.

    அப்போது கூட்டுறவு அமைப்புகளை கணினிமயமாக்குதல்-மேம்படுத்துதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தலைமைதாங்கினார்.

    ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வக்கீல் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், வாழ்வியல் மற்றும் தனிமனித வாழ்க்கையில் கூட்டுறவு மற்றும் அரசியலமைப்பு சட்டம் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.

    நிகழ்ச்சியில் சரக துணைப்பதிவாளர் ரா.மது, நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியரும், கூட்டுறவு சார்பதிவாளருமான அய்யனார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பங்கேற்பு
    • நிகழ்ச்சிகளை பள்ளி இயற்பியல் முதுகலை ஆசிரியைஜேன் சில்வியா தொகுத்து வழங்கினார்.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் "சட்டமன்ற நாயகர்- கலைஞர்" விழா குழு சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் சபாநாயகரும் "சட்டமன்ற நாயகர்- கலை ஞர்" விழா குழு உறுப்பின ருமான ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளர் நாகராஜன் முன்னிலைவகித்தார்.

    பள்ளி தலைமை ஆசிரியை பேபி வர வேற்றுப் பேசினார். விழா வில் தமிழக சட்டமன்ற பேரவை முன்னாள் செயலாளர் செல்வராஜ் சிறப்புரையாற்றினார்.

    விழாவில் மாணவி சுஷ்மா "கலைஞரின் திட்டங்களும் சாதனை களும்" என்ற தலைப்பிலும், மாணவி அபிநயா "கலைஞர்ஒரு சகாப்தம்" என்ற தலைப் பிலும், மாணவிதேவி சாதனா "கலைஞரின் திட்டங்கள்" என்ற தலைப் பிலும் மாணவி பிரபா ஏஞ்சல் "கலைஞரின் சட்டமன்ற சாதனைகள்" என்ற தலைப்பிலும், மாணவி சந்தியா "கலைஞரின் சாதனைகள்" என்ற தலைப்பிலும் பேசினார்கள். இதில் மாணவி அபிநயாவுக்கு முதல் பரிசும் மாணவி சந்தியாவுக்கு 2-வது பரிசும் மாணவி பிரபா ஏஞ்சலுக்கு 3-வது பரிசும் கிடைத்தது.

    பரிசு பெற்ற இந்த மாணவிகளுக்கு முன்னாள் சபாநாயகர் ஆவுடை யப்பன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டமுதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மோகன், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செய லாளரும் முன்னாள் பேரூ ராட்சி வார்டு கவுன்சிலரு மான வைகுண்ட பெரு மாள், மாநில தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ் குமார் ஆதித்தன், பேரூர் தி.மு.க. அவைத் தலைவர் சுப்பையா பிள்ளை, மாவட்ட தி.மு.க. பொறி யாளர் அணி துணை அமைப்பாளர் தமி ழன்ஜானி, கிருஷ்ண

    குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடி வில் சட்டமன்ற பேரவை இணை செயலாளர் பாண்டியன் நன்றி கூறி னார்.

    நிகழ்ச்சிகளை பள்ளி இயற்பியல் முதுகலை ஆசிரியைஜேன் சில்வியா தொகுத்து வழங்கினார்.

    • ஜெயங்கொண்டம் வரதராஜன்பேட்டையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
    • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையில் மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களிடையே ஊழல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டி.எஸ்.பி. சந்திரசேகர் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.மேலும் கல்லூரி மாணவிகள் ஊழல் தடுப்பு பற்றி கேள்விகள் எழுப்பியபோது, அதற்கு டி.எஸ்.பி. சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் விளக்கம் அளித்தனர். சிறப்பாக திறமையாக கேள்வி கேட்ட மாணவிகளை டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.இறுதியில் பள்ளி மாணவிகள் லஞ்சம், ஊழலுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மதர் ஞானம்மா கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் அமைச்சர் ரகுபதி பங்கேற்று பேசினார்.
    • பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட் அனைவரையும் வரவேற்றார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்கம் நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ., முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, நகர்மன்ற தலைவர் புகழேந்தி, கூட்டுறவு சங்க முன்னாள் இயக்குனர் உதயம் முருகையன், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர். சுந்தரராஜன், ஆத்மா குழு உறுப்பினர் மகாகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட் அனைவ ரையும் வரவேற்றார். தொடர்ந்து, பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழும், ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.

    • தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார்

    ஓசூர்,

    ஓசூர் எம்ஜிஆர் கல்லூரியில் பி.காம். (கணினி பயன்பாட்டியியல்) துறை சார்பில் "இன்றைய நவீன யுகத்தில் வணிக நிலைப்புத் தன்மை மற்றும் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார். துறைத் தலைவர் வெங்கடே சன் வரவேற்று பேசினார். இதில் புதுச்சேரி பல்கலைக் கழகத்திலிருந்து, இணைப் பேராசிரியர் பாண்டு, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் வணிக நிலைத்தன்மை அதில் ஏற்பட்ட மாற்றங்கள் , புதிய தொழில் வாய்ப்புகள் , கண்டுபிடிப்புகள், தொழில் வளர்ச்சிப் பற்றி விளக்கி பேசினார்.

    மேலும் இதில், பிற கல்லூரியில் இருந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரை களைச் சமர்ப்பித்து பேசினர்.

    இந்த கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை, கணினி பயன்பாட்டியியல் துறை உதவி பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.முடிவில் உதவி பேராசிரியர் ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.

