search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமை தொகை"

    • ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகள் ஊராட்சி செயலர் மூலம் வாசிக்கப்பட்டது.
    • அதிகாரிகளிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறி கடும் வாக்குவாதம் செய்தனர்.

    மாமல்லபுரம்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் பொன்னையா பங்கேற்றார். ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகள் ஊராட்சி செயலர் மூலம் வாசிக்கப்பட்டது. பின்னர் வந்திருந்த மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

    அப்போது மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப் பட்ட ஏராளமான பெண்கள் திடீரென கிராம சபை கூட் டம் நடைபெறும் இடத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த அதிகாரி களிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறி கடும் வாக்குவாதம் செய்தனர்.

    அவர்களிடம் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு வந்ததால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை பெற 2.25 லட்சம் பேர் பதிவு செய்தனர்
    • இதுவரை 3.30 லட்சம் விண்ணப்பங்கள் வழ ங்கப்பட்டுள்ளன.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டத்தில் 1,207 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 7 லட்சத்து 67 ஆயி ரத்து 316 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கடை க்காரர்கள் மூலம் 2 கட்ட மாக மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான விண்ண ப்பம், டோக்கன் வழங்க ப்பட்டது. இதுவரை 3.30 லட்சம் விண்ணப்பங்கள் வழ ங்கப்பட்டுள்ளன. இதற்காக நடந்த பதிவேற்ற முகா ம்களில் இதுவரை 2.25 லட்சம் பேர் மட்டுமே பதி வேற்றம் செய்துள்ள னர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதா வது:- பதிவேற்றம் செய்ய ப்பட்ட விண்ண ப்பங்கள், மாநில அரசு தனி சாப்ட்வேர் மூலம் பரிசீ லனை செய்து, தகுதியான நபர்கள் மற்றும் தகுதி இல்லாத நபர்களுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் குறு ஞ்செய்தி அனுப்பி உள்ளது. அந்த விவரங்கள் இது வரை மாவட்டங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அப்பணி முழுமையாக நிறைவு செய்த பின் எவ்வ ளவு பயனாளிகள் தகுதி யானவர்கள் என்ற விவரம் தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • பயனாளிகளின் விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை என்றால் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் வழியாக ஒருமுறை ஓ.டி.பி. பெறப்படும்.
    • விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டிருந்தால் அந்த செல்போனை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்ப பதிவை எளிமைப்படுத்தும்

    தருமபுரி,  

    தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதல் கட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம் கடந்த 24- ந்தேதி முதல் தொடங்கி வருகிற நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த 28- ந்தேதி வரை 1 லட்சத்து 61 ஆயிரத்து 655 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் கட்ட முகாமில் டோக்கனில் குறிப்பிட்ட நாளில் வராமல் விடுபட்டு இருப்பவர்கள் மற்றும் விண்ணப்பம் பெறாமல் விடுபட்ட நபர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் நடைபெறும் விண்ணப்ப பதிவு முகாமிற்கு வந்தால் போதுமானது. இடைப்பட்ட நாட்களில் முகாமிற்கு வர தேவையில்லை.

    இந்த நிலையில் 2-ம் கட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம் வருகிற 5-ந் தேதி முதல் தொடங்கி 16- ந்தேதி வரை நடைபெறுகிறது. ரேஷன் கடை பணியாளர் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக வழங்குவார். இதனிடையே தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான 2- ம் கட்ட முகாமிற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

    பொதுமக்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும்.

    விண்ணப்பத்துடன் எந்த வித ஆவணங்களையும் நகலெடுத்து இணைக்க தேவையில்லை. விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும் நடைபெறும்.

    இந்த முகாமில் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை என்றால் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண் வழியாக ஒருமுறை ஓ.டி.பி. பெறப்படும்.விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டிருந்தால் அந்த செல்போனை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்ப பதிவை எளிமைப்படுத்தும். இந்த திட்டத்தில் பயன் பெற 21 வயது நிரம்பிய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனுடைய தர்மபுரி நகரில் 15 ரேஷன் கடைகள் மூலம் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. அந்தந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சம்பந்தப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர் நேரில் சென்று விண்ணப்பம் மற்றும் லோகங்கள் வழங்கினர்.