    ஜெயங்கொண்டம் எம்.ஆர்.சி. கல்லூரியில்கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம்

    ஜெயங்கொண்டம்,  

    அரியலூர் மாவட்டம்எம்.ஆர்.சி. கல்லூரியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம், தத்தனூர் எம்.ஆர்.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நடைபெற்றது.

    ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன்,அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் ரகுநாதன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கலைஞர் கருணாநிதியின் பல்வேறு சாதனைகளைப் பற்றி விளக்கி பேசினார். அவருடைய போராட்டத்தில் அரியலூர் மாவட்டம் முக்கிய சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது என பேசினார்.

    இந்நிகழ்வில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உடையார்பாளையம் கோட்டாட்சியர் ச.பரிமளம், தாசில்தார்கள் துரை, கலைவாணன், மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா,தஞ்சாவூர் மண்டல கல்லூரி இணை இயக்குநர் தனராஜ் மற்றும் அரசு அலுவலர்கள்,பேராசிரியர்கள், இருபால் மாணவ,மாணவிகள்,கட்சி தோழர்கள் கலந்துகொண்டனர்.

    கரூர் அரசு கல்வி நிறுவனங்களின் வளாகத்தில்தகவல் உரிமை சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் மண்ம ங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பாக கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் குளோபல் சமூக நல பாதுகாப்பு இயக்கம், இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு இணைந்து தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கு கல்லூரி கலை யரங்கில் நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணை வேந்தர் துணைக் குழு உறுப்பினர் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் தலைவர் முனைவர் நடேசன், தாளாளர் கோதை நடேசன், செயலாளர் வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளோபல் சமூகநல பாதுகாப்பு இயக்க மாநில செயலாளர் சங்கர் வரவேற்றார்.

    கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கௌசல்யா, குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்க மாநிலத் தலைவர் டாக்டர் சொக்கலிங்கம், குளித்தலை கிராமியம் இய க்குனர் டாக்டர் நாராயணன், இலங்கை தமிழர் நலன் தனி வட்டாட்சியர் நேரு ஆகி யோர் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பேசினர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவ ருக்கும் சட்ட கையேடு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.முடிவில் கல்லூரியின் குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரமாபிரியா நன்றி கூறினார்.

    • அரியலூர் அடுத்த சிறு வளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது
    • முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்க லாம் பிறந்த நாளை முன்னிட்டு கருத்தரங்கம்

    அரியலூர், 

    முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்க லாம் பிறந்த நாளை முன்னி ட்டு அரியலூர் அடுத்த சிறு வளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிக ழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்ன துரை தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் செந்தி ல்குமரன் அனை வரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரி யர் தனலட்சுமி நன்றி தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செவ்வேள், இளநிலை உதவி யாளர் மணிகண்டன், பயிற்சி ஆசிரியர்கள் கண்ணகி, சரண்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் தடய அறிவியல் கருத்தரங்கம் நடந்தது.
    • முன்னேற்றங்கள் பற்றி கம்ப்யூட்டர் ஸ்லைடுகள் மூலம் எடுத்துரைத்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தடய அறிவியல் துறை சார்பில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற "பாரன்சிக் பீயூசன்-2023" என்ற ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் பொருளா ளர் சகிலா ஷா ஆகியோரது ஆலோசனையின் பேரில் நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக அரசு மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் ஹசன் சாதலி கலந்து கொண்டு பேசுகையில், தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் குற்றங்களும் தொழில்நுட்ப ரீதியாக பெருகிவிட்டபடியால், தடய அறிவியல் துறையினரின் தேவை அதிகமாக உள்ளது.

    சைபர் கிரைம் போன்ற குற்ற வழக்குகளை துப்பு துலக்குவதற்கு தடைய அறிவியல் துறை சார்ந்த நிபுணர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். ஆகவே மாணவர்கள் தடய அறிவியலின் அனைத்து துறையிலும் நிபுணத்துவம் பெற வேண்டும் என்றார்.

    முன்னதாக தடய அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் சீனிவாசன் வரவேற்றார்.

    மதுரை மருத்துவக் கல்லூரி தடய அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசி ரியர் டாக்டர் சதாசிவம், தியாகராஜர் கல்லூரி வேதியியல் பேராசிரியர் டாக்டர் சாய் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த தற்போதைய முன்னேற்றங்கள் பற்றி கம்ப்யூட்டர் ஸ்லைடுகள் மூலம் எடுத்துரைத்தனர்.

    பின்னர் சிறந்த ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்த வர்களுக்கும், போஸ்டர்கள் மூலம் சிறந்த விளக்கத்தினை அளித்த மாணவ-மாணவிக ளுக்கும் பரிசுகள் வழங்கப் பட்டன.

    நிகழ்ச்சியை 3-ம் ஆண்டு மாணவி வர்ஷா மற்றும் அஸ்மா பாத்திமா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் நிவேதிதா மனோகரன், ஜிஞ்சு மரியம் இமானுவேல், வினிஸ்மா, பிரிசில்லா ஜோஸ்லின் டேனியல், ஜெயஸ்ரீ, கங்கா பிரசாத், அலி பாத்திமா, ஐஸ்வர்யா ஆகியோர் தலைமையில் மாணவ- மாணவிகள் செய்திருந்தனர். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 85 பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உட்பட 400 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பேராசிரியர் பிரிசில்லா நன்றி கூறினார்.

    ×