    இதற்கான முகாம்கள் வருகிற 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நகரில் தேர்வு செய்யப்பட்ட 15 இடங்களில் நடைபெற உள்ளது.

    • ராஜபாளையம் தொகுதியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்ப பதிவேற்ற முகாம் நடந்தது.
    • இதனை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம்

    முதல்-அமைச்சரின் சிறப்பான திட்டமென பொதுமக்களின் வரவேற்பு பெற்றுவரும் திட்டமான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளின் விண்ணப்ப படிவங்கள் இணைய தளத்தில் சரியாக பதி வேற்றம் செய்யப்படுகிறதா? என்பதை ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் கிராமம் கிராமாக சென்று தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

    முகவூர் ஊராட்சி காமராஜ் திருமண மண்டபத்தி லும், முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜ் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், சுந்தரராஜபுரம் ஊராட்சி சமுதாயக்கூடத்திலும் நடைபெற்றுவரும் முகாம்க ளுக்கு அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. கூறுகையில், முதல்-அமைச்சரின் இந்த திட்டம் பொதுமக்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. இத்திட்டம் மூலம் கோடிக் கணக்கான பெண்கள் பயன் பெற உள்ளதாக கூறினார்.

    அப்போது அங்கு வந்த அழகம்மாள் என்பவர் முதல்-அமைச்சரின் திட்டத்தை குலவையிட்டு வாழ்த்தினார்.

    ஆய்வின்போது ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், வட்டாட்சியர் ராமச்சந்திரன் வட்டார வழங்கல் அலுவலர் தன்ராஜ், காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி, கிளை செயலாளர்கள் தொந்தியப்பன், கனகராஜ், மாடசாமி ஒன்றிய இளைஞ ரணி அமைப்பாளர் சுரேஷ், ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக புதிய கணக்கு தொடங்க கூட்டுறவு வங்கியில் பெண்கள் திரண்டனர்.
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருச்சுழி

    தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக அரசு அறிவித்தபடி கடந்த சில நாட்களாக ரேசன் கடைகள் மூலமாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வந்தது. மேலும் பொது மக்களின் தேவையற்ற அலைச்சலை தவிர்க்கும் பொருட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட போதே டோக்கனில் முகாமிற்கு செல்லும் நாள், டோக்கன் எண் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்கினால் தான் கலைஞர் உரிமை தொகை பெற முடியும் என ரேசன்கடை ஊழியர்கள் விண்ணப்பம் வழங்கும்போதே கூறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    அதனடிப்படையிலேயே மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நரிக்குடி கிளை யில் நேற்று கணக்கு தொடங்க ஒரே நேரத்தில் பொதுமக்கள் கூட்டமாக திரண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் விண்ணப்ப பதிவு முகாம்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் பதிவு முகாம்களிலும் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் முதல் கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம் கள் தொடங்கப்பட்ட நிலையில் ஒரே நாளில் வங்கியில் புதிய கணக்கு தொடங்கவும், டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் விண்ணப்ப பதிவு முகாம் களுக்கு சென்று பதிவுகள் செய்யவும் வேண்டியுள்ள தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    ஆனால் அதற்கான சரியான நேரம் இதுவல்ல எனவும் பொதுமக்கள் ஆலோசனை தெரிவித்தனர்.ஆகவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டருக்கு கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.
    • மொத்தம் 429 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

    ஊட்டி,

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்தவற்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று விண்ணப்பங்களை வழங்கினர்.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்வதற்கான விண்ணப்ப வினியோகம் இன்று தொடங்கியுள்ளது. பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறும் முகாம் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் 404 நியாய விலைக் கடைகளில் 2,20,473 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் 1 நியாயவிலைக்கடைக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் முதற்கட்டமாக 204 சிறப்பு முகாம்களும், இரண்டாம் கட்டமாக 200 சிறப்பு முகாம்களும் என மொத்தம் 404 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    முதற்கட்ட முகாமானது வருகிற 24-ந் தேதி முதல் 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட முகாமானது ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இப்பணியினை மேற்கொள்ள 631 இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் மற்றும் 120 ரிசர்வ் தன்னார்வலர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏற்கனவே அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும், 404 முகாம்களில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் 404 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களை உதவி மைய தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் முதற்கட்ட முகாமில் 339 நபர்களும், இரண்டாம் கட்ட முகாமில் 292 நபர்களும் இப்பணியில் ஈடுபடவுள்ளனர். அதேபோல், நமது மாவட்டத்திலுள்ள 404 நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், காவல்துறையின் சார்பில் முகாம்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்திடும் வகையில், முதற்கட்ட முகாமில் 221 காவலர்களும், இரண்டாம் கட்ட முகாமில் 208 காவலர்களும் என மொத்தம் 429 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

    குறிப்பிட்ட நாளில் வர இயலாத பொதுமக்கள் இறுதி இரண்டு நாட்களில் விண்ணப்பபடிவங்களை வழங்கலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான பணிகளை கண்காணிக்க 404 முகாம் ெபாறுப்பு அலுவலர்கள் (கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக உதவியாளர் நிலையில்), 81 மண்டல அலுவலர்கள் (துணை வட்டாட்சியர, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில், 5 முகாம்களுக்கு 1 நபர்), 27 கண்காணிப்பு அலுவலர்கள் (வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில், 15 முகாம்களுக்கு 1 நபர்), 6 வட்டங்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் (துணை ஆட்சியர் நிலையில்), ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு 19 மாவட்ட நிலை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

    பழங்குடியின மக்களை அழைத்து செல்ல தேவைப்படும் இடங்களில் வாகன வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் டோக்கனில் குறிப்பிட்ட தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை தெரிந்து கொண்டு விண்ணப்ப படிவங்களை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • செப்டம்பர் 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது
    • வீடு வீடாக விண்ணப்பம் வினியோகம்

    வேலூர்:

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் குடும்ப அட்டை வாரியாக அந்தந்த பகுதியில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட உள்ளது.

    இந்நிலையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் வினியோகம் செய்வதற்காக சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு 4 லட்சத்து 58 ஆயிரத்து 473 விண்ணப்பங்கள் வேலூருக்கு வந்தது. இந்த விண்ணப்பங்கள் 70 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் 699 ரேசன் கடைகள் உள்ளது. இந்தகடைகளில் 4 லட்சத்து 53 ஆயிரத்து 942 ரேசன் அட்டைகள் உள்ளது. இந்த குடும்ப அட்டைகள் அனைத்துக்கும் விண்ணப்பங்கள் வினியோகம் செய் யப்பட உள்ளது.

    இதற்கான விண்ணப்பங்கள் வந்துள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருந்து அந்தந்த ரேசன்கடைகளுக்கு பிரித்து அனுப்புவதற்கான பணிகள் நடக்கிறது. கடைகளுக்கு விண்ணப்பங்கள் சென்றவுடன் பொதுமக்களுக்கு வீடு வீடாக வினியோகிக்கப்படும்.

    பின்னர் நடைபெறும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. இதற்காக பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மகளிர் உரிமைத் தொகை முகாம் நடைபெறும் இடங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளி களை தேர்வு செய்வதற்காக முகாம்கள் நடத்தி விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. இதற்காக மொத்தம் உள்ள 775 நியாய விலை கடைகளில் முதற் கட்டமாக 326 நியாய விலை கடைகளில் வருகிற 24-ந் தேதி முதல் ஆக.4-ந் தேதி வரையும், 2-ம் கட்டமாக 449 நியாயவிலை கடைகளில் ஆக.5 முதல் 16 வரையும் விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்கான முகாம்கள் நடைபெற வுள்ளன.

    இந்த முகாம்கள் நடைபெறும் இடங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் குறிப்பாக இன்டர்நெட் வசதி, பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை வசதி, மின் இணைப்பு வசதி, கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வட்டவாரியாக குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.இந்த நிலையில் மூலக்கொத்தளம் மேல்நிலைப்பள்ளி முகாமில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். முன்னதாக ராமநாதபுரம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளையும் புதிய பஸ் நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    தொடர்ந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்களுக்கான பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வுகளின்போது, காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் (பயிற்சி) வி.எஸ்.நாராயண சர்மா, நகர்மன்ற தலைவர் கார்மேகம், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.டி.பிரபாகரன், நகராட்சி ஆணையாளர் அஜீதா பர்வீன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசு, சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ், பெண்கள் உரிமைத் தொகை திட்டம் செயல் படுத்த, விரிவான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகள் அருகே, உரிய விண்ணப்பப் பதிவு முகாம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழக அரசு, சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ், பெண்கள் உரிமைத் தொகை திட்டம் செயல் படுத்த, விரிவான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியை, நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திடும் வகை யில், அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய, மாவட்ட மற்றும் வட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகள் அருகே, உரிய விண்ணப்பப் பதிவு முகாம்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பங் களை , முகாம் ஆரம்பிக்கும் நாட்களுக்கு முன், நேரடை யாக ரேசன்கார்டுதாரர்கள் வீட்டிற்கே சென்று, முகாமிற்கு வரவேண்டிய நாள், நேரம் குறித்து விற்பனையாளர் பதிவு செய்து வழங்குவார்கள்.

    முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, அந்தந்த குடும்பத்தலைவியே, அவருக்கு குறிப்பிட்ட நாளில் விண்ணப்ப முகா மில் ஆதார் அட்டை, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண், ரேசன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின் கட்டண ரசீது ஆகிய வற்றுடன் சமர்ப்பித்து கைவிரல் ரேகை பதிவுகள் மூலம் பதிவுகள் செய்ய வேண்டும்.அனைத்து முகாம்களி லும் போலீசார் மூலம் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை தடுக்க நடவ டிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகை யில் அனைத்து தாலுகா அலுவல கங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

    கலெக்டர் அலுவல கத்தில் 1800 425 1997, நாமக்கல் தாலுக்கா அலுவ லகம்-04286 233701, ராசிபுரம்- 04287-222840, சேந்தமங்கலம்- 04286-271127, கொல்லிமலை- 63792-85667, மோகனூர்-04286-297768, திருச்செங்கோடு- 04288-253811, ப.வேலூர்- 04268-250099, குமாரபாளையம்- 04288-264546 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், விண்ணப்பப் பதிவு முகாம்கள், 2 கட்டங் களாக நடத்தப்படுகிறது. காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். ஞாயிற்றுக் கிழமைகளிலும் முகாம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது.
    • சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை ெதாகை வழங்கும் திட்டத்துக்கான பூர்வாங்க நடவ டிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை அறிவித்து, அதனை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரு கிறது. சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை ெதாகை வழங்கும் திட்டத்துக் கான பூர்வாங்க நடவ டிக்கை கள் தொடங்கப்பட்டுள்ளன.

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநகராட்சி பகுதியில் 188 ரேசன் கடைகளும், கிராம ஊராட்சிகளில் 1,093 ரேசன் கடைகளும், பேரூராட்சிகளில் 126 ரேசன் கடைகளும் மற்றும் நகராட்சிகளில் 134 ரேசன் கடைகளும் என மொத்தம் 1,541 ரேசன் கடைகள் உள்ளன.

    500 ரேசன் கார்டுகள் உள்ள கடைகளுக்கு ஒரு பதிவு மையம், 600 ரேசன் கார்டுகள் உள்ள கடைகளில் 2 பதிவு மையம், 1000 முதல் 1500 ரேசன் கார்டு உள்ள கடைகளில் 3 பதிவு மையம், 1500-க்கும் மேற்பட்ட ரேசன் கார்டுகள் உள்ள கடைகளில் 4 பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    சேலம் மாவட்டத்தில் முதல் கட்டமாக வருகிற 24-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி வரை விண்ணப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. 2-வது கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை, 3-வது கட்ட முகாம் ஆகஸ்டு 17-ந்தேதி தொடங்கும். ரேசன் கார்டு தாரர்கள் அனைவருக்கும் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படும். விண்ணப்பப்பதிவு அரசின் சார்பில் மேற்ெகாள்ளப்படு வதால் கட்டணம் ஏதும் கிடை யாது. இடைத்தரகர்களை யாரும் நம்ப வேண்டாம்.

    நாளொன்றுக்கு 30 முதல் 50 பேரின் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட உள்ளது. வருவாய்த்துறை, கூட்டு றவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட அனைத்து துறை அலுவலர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இந்த தகவலை கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    ×